Sunday, September 30, 2007

ராமன் பாலம் - தமிழகத்தை குஜராத்தாக மாற்ற முயலும் இந்துமதவெறியர்கள்

குஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக்கி இந்துமதவெறியாட்டம் போட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் தமிழ்நாட்டையும் குஜராத்தாக மாற்றிடத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். கலவரத்தைத் தூண்டிவிட அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள விசயம்தான் 'ராமன் கட்டிய பாலம்'. இந்து மதவெறிக்கும்பலின் இச்சதித் திட்டத்திற்கு கூட்டாளிகளாக காங்கிரசு,அதிமுக உட்பட பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகளும் இன்றைக்குக் கைகோர்த்து நிற்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடே இந்துமதவெறிப் பாசிசத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு வரும் இந்தியாவில் இருந்து சுரண்டப்படும் செல்வத்தை அதிவிரைவாக எடுத்துச் செல்வதற்கென்றே உருவாக்கப்படுபவைதான், துறைமுகங்களை உள்நாட்டுடன் இணைக்கும் நாற்கரச் சாலைகளும், சேதுக்கால்வாய் திட்டமும் என்பதனை நாம் ஏற்கெனெவே சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

அந்நியனுக்கு சேவை செய்ய என்றே உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டத்திற்காக 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே' என வெறிக்கூச்சல் போடுதன் மூலம், தமிழ்நாட்டை, குஜராத் போன்ற கலவரபூமியாக்க இந்து பாசிசக் கும்பல் பலமுனைகளிலும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.

பாக் நீர்ச்சந்தியில் தற்போது ஆழப்படுத்தப்பட்டு வரும் பகுதியில் 'இந்துக்களின் புராதனச் சின்னமான இராமர் பாலத்தை இடிப்பதைத் தடுக்க வேண்டுமென'க் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சாமி உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசின் தரப்பில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில், ராமர் பாலம் எனும் பகுதியானது இயற்கையாக உருவான மணல் திட்டுதான் என்றும், ராமர்,ராமாயணக் கதாபாத்திரங்களுக்கும், ராமர்-ராவண யுத்தத்திற்கும் சான்றுகள் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தது.

உடனே பாஜகவில் இருந்து விஷ்வ இந்து பரிசத் வரை இந்து பாசிசக் கும்பல் 'மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள், தெய்வ நிந்தனை; இந்துக்களின் மத நம்பிக்கை மீதான தாக்குதல்' என்றும் இதற்காக ஆளும்கட்சி மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் கூச்சல் போட ஆரம்பித்தது.

மதவெறி மூடத்தனம், பாஜகவுக்கு மட்டும்தான் சொந்தமா? எனப் போட்டி போட்டுக்கொண்டு 'ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவித்து, சேதுக்கால்வாய் திட்டத்தில் இருந்து பாலத்தைக் காக்க வேண்டும்' என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றம் சென்றார், திராவிட இயக்கத்தின் புதிய பரிணாம வளர்ச்சியான, ஜெயலலிதா.

தொல்லியல் ஆய்வுத்துறை , அறிவியல்பூர்வமாகச் செயல்பட வேண்டிய தனது கடமையைச் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத பாசிஸ்ட் ஜெயலலிதாவோ 'ராமர் பாலத்தை இயற்கையாய் உருவானது என்று சொல்லியதன் மூலம் மதச்சார்பற்ற அரசு எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் தகுதியை மத்திய அரசு இழந்து விட்டதாக'த் திமிரோடு பேசினார். ராமர் பாலம் கட்டியதாகச் சொன்ன அண்டப்புளுகைத் தோலுரிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானதாம். மதச்சார்பின்மையின் அர்த்தத்தையே புரட்டிப்போடுகிறார், தன்னைப் 'பாப்பாத்தி' எனப் பெருமையோடு அறிவித்துக்கொண்ட இந்துமதவெறி ஜெயா.

இந்த எதிர்ப்புகளை சாக்காக வைத்து, ஒரே நாளில் காங்கிரசு அரசு பல்டி அடித்து, தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து ராமர் பற்றிய பகுதிகளைத் திரும்பப்பெற்றுக் கொண்டது. அறிக்கை தயாரித்த அதிகாரிகள் இருவரை இடை நீக்கம் செய்தது.

அத்துடன் நில்லாமல் காங்கிரசுக் கட்சி தனது சட்ட அமைச்சர் பரத்வாஜ் எனும் பார்ப்பனரின் வாயாலேயே "இமயமலை இமயமலைதான்.கங்கை கங்கைதான்.ராமர் ராமர்தான்.இதற்கெல்லாம் ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை.இந்துக்களின் வாழ்வில் ராமர் பிரிக்க முடியாத ஓர் அங்கம். இது விவாதிக்க வேண்டிய விசயமில்லை" என ஒரே போடாகப் போட்டு, தாமும் இந்து மதவெறிக் கட்சிதான் என்பதை நிரூபித்துள்ளது. காங்கிரசின் இந்து மதவெறி இப்படி அப்பட்டமாக வெளிப்பட்ட பின்னரும் கூட சிபிஎம்-மும், சிபிஐயும் இன்னமும் காங்கிரசுக் கயவாளிகளை மதச்சார்பற்ற சக்திகள் எனக் கூறிக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்றன.

பாஜக,காங்கிரசு,அதிமுக வரிசையில் 'இந்துக்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது' என்று தேமுதிகவும், புதிய கடை ஆரம்பித்து அரசியல் வியாபாரம் ஆரம்பித்திருக்கும் சரத்குமார், விஜய டி ராஜேந்தர் வரை அனைத்து கழிசடைகளும் இந்து மதவெறி சாக்கடையில் புரள ஆரம்பித்து விட்டனர். அதாவது பாலம் உருவான அறிவியல் உண்மையைக் கூறினால் அது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விடுமாம். பிற்போக்குவாதிகளான இவர்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் காம்ரேடுகளும் அதே கழிசடைச் சிந்தனையை வேறு வார்த்தைகளில் 'மத்திய அரசு அறிக்கையை திரும்பப்பெற்றது சரியான செயல்தான்' என்றும் 'பிரச்சினைக்கு சம்பந்தமில்லாமல் ராமர்,ராமாயணத்தை குறித்து எல்லாம் கருத்துத் தெரிவித்தது சரியல்ல' என்றும் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

அறிவியல்பூர்வமான சிந்தனையை வளர்த்தெடுத்து, சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிவதே உண்மையான கம்யூனிஸ்ட்டுகளின் கடமையாகும். ஆனால் தொல்லியல்துறை அறிக்கையை எதிர்ப்பதன் மூலம், ராமர் பால மூடக்கதைக்குத் துணை போய், சிபிஎம்மும் மதவெறியைத்தாண் ஆதரிக்கின்றது. பின்னர் எதற்கு இவர்கள் இன்னமும் தங்கள் கட்சியின் பெயரில் கம்யூனிஸ்ட் எனும் வார்த்தையை ஒட்ட வைத்துள்ளார்கள்?

வட இந்தியா எங்கிலும் ராமர்-ஜென்ம பூமி, ரத யாத்திரை என்ற தந்திரங்கள் மூலம் தனது அடித்தளத்தை அமைத்துக்கொண்ட சங்க பரிவாரத்திற்கு தென்னிந்தியாவில் வேரூன்ற சரியான முகாந்திரத்தை ராமன் பாலம் கதை தந்திருக்கிறது. தமிழகத்தில் தனது இயக்கத்தைக் கட்டுவதில் சிரமம் இருக்கிறது என்பதை பிரவீண் தொகாதியாவே ஒத்துக்கொள்கிறார். அதற்காக வெகு நுட்பமாகத் திட்டமிட்டு மதவெறியைப் பரப்புவதில் சங்கபரிவாரம் முயற்சிக்கிறது.

எழுபதுகளில் இருந்து விவேகானந்தர் பாறை, மண்டைக்காடு கலவரம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்ற தந்திரங்கள் மூலம் பையப் பைய வேர் பிடித்து வரும் இந்து மத வெறி கும்பல் ராமன் பாலம் சர்ச்சையைக் கிளறி விட்டு தமிழகத்தை இன்னொரு குஜராத்தாக மாற்ற முயற்சிக்கிறது.

இதனைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்ல யாகங்கள், பூசைகள் செய்வதுடன் மக்களைத் திரட்டிப் போராடுவதும், நீதிமன்றங்கள் மூலம் பிரச்சாரம் என்று மும்முனைத் திட்டம் வகுத்து செயல்படுகிறது.
முன்னாள் தேர்தல் கமிசனர் கிருஷ்ணமூர்த்தி, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சுந்தரம் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்து ராமர் பாலத்தைக் காக்க மாநாடுகள், உண்ணாவிரதங்கள், சாலை மறியல் என்று முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.

இதற்காக தினசரி ஒரு புளுகை அவிழ்த்து விட்டு வருகிறார்கள். இலங்கையின் நிலப்பரப்பு குறுக்காக அமைந்திருப்பதால்தான் மன்னார் வளைகுடாவை சுனாமி தாக்கவில்லை எனும் அறிவியல் உண்மையை மறைத்து, 'ராமர் பாலம்தான் தென் தமிழகத்தை சுனாமியில் இருந்து காத்தது' என்று கதை அளந்தார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தால் அடுத்த 1000 வருசங்களுக்கு தேவைப்படும்-அங்கு புதைந்து கிடக்கும்- தோரியம் கரைந்து விடும் என அரைகுறை அறிவியலைக் கலந்து பிரச்சாரம் செய்தார்கள். அப்பகுதியில் தோரியம் இருப்பது உண்மையாகவே இருப்பினும், தோண்டாமலே தோரியத்தைப் பிரித்தெடுக்க இயலுமா? மேலும், கரைந்து போக, தோரியம் என்ன உப்பா,சர்க்கரையா?

தனது முட்டாள்தனமான கதைக்கு எதை வேண்டுமானாலும் பேசலாம் எனக் கருதிக்கொண்டு, தோரியக்கதையில் சர்வதேசப் பிரச்சினையையும் சேர்த்து பிரச்சாரம் செய்தார்கள். "இந்தியாவுக்கு தேவையான தோரியத்தை கிடைக்கவிடாமல் செய்ய ராமர் பாலத்தை இடிக்க அமெரிக்கா சதி செய்கிறது" என்று விஷ்வ இந்து பரிஷத் அமெரிக்க எதிர்ப்பு வேசம் கட்டிப் பார்த்தது.

அமெரிக்க சதி பற்றிப் பேசும் இவர்கள், சேதுக்கால்வாய்க்குள் அமெரிக்கக் கப்பல்கள் நுழையக்கூடாது என்று என்றைக்குமே போராடப் போவதில்லை. போராடுவது கிடக்கட்டும். நிமிட்ஸ் கப்பல் சென்னையில் நங்கூரம் பாய்ச்சி, கோடம்பாக்கத்துத் துணைநடிகைகளுடன் காமக்களியாட்டங்களில் ஈடுபட்ட அமெரிக்க வீரர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்தபோது இந்த அமெரிக்க எதிர்ப்புப் போராளிகள் எங்கே புடுங்கிக் கொண்டிருந்தார்கள்?

இந்துமத வெறி பாஜகவால் ஆரம்பிக்கப்பட்டு, காங்கிரசால் முழுமையாக்கப்பட்டு உள்ள அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்ட்கள், தோரியத்தை கிடைக்கவிடாமல் அமெரிக்கா சதி செய்வதாகப் புளுகுகிறார்கள்.

'ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது' என்கிறார் இல.கணேசன்.இதே 'நம்பிக்கை' வாதத்தைத்தான் பாபர் மசூதி விவகாரத்திலும் சொன்னார்கள். பால்யவிவாகமும் நம்பிக்கைதான். உடன்கட்டை ஏறுதலும் நம்பிக்கைதான். தீண்டாமையும் இந்துக்களின் நம்பிக்கைதான். அவற்றை எல்லாம் எதிர்த்தால் இந்துக்களின் மனம் புண்படுமே என்று கருதி இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு சொறிந்து கொடுக்கவா முடியும்?

தமிழ்நாட்டில் தனது சதிச்செயலை அரங்கேற்ற போதுமான அடியாள் படை இல்லாததால் வேறு மாநிலங்களில் இருந்து இந்துமதவெறியர்களை இறக்குமதி செய்து மாநாடுகளை நடத்துகின்றனர். ராமர் பாலப் பாதுகாப்பு மாநாட்டுக்கென்று ஆந்திரத்திலிருந்து வந்த கும்பல் ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி வந்தனர். ரயில்வே அதிகாரிகள் பயணச்சீட்டைக் கேட்டபோது "ராமர் பாலத்தைக் காக்கப்போகும் நாங்கள் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும்?" எனக் கேட்டு ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் செய்தனர். உடனே ரயில்வே போலீசோ அவர்களிடம் சமாதானம் பேசி அடுத்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் அவர்களைப் பாதுகாப்பாய் ஏற்றி அனுப்பி வைத்தது. மத வெறியர்களுக்கு வால்பிடித்த ரயில்வே போலீசு, புறநகர் ரயில்கள் ரத்தானதைக் கண்டித்து அதே வாரத்தில் நியாயமாகப் போராடிய பயணிகளைக் கைது செய்து 18 மணி நேரம் சிறையில் அடைத்தது என்பதில் இருந்தே அரசு எவ்வாறெல்லாம் இந்துவெறிக்குத் துணைபோகின்றது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

பாஜகவை விட்டு விலகி தனி அமைப்பு கண்ட உமாபாரதி தமிழ்நாட்டுக்குள் வந்து 'ராமர் பாலத்தைக் காக்கப் போராடும் தன்னை முடிந்தால் கருணாநிதி கைது செய்து பார்க்கட்டும்' என்று கொக்கரிக்கிறார். கருணாநிதியோ 'இதை எல்லாம் என் வாழ்நாளிலேயே காண வேண்டியிருக்கிறதே' எனப் புலம்புகிறார். அவரின் வீரம் என்ன என்பதை இல.கணேசனே 'பாஜக தயவு கருணாநிதிக்கு தேவைப்பட்டால் அவர் ராமர் பாலத்தை இடிக்க விடாமல் காப்பார்' என்று போட்டுடைக்கிறார்.

இன்று பெரியார், பகுத்தறிவு என்று அறிக்கை விடும் கருணாநிதி ஆறாண்டு பாஜக ஆட்சியின்போது அது நடைமுறைப்படுத்தி வந்த சோதிடக்கல்வி, மதவெறி கலந்த பாடத்திட்டம், குஜராத் படுகொலை என அனைத்து அராஜகத்திலும் மவுனப்பங்காளியாகச் செயல்பட்டவர்தான்.

திடீரென்று ராமர்பாலத்தைக் காக்கப் போவதாக பாஜக ஏன் பேச ஆரம்பிக்கின்றது? என்பதை அறிந்து கொள்ள, மூளையைக் கசக்க வேண்டியதில்லை. விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் வேதாந்தத்தின் "மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி ராமர் பாலம் இடிக்கப்படுமானால் வரும் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்கப்படும்" எனும் அறிக்கையில் இதற்கான பதில் உள்ளது.

நடந்து முடிந்த உ.பி. தேர்தலில் மூன்றாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்த பாஜகவுக்கு வரப்போகும் குஜராத் தேர்தலுக்கும், ஒருக்கால் இடதுசாரிகளால் மைய அரசு கவிழ்க்கப்பட்டு வரப்போவதாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத்தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்யக் கிடைத்த நல்வாய்ப்பாகவே ராமன்பாலம் அமைந்திருக்கிறது.

அரசியல் சாசனத்தின் 51ஏ பிரிவின்படி அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டியது இந்தியக்குடிமகனின் கடமை என்று தெளிவாக்கப்பட்டிருப்பினும், அறிவியலுக்குப் புறம்பாக காங்கிரசு அரசு செயல்பட்டு அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்பட்டு இந்து மதவெறியைக் கிளறி இருக்கின்றது. ராமர் பாலம் விவகாரம் மட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பு, அது சம்பந்தமாய் அமைக்கப்பட்ட லிபரான் கமிசனின் ஆயுளை நீட்டிக்கொண்டே செல்வது, மும்பைப் படுகொலைகள் குறித்த ஸ்ரீகிருஷ்ணா கமிசனின் அறிக்கையை அமலாக்காமல் இருப்பது என அனைத்து விசயங்களிலும் பாஜக விற்கும், காங்கிரசுக்கும் கொஞ்சம் கூட வேறுபாடு கிடையாது. இந்து மதவெறி காங்கிரசை ஆதரிப்பதன் மூலம் போலி கம்யூனிஸ்ட்களும் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு அடியாள் வேலை செய்து வருகின்றனர்.

123 அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அப்பட்டமாய் அம்பலமாகிப் போயுள்ளது காங்கிரசுக் கட்சி. அவ்வொப்பந்தத்தை எதிர்ப்பது போல நாடகமாடி வரும் பாஜகவும் இதில் அம்பலமாகியுள்ளது. மக்கள் மத்தியில் இவ்வொப்பந்தம் பேசும் பொருளாகி மறுகாலனியாக்கம் பற்றிய சர்ச்சை சூடுபிடித்து வரும் இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினையை மக்கள் மறந்து, 'ராமன் பாலம் கட்டினானா? இல்லையா?' என்று அவர்களை விவாதிக்கவிட்டு அதில் கிளறப்படும் மதவெறியில் குளிர்காய காங்கிரசும்,பாஜகவும் மட்டுமன்றி சகல ஓட்டுக்கட்சிகளும் முயன்று வருகின்றன.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அம்பலப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், அமெரிக்க உளவாளியும், டங்கல் ஒப்பந்தத்தின் செயல் தலைவனாகச் செயல்பட்டவனுமான சுப்பிரமணிய சாமியால் ராமர் பாலப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளதென்பது தற்செயலாக இருக்க முடியாது.

1990களின் ஆரம்பத்தில் மறுகாலனியாக்கத்தின் தொடக்கமாக காட் ஒப்பந்தத்தில் காங்கிரசு அரசு கையொப்பமிட்டு தாராளமயம்,உலகமயத்தை ஆரம்பித்து வைத்தபோது மக்கள் விழிப்புற்று விடாதிருக்க அப்போது பாஜகவும் காங்கிரசும் 'ராமர் கோவிலை பாபர் இடித்தாரா இல்லையா' என்ற விவாதத்தில் மக்களை மூழ்க வைத்து மதரீதியில் மக்களைப் பிளந்தன. காலங்காலமாய் பிரிட்டிஷ் காரன் செய்து வந்த அதே பிரித்தாளும் தந்திரத்தை இன்றும் கடைப்பிடிக்கின்றன.

'ராமன் பாலப் பிரச்சினை' என்பது பெருவாரியான இந்துக்களின் பிரச்சினையே அல்ல. இல்லாத ராமன் பாலத்தைப் பேசவைத்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. அதனுடன் கூட்டாளிகளாக ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என சகலவிதமான கழிசடைகளும் கைகோர்த்துள்ளனர்.

பெரியாரின் வாரிசுகளாகக் கூறிக்கொள்பவர்கள் இந்த சதியை எவ்வாறு முறியடிக்கப் போகிறார்கள்?

ராமர் பாலம் பற்றி கருணாநிதி விமர்சித்தவுடன் இந்துத்துவ பயங்கரவாதிகள் கருணாநிதியின் மகள் வீட்டைத்தாக்கியுள்ளனர். தமிழக அரசுப் பேருந்தைக் கொளுத்தி 2 பேரை உயிருடன் கொளுத்தி நரவேட்டை நடத்தி உள்ளனர். இவ்வளவு தூரம் போன பின்னரும், ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தபோதிலும், இம்மதவெறிக்கும்பலை கருணாநிதி அடக்கி ஒடுக்கத் தயங்குகிறார்.

காங்கிரசின் போலி மதச்சார்பின்மை சாயம் வெளுத்துப்போய் அதன் இந்து மதவெறி அம்பலமான பின்னரும் இரண்டு போலிகளும் காங்கிரசை ஆதரிப்பதன் மூலம் பாஜகவை தனிமைப்படுத்தலாம் என்று அடிப்படையே இல்லாமல் பசப்பிவருகிறார்கள். 'இந்து மதவெறிக் கும்பல்' என்பதைக் கூட நேரடியாகச் சொல்லத் திராணியின்றி 'மதவாத சக்திகள்' எனப் பொத்தாம்பொதுவாகப் பேசுவதுதான் போலிகளின் மதவெறி எதிர்ப்பு.

அணுசக்தி ஒப்பந்தம்,அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் என்று நாட்டை மறுகாலனியாக்கப் படுகுழியில் ஆளும் வர்க்கம் வீழ்த்தி வரும் வேளையில் மக்களைத் திசை திருப்பிடும் மதவெறிப்பிரச்சாரத்தில் மும்முரமாய் இறங்கி இருக்கும் சங்க பரிவாரத்தை வீதியில் இறங்கி எதிர்தாக்குதல் நடத்தி முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.
Related:

Friday, September 28, 2007

விடுதலைப் போரின் விடிவெள்ளி !


இன்று மாவீரன் பகத் சிங்கின் 101-வது பிறந்த நாள் !


ஆங்கிலேய காலனியாதிக்கத்திடமிருந்து, இந்திய சுதந்திரத்தை மீட்டெடுக்கத் துடித்த எண்ணற்ற இளைஞர்களின் இதயத் துடிப்பு அவன். அன்று மட்டுமல்ல இன்றும், ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கதிலிருந்த்து மக்களை மீட்டு ஒரு புதிய ஜனநாயகத்தைச் சாதிக்கத் துடிக்கும் எல்லோருக்கும் அவன் ஒரு கலங்கரை விளக்கம்.


தியாகத்தின் திருவுருவாய் மட்டுமின்றி, போராடுபவர்களுக்கு உற்சாகத்தின் ஊற்றுகண்னாய்த் திகழ்பவன் பகத்சிங்.அவனது நினைவுகளை நெஞ்சிலேந்துவோம், அவன் காட்டிய வழியிலே மக்கள் விடுதலையைச் சாதிப்போம்.

..


அந்த வீரன் இன்னும் சாகவில்லை !







நன்றி இவான்

Thursday, September 27, 2007

பெரும்பான்மையினரின் நம்பிக்கையும் பாசிசப் பன்றிகளின் பிதற்றலும் !!

இன்று காலை ஆரியர்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவியும்,பார்ப்பன பாசிசத்தின் தமிழ்நாட்டின் பிரதிநிதியுமான ஜெயலலிதா வெளியீட்டுள்ள ஒரு அறிக்கையிலிருந்து..

"இன்றைக்கு தமிழ்நாட்டில் தீண்டாமையை எதிர்த்து சிலர் பேசி வருகின்றனர். தீண்டாமை என்பது இறைவனால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு கொடை. அதை எதிர்ப்பது இறைவன் வகுத்தளித்த சநாதன தர்மத்தையே எதிர்ப்பதாகும். பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஸ்ரீ ராமனின் ஆட்சியில் இந்த சநாதன தர்மத்தின் கீழ் மக்கள் எவ்வளவு சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் பல கோடி சாதி இந்துக்களின் நம்பிக்கை இந்தத் தீண்டாமை. இவர்கள் எப்படி ராமர் பாலத்தை ஏற்க மறுக்கிறார்களோ அதே போல தீண்டாமையையும் ஏற்க மறுக்கிறார்கள். இது இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ள எங்களைப் போன்ற அனைவரது நெஞ்சத்தையும் புண்படுத்துகிறது. இவர்களுக்கு இதில் நம்பிக்கை இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம் அது அவர்களது சொந்த விஷயம். ஆனால் பெரும்பாலான இந்துக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவது தவறு."

ராமன் பாலத்தைக் காக்க ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் அவர் வெளியிட நினைத்து மறந்து போன ஒரு பகுதியை நாமே வெளியிட்டுள்ளோம்.

தனது நம்பிக்கையைப் பெரும்பாலானவர்களின் மீது திணிக்கும் பார்ப்பனியத்தின் அதே பாசிசத் தன்மையைத் தனது அறிக்கையில் கக்கியுள்ளார் இந்தப் பாப்பாத்தி. இவரும், இவர் சார்ந்த பார்ப்பனர் சங்கமான ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கூட்டமும், இல்லாத ராமனுக்கும் கற்பனைப் பாலத்திற்கும் பெங்களூரில் இரண்டு அப்பாவிகளைக் கொன்றுள்ளனர். இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டம் மக்களிடையே உள்ள சாதாரண மத நம்பிக்கையை, மதவெறியாகத் தூண்டி விட்டு அவர்களை மோதவிட்டு இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
.
ஒரு பகுதியில் அரசியல் ரீதியில் காலூண்ற இவர்களுக்குத் தெறிந்த ஒரே வழிமுறை கலவரத்தைத் தூண்டுவது. எப்போ தருணம் வரும் எவனைக் கொல்லலாம், எப்படி கலவரத்தைத் தூண்டலாம் என சர்வ சதா காலமும் காத்துக் கிடக்கின்றனர். இதனால் தான் ராமனைப் பற்றிய பிரச்சனை வந்தவுடன் ஏன் எதற்கு என்று கூடக் கேட்காமல் தாக்குதல் தொடுக்கத் தொடங்கி விட்டனர். ராமாயணம் என்ற கதையில் ராமன் என்ற கற்பனைப் பாத்திரம் மோண்ட,பேண்ட இடங்களையெல்லாம் தோண்டியெடுத்து, இந்து நம்பிக்கை என்ற பெயரில் அட்டூளியமும், அராஜகமும் செய்யும் இவர்கள் அதனை எப்போதும் கலவரமாக்கவே முயற்சி செய்துள்ளனர்.

மும்பையில் தமிழர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிப் பல்லாயிரம் தமிழர்களைத் துரத்தியடித்தனர். பின்னர் பாபர் மசூதி இடிப்பின் போதும் இப்படித்தான் பெரும்பாண்மையினரின் நம்பிக்கை என்று கூறி முஸ்லீம்களைக் கொன்றனர். குஜராத்தில் கூட்டம் கூட்டமாகச் சென்று முஸ்லீம்களைக் கொல்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்வது, குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றிக் கொல்வது என சிறிதுகூட மனிதாபிமானமே இல்லாத வானரப்படையைக் கொண்டு மக்களை மிரட்டியே ஆட்சியைப் பிடித்தான் நரேந்திர மோடி எனும் நரபலிச் சாமியார்.
.
இங்கு தமிழகத்தில், மண்டைக்காடு கலவரம், கோவைக் கலவரம் என மதவெறியைப் பரப்பி, கலவரங்களை உருவாக்கி பலரது உயிரைக் குடித்துள்ளனர். இவர்கள் இதுவரை தங்களது வளர்ச்சியை சிறுபான்மையினரின், தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தால்தான் பதிவு செய்துள்ளனர்.

இதே பெரும்பாண்மையினரின் நம்பிக்கையின் பெயரால்தான் பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான் ஹிட்லர். அந்தப் பாசிசப் பேயின் பேரன், பேர்த்திதான் இந்த அத்வானியும், ஜெயலலிதாவும், விஜயகாந்தும். பெரும்பாண்மை பெரும்பாண்மை என்று இவர்கள் கத்துவதெல்லாம் தங்களது பாசிசத்தை மறைத்து, குற்றத்தை மக்கள் மீது சுமத்துவதற்க்கே.

இவர்களுக்கு ராமன் மேல் பக்தியுமில்லை அவன் கட்டியதாக இவர்கள் கூறும் பாலத்தின் மீது அக்கறையும் இல்லை. ஆனால் இவர்களுக்கு இருப்பதெல்லாம் ஒரே கனவு அது தமிழகத்தை குஜராத்தாக மாற்றும் பாசிசக் கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர் போவதைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையில்லை. பன்னாட்டு முதலாளிகள் நமது நாட்டில் அடித்த கொள்ளையைச் சுலபமாக வெளியே கொண்டுபோகத் தங்க நாற்கரச் சாலையையும், சேதுக் கால்வாய்த்திட்டத்தையும் ஆரம்பித்ததே இந்த ஜெயா, அத்வானி அயோக்கியக் கும்பல்தான். அதைவிட்டு இன்று ஏதோ இந்துக்களின் நம்பிக்கையே தகர்ந்தது என்று தான் வகுத்த திட்டத்தைத் தானே எதிர்த்து ஊரை ஏமாற்றுகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக தினமலர், தினமணி உட்பட அனைத்து பத்திரிக்கைகளும் காவியிலேயே எழுதுகின்றனர். காங்கிரஸ், வை.கோ, விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைத்துக் கட்சியினரும் காவிகறையுடன் வலம்வருகின்றனர். மொத்ததில் தமிழகம் முழுமைக்கும் காவியடிக்க வருகிறது ஒரு வானரக் கூட்டம்.
Related:
..

Tuesday, September 25, 2007

ஆப்பசைத்து வாலறுந்த குரங்குகள்

உயிரினங்களை வைத்துச் சொல்லப் பட்ட கதைகளில் குரங்குக் கதைகள் பிரபலம். சற்று முட்டாள்தனமானதும், அதே சமயம் விஷமத்தனமானதுமான இந்தக் குரங்குகள் தங்களது முட்டாள்தனத்தினால் அப்பாவிகள் போன்று தோன்றினாலும், சற்று ஏமாந்தால் ஆளையே தீர்த்துக்கட்டும் அளவுக்கு பயங்கரமானவை. தன்னைவிட பலம்வாய்ந்த மிருகங்களிடம் வாலைக் குழைத்துக் கும்பிடுபோடும் அதே சமயம் பலகீனமானவர்களிடம் அதிக்களம் செய்யும். இத்தகைய குரங்குகளை நாம் காடுகளிலும், மரங்களிலும் தேட வேண்டியதில்லை இவை ஊருக்குள்ளேயே காவிக்கொடிக்குக் கீழ் கொட்டம்மடித்துக் கொண்டிருக்கும்.

நாமும் பல குரங்குக் கதைகளைக் கேட்டும், படித்தும் உள்ளோம். குஜராத்தில் குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு, அயோத்தியில் அயோக்கியத்தனம் செய்த குரங்கு, அமெரிக்க தொப்பிக்காரனிடம் ஏமாந்த குரங்கு,பெரியார் பிராண்ட் இஞ்சியைத் தின்ற குரங்கு எனப் பல கதைகளாக நீளும் இப்பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளதுதான் பகுத்தறிவு ஆப்பசைத்து வாலறுந்த குரங்கு கதை.

பரிணாம வளர்ச்சியில் சற்று பின்தங்கிய ஒரு இந்துத்வா குரங்குக் கூட்டம், வடமாநிலங்களில் தனது சேட்டைகளின் மூலம் மக்களைத் துன்புறுத்தி வந்தது. அது போதாதென்று தமிழகத்தையும் குறிவைத்துக் களத்தில் இறங்கின. இங்கே உள்ள ஜெயா குரங்கு, விஜயகாந்த் குரங்கு, சரத் குரங்கு போன்ற நட்புக் கூட்டங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, இலங்கைக்கும் ராமேஸ்வரத்திற்க்கும் பாலமிருக்கிறது, பாலமிருக்கிறது என்று கூறி, மூடநம்பிக்கையைப் பிளந்து பெரியார் அடித்த பகுத்தறிவு ஆப்பை அசைத்துப் பார்த்தது. ஆனால் இதன் மூலம் தனது வாலே துண்டாகும் என்று பாவம் அந்தக் குரங்குக்குத் தெரியவில்லை. வெறும் குச்சியைத் தூக்கினாலே ஓட்டம் பிடிக்கும் இந்தக் குரங்குக் கூட்டத்திற்க்குத் தலையைக் கொய்வதாய்ச் சவடால் வேறு. இந்நிலையில், தான் அசைத்த ஆப்பு தனது வாலைக் காவு வாங்கிவிட்டதை எண்ணி இப்போது புலம்பித் திரிகின்றது.

இந்தக் குரங்குகள் எத்தனை முறை சூடுபட்டாலும் புத்திவராமல் திரும்பத் திரும்ப வந்து அடிபட்டு ஓடுகின்றன. புதிது புதிதாக ஏதாவதொன்றைக் கையில் பிடித்தபடி எப்படியாவது தமிழகத்தில் அழிச்சாட்டியம் பன்ன வேண்டும் என்று முயன்றுகொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் இவற்றை விரட்டினால் திரும்பவந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன, இந்த இம்சையை ஒழிக்க இந்தக் குரங்குகளைக் கூண்டிலடைத்து, இல்லாத பாலத்தைத் தரிசிக்கக் கடலுக்குப் புனித யாத்திரை அனுப்புவதொன்றுதான் வழி. அதைத் தான் நாம் செய்ய வேண்டும், அதுதான் பகுத்தறிவுள்ள ஒரு மனிதனின் செயல்.
Related Articles:

Monday, September 17, 2007

பன்னாட்டு நிறுவனக் கைக்கூலி சிதம்பரத்தின் அரிய சாதனைகள் !

  • அமெரிக்க எரிசக்தி கம்பெனியான என்ரானுக்கு ஆதராவாகவும், இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் வழக்கறிஞராக செயல்பட்டு இந்திய அரசாங்கத்திடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை என்ரானுக்கு பெற்று தந்தவர்

  • ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் மருந்து கம்பெனிக்கு ஆதராவாக வழக்கறிஞராக களம் இறங்கி, இந்திய மக்களுக்கு புற்றுநோய்க்கான மருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு தான் கிடைக்க வேண்டும் என அதற்க்கான காப்புரிமையினை நோவார்டிஸ் க்கு பெற்று தர போராடி வருபவர்

  • தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிராக வாதாடி நிரந்தரமாக அவர்களை வீட்டுக்கு அனுப்ப போராடியவர்

  • இன்று இந்திய நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்வதற்கும், ஆயிரக்கணக்கான சிறுதொழில்களுக்கு மூடுவிழா நடத்துவதற்கும், இந்திய நாட்டு மக்களுக்கு எதிராக 24 மணி நேரமும் சிந்திப்பவர்.

இவர்தான் மன்மோகன்

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 தேதி, பஞ்சாபின் காக் பகுதியில் (இன்றைக்கு பாகிஸ்தானின் சக்வால் மாவட்டதில்) பிறந்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின்பு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெற்று, IMF போன்ற பல்வேறு நிதி நிறுவனங்களிலும், பின்பு இந்திய அரசின் பல்வேறு நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் வேலை பார்த்து, பின்பு படிப்படியாக திட்டக்குழு தலைவராக, பிரதமரின் பொருளாதார ஆலோசகராக உயர்ந்து, நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராகவும், அதற்க்குப் பிறகு ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சித் தலைவராகவும், இறுதியில் இன்று இந்தியப் பிரதமராகவும் உள்ள மன்மோகன்சிங்கின் வாழ்க்கையில் ஒரே எறுமுகம்தான், ஆனால் ஒரெ ஒரு முறை மட்டும் அவர் இறங்கு முகத்தைச் சந்தித்தார். அது 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தெற்க்கு டெல்லித் தொகுதியில் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வி. அதற்க்குப் பிறகு மக்களைச் சந்திக்கும் தைரியம் சிறிதுமின்றி தனது ஏறுமுகத்தைத் தக்க வைக்க வாழ்நாள் முழுவதும் ராஜ்ய சபா எம்.பி.யாக இருக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.

1991 ல் நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடும் புதிய பொருளாதாரக் கொள்கையை வடித்துக் கொடுத்து, தனக்குப் பிறகு வரும் எல்லா ஆட்சிகளும் அதே நாசகர வேலையைத் தொடர்ந்து செய்ய வழிவகுத்தார். இன்றைக்கு பல லட்சம் விவசாயிகள் வாழ வழியிழந்து, பிழைப்புக்கு நாடோடிகளாகத் திறியும் இந்தக் கொடுமைக்கும், கல்வி முதல் மருத்துவம் வரை எல்லா சேவைத்துறைகளையும் காசாக மாற்றியதற்க்கும், தண்ணீர் முதற்கொண்டு எல்லா இயற்க்கை வளங்களும் பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்கள் விழுங்கிவருவதற்க்கும், SEZ என்ற பெயரில் நாட்டையே வெளிநாடுகளின் சிறு சிறு காலனிகளாக மாற்றிவருவதற்க்கும், காரணம் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைதான்.
..
தனக்கு அளிக்கப்பட்ட மந்திரி பதவிக்கு மாற்றாக இவ்வளவு பெரிய சேவையைப் பன்னாட்டு முதலாளிகளுக்குச் செய்த மன்மோகன் சிங், இப்போது தன்னைப் பிரதமராகிய நன்றிக்கடனை எப்படி அடைக்கப்போகிரார்?

'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவர் வாக்கை மறக்காதவர் மன்மோகன் சிங். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிறுந்தால் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பார், முதலாளிகள் அதுவும் அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது முன்னாள் எஜமானர்களின் மனதைக் குளிரச் செய்யக் கொண்டுவந்தார் 123. இந்திய - அமெரிக்க கூட்டு இராணுவ ஒப்பந்ததின் மூலம் தன்னைப் பிரதமராக்கிய கடனை அடைத்துவிட்ட மகிழ்ச்சியில், ஒப்பந்தத்தைக் காக்க பிரதமர் பதவியையும் இழக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.
..
123 ஒப்பந்தத்தால் ஏற்ப்படும் இழப்புகளையும், பாதிப்புகளையும் பற்றிப் பேசினால் மன்மோகன் சிங்கிற்கு இது தெறியாதா என புதிசாலித்தனமாகக் கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகளே, இந்த மன்மோகன் சிங் பதவிக்கு வந்து பின்பு குணம் மாறிய நமது நாட்டின் வழக்கமான அரசியல்வாதியல்ல, இந்தக் காரியத்தைச் சாதிப்பதற்க்காகவே வளர்த்து விடப்பட்டு, ஆட்சியதிகாரத்தில் அமரவைக்கப்பட்டுள்ள அடியாள், இவருக்கு எல்லாம் தெரியும். இவரது வாழ்கையை மேலோட்டமாகப் பார்த்தாலே போதும் இவரது விசுவாசம் யாருக்கானது என்பது சுலபமாகப் புலப்படும்.

'செவ்வணக்கம்'


வர்க்கப் போராட்டதில் உயிர் நீத்த எல்லாத் தியாகிகளுக்கும் செவ்வணக்கம்

இணைப்பு