tag:blogger.com,1999:blog-44056740276698883722024-03-13T20:04:18.162-07:00இரும்புsteelஇரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-45939302490228689542008-02-19T04:04:00.000-08:002008-02-19T04:06:15.426-08:00முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து நடக்கவிருந்த அரங்கக் கூட்டம் - பொதுக்கூட்டமாக நடக்கிறது.<a name="2955608301555174556"></a><div align="center"><br /><strong><span style="font-size:130%;color:#ff0000;">போலீஸ் தடையினை அடுத்து பொதுக்கூட்டம்-ஆக நடக்கிறது - இடம் : எம்.ஜி.ஆர் நகர் மார்கெட்.! !<br /><br />நேரம் மாலை 6 மணி</span></strong><br /></div><div align="center"><a href="http://poarmurasu.blogspot.com/">நன்றி</a> <a href="http://www.sivappualai.blogspot.com/">/</a><a href="http://poarmurasu.blogspot.com/">http://poarmurasu.blogspot.com/</a></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-18329476971373916322008-02-07T22:18:00.000-08:002008-02-07T22:23:38.984-08:00தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!<div align="justify"><a href="http://i82.photobucket.com/albums/j251/bonapert/Tenkasi1-04-Feb08.jpg"><img style="WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://i82.photobucket.com/albums/j251/bonapert/Tenkasi1-04-Feb08.jpg" border="0" /></a> </div><div align="justify"><span style="color:#ff0000;">நன்றி: </span><a href="http://newscap.wordpress.com/2008/02/04/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-rss-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/"><span style="color:#ff0000;">செய்திரசம்</span></a></div><div align="justify">நன்றி: தினமலர் தென்காசியில் RSS பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவுபடுத்தி எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் நில உரிமை பிரச்சினை என்ற தனிப்பட்ட பிரச்சினையை மத பிரச்சினையாக திசை திருப்பி கலவரம் செய்து சில உயிர்கள் சிவலோக பதவியடைய உதவி செய்தவர்களும் இந்த கும்பல்தான்.</div><div align="justify"><br />இன்னிலையில் அந்த பகுதியில் தமது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக RSS அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர் மீது பலி போடும் தனது பாரம்பரிய தந்திரத்தை இங்கும் செய்து அம்பலப்பட்டு போயுள்ளது RSS பார்ப்பன இந்துத்துவ வெறி கும்பல்.</div><div align="justify"><br />இது போன்ற நடைமுறை இவர்களுக்கு புதிதானதொன்றும் இல்லை. ஏற்கனவே நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அம்பலப்பட்டு போனவர்கள்தான் இவர்கள். அந்த சம்பவத்தில் இறந்தவன் தவிர்த்து மாட்டிக் கொண்ட வெறியர்கள் முஸ்லீம் மசுதி குண்டு வெடிப்புகள், நாக்பூர் RSS அலுவலக குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருந்தது வெளிவந்தது.</div><div align="justify"><br />இதே கும்பல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்வதும் இவற்றை தமது ஊர்வலங்களில் உபயோகப்படுத்துவதும் எல்லா பத்திரிகைகளிலும் வந்து அம்பலமானதுதான். குஜராத்தில் ராக்கேட் லாஞ்சர்கள் உபயோகித்தது குறித்து பாஜக கட்சி MLA வே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.</div><div align="justify"><br />காந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் வாரிசுகள் வெறு விதமாக செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.</div><div align="justify"> </div><div align="justify"><u><strong>குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:</strong></u></div><div align="justify"><br />“இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.” </div><div align="justify"><br />குண்டு வெடித்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய் என்று ஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவ வெறியுடன் பேசிய <a href="http://www.maalaisudar.com/newsindex.php?id=8354%20&%20section=19">RSS குரங்கு படையின் தலைவன்</a>.</div><div align="justify"><br />“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்த வருடம் ஹிந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார். </div><div align="justify"> </div><div align="justify">பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் தடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</div><div align="justify"> </div><div align="justify">“<br />இவன் கணக்குபடியே குண்டு வைச்சவனை கைது செஞ்சாச்சி. ஆனா இந்த கும்பல் இப்போ கைது செஞ்சது தப்புன்னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.</div><div align="justify"><br /><strong>செய்திரசம்</strong></div><div align="justify"><br /><strong><u>Related Articles:</u></strong></div><div align="justify"> </div><div align="justify"><a href="http://poarmurasu.blogspot.com/2008/02/blog-post_07.html"><span style="color:#333399;">இந்து முன்னணி பயங்கரவாத கும்பலின் தலைவன் ரவுடி இராம.கோபாலனை கைது செய்!</span></a></div><div align="justify"><br /><a href="http://puthagapiriyan.blogspot.com/2008/01/blog-post_11.html" modo="false"><span style="color:#333399;">குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்</span></a></div><div align="justify"><br /><a title="Permanent Link to ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!" href="http://newscap.wordpress.com/2008/01/30/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-rss-%e0%ae%86/" rel="bookmark"><span style="color:#333399;">ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!</span></a><br /><a href="http://poar-parai.blogspot.com/2008/01/blog-post.html"><span style="color:#333399;">இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …</span></a><br /><a href="http://poar-parai.blogspot.com/2008/01/blog-post_22.html"><span style="color:#333399;">பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…</span></a><br /></div><div align="justify"></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-60597122842653969242008-01-29T21:27:00.000-08:002008-01-29T21:29:16.903-08:00காந்தி: வழிகாட்டியல்ல, சோளக்காட்டு மொம்மை<div align="justify"> </div><div align="justify">"என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லை?" என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், 'வாடிக்கையாளரே நமது எசமானர்' என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத் தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மை தான். </div><div align="justify"> </div><div align="right">(புதிய கலாச்சாரம் ஜனவரி 2008-ல் வந்த காந்தி: வழிகாட்டியல்ல, சோளக்காட்டு மொம்மை என்ற கட்டுரையில் இருந்து)</div><div align="justify"> </div><div align="justify"><a href="http://www.puthagapiriyan.blogspot.com/"><span style="color:#ff0000;">நன்றி: புத்தகப் பிரியன் </span></a></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-58753782761824096732008-01-25T23:45:00.000-08:002008-01-29T00:55:32.613-08:00"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை<div align="justify">பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. </div><div align="justify">..<br />மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.</div><div align="justify"><br />வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.</div><div align="justify"><br />1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.</div><div align="justify"><br />மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.</div><div align="justify"><br />32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.</div><div align="justify"><br />விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 - -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.</div><div align="justify"><br />விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.</div><div align="justify"><br />உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.</div><div align="justify"><br />உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?</div><div align="justify"><br />இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.</div><div align="justify"><br />ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.</div><div align="justify"><br />110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.</div><div align="justify"></div><div align="right"><strong><span style="color:#ff0000;">டிசம்பர் "புதிய ஜனநாயகம்" </span></strong></div><div align="right"><span style="color:#ff0000;"><strong>"உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்" கட்டுரையில் இருந்து</strong><br /><br /></span></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-27562584099447409852008-01-22T11:19:00.000-08:002008-01-21T23:21:46.591-08:00டாடாக்களின் புரட்சியும் மக்களைத் தின்னும் கண்டுபிடிப்புக்களும்<p align="justify"><br /><strong><u>மக்களின் கார் பிணங்களின் மீது பவனி</u></strong></p><strong><u></u></strong><p align="justify"><br />"ஏனுங்க டாடாவோட நானோ காரைப் பார்த்தீங்களா?, என்ன அம்சமா இருக்கு தெரியுங்களா" என்ற சித்தாளின் உடையாடலோ, "அம்மா எனக்கு நானோ கார் வாங்கிதந்தாதான் சாப்பிடுவேன்" என்ற கெஞ்சல்களையோ கேள்விப்படவில்லை. ஆனால் இதை விட பல மடங்கு பேச்சுகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டதாக பத்திரிக்கைகள் புளுகிக் கொண்டிருக்கின்றன. </p><p align="justify"><br />பத்திரிக்கைகள் டாடாவின் 1 லட்சம் ரூபாய் நானோ கார் (வரிகளுடன் 1.25 லட்சம்) வரவினை டாடாவின் புரட்சி என்றே அழைக்கின்றன. 1980 களில் இந்திய சாலைகளில் மாருதி நிறுவனம் முதல் சாலைப் புரட்சியை நடத்திகாட்டியதாகவும் இந்த நானோ கார் இரண்டாவது புரட்சியாகவும் கொண்டாடப்படுகின்றன. சிறிது டாடாவின் காரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.</p><p align="justify"><br />எஞ்சின் - 624 cc, 33 php, ஒரு லிட்டருக்கு 20 கி.மி மேல், 4 ஸ்பெசல் கியர், அதிகபட்ச வேகம் 90 கி.மி. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் நிறைவு செய்கிறது. ஏழை நடுத்தர மக்களுக்காகவே உலகிலேயே மிக குறைவான விலையில் விற்கப்படும் முதல் கார் 2500 டாலர் (அ) 1 லட்சம். இதற்கு அடுத்தப்படியாக க்யூ க்யூ3 காரோ 2 லட்சம்.</p><p align="justify"><br />இந்த காருக்கு இருக்கும் விற்பனைக்கான வாய்ப்பை வாய் கிழிய கிழிய நிபுணர்கள் உந்தி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9% எட்டி விட்டது, பங்குச் சந்தை 21,000 (பலுன் ஊதிய போது) புள்ளிகளை தாண்டி எகிறிகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 40 லட்சம் கோடியையும், தனிநபர் சராசரி வருமானம் ரூ 40,000 ஐயும் தொட்டு வல்லரசுக்கு பிளிரிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலன்றி வேறெப்போது புரட்சியினை சாதிக்கமுடியும் என்ற கேள்விகளால் பத்திரிக்கைகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றனர். காம்ரேட் டாடா ஆரம்பித்து வைத்த இந்த புரட்சியை நீடித்து கொண்டு செல்வதற்காகவே பல கார் நிறுவனங்கள் புதிதாக இந்தியாவில் இறங்க உள்ளன.</p><p align="justify"><br />"உணவி , உடை, இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு மிதமிஞ்சிய பணப்புழக்கம் இருக்கும் ஒரு நாட்டில் இவ்வருடம் மட்டும் கார்களில் 75 மாடல்கள் தான் அறிமுகமாகுமென்று சற்றே கவலையளிக்கிறது"</p><p align="justify"><br />டாடாவுக்கு மட்டும் தான் மக்கள் தலையில் மிளகாய் அரைக்க உரிமை இருக்கிறதாயென்ன என்றவாறே கடந்த பத்து மாதங்களில் மட்டும் ஆறு பெரிய நிறுவனங்களுக்குள் ரூ 18,400 கோடியில் பேரத்தில் இறங்கியிருக்கின்றன. டாடா, அசோக் லேலண்ட், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு ஏற்றபடி விலை குறைவாக உள்ள காரை எப்படி தயாரிப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறதாம். டாடா ஒரு லட்ச ரூபாய்க்கு மக்கள் கார் கொடுப்பதால் நான் 1.3 லட்சத்திற்கு கார் தருகிறேன் என மல்லுக் கட்டுகிறார் ராஜீவ் பஜாஜ்.</p><p align="justify"><br />அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க கார் சந்தை தேக்கமடைந்திருப்பதால் இந்தியாவில் 45 கோடி நடுத்தர மக்கள் இருப்பதாகவும், அவர்கள் அத்தேக்கத்தை (அடைப்பை) சரி செய்துவிடுவார்களென்று பன்னாட்டு கார் நிறுவனங்கள் முண்டியடித்துக் கொண்டு கடையை விரிக்கின்றன. 10 லட்சம் கார்களையும், 76 லட்சம் பைக்கு களையும் நுகரும் இந்திய சந்தையில் 2016க்குள் 40 லட்சம் கார்கள் 1 ஆண்டுக்கு திணிப்பதற்கு காத்திருக்கிறார்கள்.</p><p align="justify"><br />இந்த மக்கள் காரின் வரவுக்கு எந்த சமூக அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை இக்கார் சமூக அக்கறையினால் உருவாக்கப்பட்டதெனில் ஜெயேந்திரன் கூட சமூக அக்கறையினாலேயே கொலைகளையும், கற்பழிப்புக்களையும் தீண்டாமையையும் நெறிப்படுத்தினான் என்றே கூறலாம். சினிமா கழிசடைகளும், ஏகாதிபத்திய நாய்களும் தாங்கள் பொறுக்கித்தின்பதற்காக இதை சமூக அக்கறையாக பயன்படுத்திக்கொள்கின்றன. மூன்று இந்தியர்களின் ஒருவர் பஞ்சைப் பராரியாக இருப்பதும், 91 கோடி மக்களின் வாழ்க்கைத்தரம் ரூ 80க்கும் கீழ் போய்விட்ட இத்தேசத்தில் இந்த ஏகாதிபத்திய "புடுங்கிகள்", மக்களின் கவலையை மறக்க விலை குறைவாக காரைக் கண்டுபிடிக்கிறார்களாம்.</p><p align="justify"><br />விவசாயம் செய்ய முடியாது என மறுகாலனிய சுருக்கில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் உயிரைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்களின் பட்டாளம் கோடிக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறது. பொதுத் துறைகளை தனியார்மயமாக்கம் என்ற பெயரில் சீரழித்து தொழிலாளர்களை வீதியில் வீசியெறிக்கின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்காகத் தான் மக்கள் கார் தயாரிக்கப்பட்டதாம்.</p><p align="justify"><br />ரத்தன் டாடா ஒரு பேட்டியில் கூறியது "குறைந்த லாபத்தில் காரை தயாரிக்க முடியாது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பங்களிப்பு செய்ய விரும்பினோம்.....குறைவான லாபத்தோடு சில தியாகங்களை செய்தாக வேண்டும்" </p><p align="justify"><br />110 கோடி கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒரு முதலாளியால் முடியும். இந்த புரட்சியை சாதிக்கவே மக்களை வெளியேற்றி நந்திகிராமில், சிங்குரில் நிலம் கையகப்படுத்தினோம் என்கிறது சிபிஎம். இதனை அடுத்த தேர்தலுக்குள் புரட்சி சாதிக்கப்பட்டு சிபிஎம்-ன் பேனர்களில் டாடா படம் கூட பொறிக்கப்படலாம். ரசியப்புரட்சியை நடத்திக்காட்டிய லெனின் படத்துடன், மாமா வேலை பார்த்த சுர்ஜித்தின் படத்தை போடும் போது மக்களின் வாழ்க்கையை (?) உயர்த்த விரும்பி தனது இலாபத்தை குறைத்துக் கொண்ட மகோன்னதத் தலைவனின் படத்தை ஏன் போடக்கூடாது என்ற வகையில் தீக்கதிர் தலையங்கம் கூட எழுதலாம்.</p><p align="justify"><br /><span style="color:#ff0000;">"முதாலளித்துவத்தின் எந்த கண்டுப்பிடிப்பும் மக்களுக்காகயிராது சந்தைக்காகவே இருக்கும்"</span> </p><p align="justify"><br />கார் என்பதைப் பொறுத்த வரை இன்று மக்களுக்கு இடையூராகவே உள்ளது. ஒரு காரில் அதிகபட்சம் 6 பேர் உட்கார முடியும். இரண்டு கார்களின் அளவானது ஒரு பேருந்தின் அளவுக்கு சமமாக உள்ளது. குறைந்தபட்சம் 60 பேர் உள்ள பேருந்தின் இடத்தை 12 பேர் கொண்ட கும்பல் ஆக்கிரமிக்கின்றது. காரை வாங்குவதால் நடுத்தர மக்களும், அதனை பயன்படுத்துவதால் நடுத்தர - ஏழை மக்களும் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் இரு சக்கரவாகனங்களின் எண்ணிக்கை இறைவாகவே இருந்தது. இன்று இரு சக்கரவாகனமின்றி வாழ்நிலை மிகவும் சிரமம் என்ற நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.</p><p align="justify"><br />இந்த இருசக்கர வாகனத்தின் பெருக்கம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதே! சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதை தவிர்த்துவிட்டு திரும்பிபக்கமெல்லாம் விளம்பரங்கள் "சார் பைக் லோன் வேண்டுமா உடன் தொடர்புக்கு!!" என்று. இவை விளம்பரங்களாக செயல்படவில்லை. கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற ஆணையாகவே இருந்தது. அப்படி வாங்கியவர்கள் லோன் கட்டமுடியாமலோ (அ) Petrol-க்கென்றே வருமானத்தில் பெரும்பகுதியை செலவழித்துக் கொண்டு இருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள் இப்படி "இந்த சனியனாலதான் எல்லாப் பிரச்சினையுமே , இருந்தாலும் இதைவிடமுடியலையே!</p><p align="justify"><br />கடந்த ஐந்து ஆண்டுகளில் Petrol பொருட்களின் விலை 5 மடங்காகியிருக்கிறது. தற்போது மீண்டும் Petrol, டீசல், கேஸ் விலையை ஏற்றப்போவதாக அரசு கூறிவருகிறது. இந்நிலையில் அறிமுகப்படுத்தப்படும் மக்கள் கார் மக்களின் வாழ்க்கையை கேலிக்குரிய ஒன்றாகவே மாற்றும். பைக்கிற்கான கடனைப் போலவே தற்போன காருக்கான கடன் சலுகைகள் மிக அதிகமாக உள்ளது. சமூக அடையாளத்திற்கான இடத்தை நகரக்ங்களைப் பொருத்தவரை பைக்கிடமிருந்து கார் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.</p><p align="justify"><br />முன்பெல்லாம் காருக்கான மூலதன செலவு (initial cost) அதிகமாகவும், பராமரிப்பு செலவு (maintenance cost) குறைவாகவும் இருந்தது. தற்போது மூலதன செலவு குறைந்தும், பராமரிப்பு செலவு அதிகமாகவும் மாற்றப்படுகின்றது. எப்படியிருந்தாலும் தன்னுடைய லாப விகித்ததை சரி செய்து கொள்கிறார்கள் முதலாளிகள்.</p><p align="justify"><br />"சாலைகள் மேம்பட வேண்டும் என்பது உண்மைதான் அதற்காக குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்கைத்தரம் உயரக் கூடாது என சொல்லக் கூடாது" என்கிறார்கள் புத்திசாலிகள். முதலாளித்துவ நாய்களின் வாலை பிடித்து கொண்டு திரியும் இந்த அறிவிஜீவிகள் கிராமப்புறங்களில், ஏன் சென்னை போன்ற நகரங்களின் தெருக்களில் கூட சாலைகள் குண்டும் குழுகளும் பல்லைக்காட்டிக்கொண்டிருப்பதை ஒருக்காலும் பேசமாட்டார்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சீரழித்தவர்களே சொல்கிறார்கள். "உங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றப் போகிறோம், நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னேறித்தானாக வேண்டும்" </p><p align="justify"><br />இன்னமும் இந்தியக்கிராமங்களில் மக்கள் டிராக்டரில் பயணம் செய்வதால் இந்தக்கார் பெரிய ஹிட் ஆகுமென்கிறது டாடா. 50,000 ரூபாய் கொடுத்து பைக்வாங்கும் ஒருவரால் கொஞ்சம் சிரமப்பட்டால் லட்சரூபாய் கார்வாங்கலாம் என்ற கூற்றும் நிலவுகிறது. இதில உண்மையும் இருக்கிறது. மக்களை மேலும் மேலும் கடனாளியாக்க இப்படி எத்தனையோ திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பட்டபின் திருந்தலாம் என்று வாங்கிய காரை விற்க போகும் போது அது 3/1 பங்கு கூட பெறாமலிருக்கும். பைக்காக இருக்கும்பட்சத்தில் நான்கு தெரு தள்ளி கூட நண்பர் வீட்டில் நிறுத்திவிடலாம் மாத தவணை வசூலிக்கும் குண்டர்களிடமிருந்து தப்பிப்பதற்காக. காரை எங்கு போய் நிறுத்துவது?</p><p align="justify"><br />இன்று வீட்டு வாடகைக்கு இடம் கிடைக்காத நிலையில் காருக்காக தனியாக இடம் தேடி நடுத்தர வர்க்கம் அலையும் நிலை வரலாம். இது அதிகப்படியான கற்பனை அல்ல. மறுகாலனியாதிக்கத்திற்கெதிராக களத்திலிறங்காத வரை இது தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.</p><p align="justify"><br />"வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று நினைப்பவர்களின் நோக்கத்தை சிறுபிரிவினர் விரும்பாதது போலத் தெரிகிறது.... மீதமுள்ள சமூகத்தினருக்காக முடிவெடுக்க சிறுபிரிவினருக்கு உரிமையிருக்கிறதா என்பதே என் கேள்வி" என்கிறான் டாடா. ரத்தன் டாடா முடிவெடுத்து விட்டார் கார் தயாரிக்க, அதுவும் லட்ச ரூபாய்க்கு மக்களின் வாழ்க்கைததரத்தை உயர்த்துவதற்காக. அவர் முன்னரே சொன்னது போல் குறைவான லாபத்தை அவர் ஏற்பார், தியாகங்களோடு, உயர்ப்பலியையும் நந்திகிராம், சிங்கூர் மக்கள் ஏற்க வேண்டும்.</p><p align="justify"><br />இன்று நீதிமன்றத்தில் இந்த சிபிஎம் குண்டர்கள் வைத்த டாடாவின் குறைந்த லாபத்தையும், மக்களின் அகதிகளாக வெளியேற்றப்படுவதையும் சரிபார்த்த "நீதிமான்கள்" நிலத்தை கையகப்படுத்தியது சரிதான் என்று அதனை எதிர்த்து தொடர்ந்த 11 வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டது.</p><p align="justify"><br />மக்கள் கார் (!?) புரட்சிக்கு பின்னாலுள்ள பிளாஷ் பேக்கை பார்ப்போம். "2003ம் ஆண்டு ஒரு நாள் மும்பையில் இரவு மழையின்போது சென்று கொண்டிருந்தார் டாடா. அப்போது ஒரு இளந்தம்பதி இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார்களாம். மழைநேரத்தில் இந்த அபாயகரமான பயணம் அவர் மனதில் விதையாகி தற்போது மரமாகிவிட்டதாம்"</p><p align="justify"><br />அய்யா, புரட்சி இப்படி ஒரு முதலாளியின் செரிக்காத வாயு நாற்றத்திலிருந்து எழாது.</p><p align="justify"><br /><span style="color:#ff0000;"><strong>புரட்சி என்பது மக்களின் போர்க்குரல், எரிமலையின் சீற்றம். இந்த சீற்றம் நிகழும் அன்று காம்ரேடு டாடாக்களும், அவர்களின் பாதந்தாங்கிகளாக அருவருடிகளும், போலிகளும் சமாதியாகிக் கொண்டிருப்பார்கள்.</strong></span></p><div align="justify"></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-69908014818547051092008-01-21T23:10:00.001-08:002008-01-21T23:12:43.363-08:00விபச்சாரத்தின் தரகன் எய்ட்ஸின் மருத்துவனா?<div align="justify"><br /><span style="color:#000000;"><strong><u>எச்சரிக்கை! எய்ட்ஸ் வியாபாரிகள்</u></strong></span></div><span style="color:#000000;"><u><div align="justify"><br /></u></span><span style="color:#ff0000;"><strong>10 ஆண்டுகளுக்கு முன் புதிய கலாச்சாரத்தில் வந்த "விபச்சாரத்தின் தரகன் எய்ட்ஸின் மருத்துவனா?" என்ற கட்டுரை தற்போது ஆணுறை வியாபாரத்திற்கு NGO கள் தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கும் காலத்தில் மறுபதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என பிரசுரிக்கப்பட்டு உள்ளது. இதில் என்ன கூடுதல் பொருத்தம் என்றால் அன்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சராக கருணாநிதி என்பது. இன்றும் இவர்கள் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன முன்னேற்றம் என்றால் லட்சக்கணக்கான கோடியினை தங்கள் முதலாளிகளான பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்படுத்திய இவர்கள் தங்களது சொத்தை பல்லாயிரக்கணக்கான கோடியாக உயர்த்தியதும் 83 கோடி இந்திய மக்களின் தினசரி வருமானத்தை ரூ 20 ஆக ஆக்கியதும் தான்.</strong></span></div><div align="justify"><br />ஐம்பதாம் ஆண்டு சுதந்திரத்தின் (?) விழாவைக் கொண்டாடும் ஆட்சியாளர்கள் நாடெங்கும் 'தேசபக்தி' பிரச்சாரம் செய்கிறார்களோ இல்லையோ, எய்ட்ஸ் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.</div><div align="justify"><br />இருபத்தியோராம் நூற்றாண்டை நோக்கி மக்களை இழுத்துப் போக இருபத்தியோரு சானல்களை திறந்து தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்று ஆரம்பித்தபோது எதிர்த்து விமர்சித்தவர்களைப் பார்த்து, "உலக நாடுகளோடு போட்டி போட்டு முன்னேற இதெல்லாம் அவசியம், சும்மா குறைசொல்வதை விட்டு பாசிட்டிவ்வான விசயத்தைப் பாருங்கள்", என்று அறிவுரை கூறினார்கள் அமைச்சர் பெருமக்கள். இவர்கள் தீட்டிய திட்டங்களினால் ஏழை, எளிய மக்களுக்கு என்னடா பாசிட்டிவ்வான சங்கதி என்று எட்டிப் பார்த்தால் நாடு முழுக்க ஓரே எச்.ஐ.வி பாசிட்டிவ் ஆக இருக்கிறது.</div><div align="justify"><br />"லாரி வாகன தொழிலாளர்கள் தான் அதிகம்; இல்லை நடுத்தர வர்க்க ஆசாமிகளின் எண்ணிக்கையும் அதிகம்; பெண்கள்; குழந்தைகள் தப்பவில்லை என்று மக்களிடம் சதவிகித கண்க்கைக் காட்டிவிட்டு, எய்ட்ஸின் சமூக தோற்றுவாய்க்கு காரணமான அரசும், ஆளும் வர்க்கமும் தப்பித்துக் கொள்கிறது.</div><div align="justify"><br />எந்தவொரு சமூக சீரழிவும் அரசாங்கத்தின், அதிகார வர்க்கத்தின் துணையின்றி நடப்பதில்லை என்பது நாடே அறிந்த சங்கதி. சாராயாம், சூதாட்டம், சுரண்டல் லாட்டரி, ஆபாச சினிமா, ஆபாச புத்தகம், விபச்சாரம் என ஒவ்னொன்றையும் மெல்லமெல்ல அறிமுகப்படுத்தி தொழிலாக்குவது பின்பு அது சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தி பிரச்சினைகள் கிளம்பியவுடன் "இனி என்ன செய்வது? சாராயத்தை ஒழிக்க முடியுமா? விபச்சாரத்தை ஒழிக்க முடியுமா? ஜனங்கதான் இதுக்கெல்லாம் போகாம இருக்கனும்; அவங்கதான் விரும்புறாங்க", என்று பழியை மக்கள் மீதே போட்டு, மேற்பூச்சு நடவடிக்கைகள் எடுப்பதுதான் அரசாங்கத்தின் வாடிக்கை.</div><div align="justify"><br />சிகரெட் பெட்டியில் "புகை உடல்நலத்திற்கு தீங்கு" என்று எழுதி வியாபாரம் செய்வதுபோல, மதுப் புட்டியில் "குடும்பத்தைக் கெடுக்கும்" என்று எழுதி வியாபாரம் செய்வது போல "எய்ட்ஸை தடுக்க நிரோத் உபயோகியுங்கள்" என்று எய்ட்ஸ் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ற அரசும், தன்னார்வ அமைப்புகளும். ஒழுக்கம், அன்பு, அகிம்சை என்ற பாதையில் தொடர்ந்து முன்னேறிய "கதர் வியாபாரிகள்" இவ்வளவு சீக்கிரம் நிரோத் வியாபாரிகளாக வளர்ந்திருக்கிறார்கள் என்றால், எல்லாம் புதிய பொருளாத கொள்கையின் மகிமைதான்.</div><div align="justify"><br />அன்னிய மூலதனத்தைப் புகுத்தி விவசாயம், கைதொழில், சிறு தொழில்களை நசுக்கி நாசமாக்கி ஆயிரக்கணக்கான மக்களை குடும்பம் குடும்பமாக விபச்சாரத்தில் ஈடுபடுமளவுக்கு வாழ்க்கையை சீரழித்தது யார்? இதற்குக் காரணமான இந்த அரசாங்கமும், அதிகார கும்பலுக்கும் "எய்ட்ஸை" பற்றி விழிப்புணர்வூட்ட எந்த அருகதையும் கிடையாது என்பது ஒருபுறமிருக்க இவர்களின் அணுகுமுறையே, எய்ட்ஸை ஒழிக்கப் போவதில்லை என கட்டியம் கூறுகிறது.</div><div align="justify"><br />எய்ட்ஸை ஒழிப்பதைவிட ஆணுறை விற்பதிலேயே அரசாங்கம் குறியாய் இருக்கிறது. இது மிகையில்லை. வக்கிர சிந்தனைகளை வாரி வழங்க வகைவகையான சானல்கள், ஆபாச திரைப்படக் காட்சிகள், நட்புத் தொலைபேசி என்ற பெயரில் பேச்சு விபச்சாரம், பாலியல் சுற்றுலா என்று அனைத்தையும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டே மக்களிடம் "மனக் கட்டுபாடு அவசியம்" என்று இரட்டை வேடம் போடும் இந்த அயோக்கியத்தனத்தை ஒழிப்பதல்லவா முதல் அவசியம்.</div><div align="justify"><br />சமீபத்தில் மகாலிங்கபுரத்தில் சிறுவர்கள் விபச்சாரம் பற்றி தெய்தி வெளியே வந்தபோது இந்திய சுற்றுலாத் துறை, மற்றும் காவல் துறை அதிகாரிகள் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தொட்டு உதிர்த்த வாக்குமூலம் இது, "வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், அவர்களின் வருகையே நின்றுபோகும். சுற்றுலா வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகையால் குற்றவாளிகளை கடுமையாக ஏதும் செய்ய முடியாது"</div><div align="justify"><br />பார்த்தீங்களா? எவன் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன கல்லா பெட்டிக்கு காசு வந்தால் போதும் என்று அரசியல் விபச்சாரம் செய்யும் இந்த ஆளும்வர்க்க கும்பலா எய்ட்ஸை ஒழிக்கப் போகிறது?!</div><div align="justify"><br />இந்திய கலாச்சாரம், புனிதம் என பொய்த்திரைகள் களைந்து கூட்டாளி நிர்வாணப்பட்டு நிற்கும் போது பங்காளி பார்த்துக் கொண்டிருப்பானா? எய்ட்ஸின் பிதாமகன் அமெரிக்கா (USAID) உடுக்கை இழந்த இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. </div><div align="justify"><br />குறிப்பாக தமிழ் நாட்டில் வி.எச்.எஸ் (வாலண்டரி ஹெல்த் சர்வீஸஸ் என்ற தன்னார்வ அமைப்பிற்கு 36 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து எய்ட்ஸ் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கு ஆள் அமர்த்தியுள்ளது. யாரால் எய்ட்ஸ் தோன்றியதோ, அவனே இங்குவந்து யார், யாருக்கு 'எய்ட்ஸ்' இருக்கிறது என்று அக்கரை எதிர்க்கத் தோன்றுமா? இந்தியாவின் உறவு கொள்கை வரை ஆராய்வதற்கு அமெரிக்காவுக்கு இல்லாத உரிமையா?</div><div align="justify"><br />அதாவது வியாபாரம் என்பது கேவலமில்லையாம், விபச்சாரி என அழைப்பதுதான் பாவமாம். ஆனால் பாலியல் தொழிலாளர் (Sex - worker) என பங்குவமாக அழைக்கச் சொல்கிறது. இந்த அறிவாளிகளின் அகராதிப்படி இனி திருடனை திருடன் என்று அழைக்கக் கூடாது. களவுத் தொழிலாளி என கவுரவமாக அழைக்க வேண்டும்.</div><div align="justify"><br />புதுப்பட்ஜெட் தயாரித்து ப.சிதம்பரம் சொன்னதுபோல, இனி கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. அப்படியே வெளுப்பாக்கி கொள்ளலாம் என்றார். அதன்படி விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. எனவெ அதையும் ஒரு வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எந்தச் சீரழிவையுமே ஒழிப்பதற்கு பதில், அதை ஒரு தொழிலாக ஆக்குவதிலேயே தன்முனைப்பைக் காட்டுகிறது அரசாங்கம்.</div><div align="justify"><br />எய்ட்ஸ், ஊழல் எதுவானாலும் "பாதுகாப்பாக விளையாடுங்கள்" என்பதையே பண்பாடாக உருவாக்குகிறது அரசு. இதற்கான வேலைகளையும் மும்மூரமாக நடக்கிறது.</div><div align="justify"><br />மைல் கணக்கில் நடந்துபோய், மணிக்கணக்கில் காத்திருந்து ரேஷன் அரிசி வாங்கிவரும் சிரமத்திற்கு மாற்று ஏற்பாட்டிற்கு வழி செய்யாத அரசு, கைக்கெட்டும் தூரத்தில் ஆணுறைகளை அள்ளிக் குவிக்கிறது.</div><div align="justify"><br />இவர்களின் 'எய்ட்ஸ் கட்டுப்பாட்டை' நிரோத் அட்டை கவர்ச்சியே எடுத்தெறியும் அளவுக்கு, தொழில் சூடு பிடித்துள்ளது. பிரபலங்கைன் டி.வி விளம்பரம் முதல், விலாசம் எழுதப்படாத (இன்லெண்ட்) உள்நாட்டு காகிதம் வரை எய்ட்ஸ் எச்சரிக்கையுடன் நிரோத் விளம்பரம் இளைய பாரதத்திற்கு வழிகாட்டுகிறது. தனித்தனி ஊசி, இலவச பரிசோதனை, இன்னும் ஒரு படி மேலேபோய் வரலாற்றில் பதிக்குமளவுக்கு சாலையோரங்களில் மரங்களை நட்ட பெருமை அசோகருக்கென்றால், ஆணுறை தானியங்கி நட்ட பெருமை கருணாநிதிக்கு எனுமளவுக்கு அப்படியொரு கட்டுமான வேலை நாடெங்கும் நடக்கிறது.</div><div align="justify"><br />பாவம் இதையெல்லாம் கண்ணாரக் காண ஒருவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆசையாய் அறிமுகப்படுத்திய ஐந்து நட்சத்திர கலாச்சாரம் இவ்வளவு சீக்கிரமாய் எச்.ஐ.வி பாசிட்சிவாக மலரும் என்று தெரிந்திருந்தால், போயும் போயும் போபர்ஸ் பீரங்கியில் பெயரைக் கெடுத்துக் கொண்ட ராஜீவ் காந்தி தேச பாதுகாப்புக்காக ஒரு ஆணுறை கம்பெனி ஒப்பந்தத்திலேயே பணத்தை கமுக்கமாக அள்ளியிருக்கலாம். அதை அளவிற்கு எய்ட்ஸை ஒழிப்பதற்கான அடிப்படையை மாற்றாமல், நோய்க்கு உறை தைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் வியாபாரிகள்.</div><div align="justify"><br />இதில் பத்திரிகையில் வாளிப்பான உடலையும் , எலும்பு துருத்திய உடலையும் பக்கம் பக்கமாக போட்டு, இப்படி இருந்தவனை, இப்படி ஆக்கிவிட்டது "எய்ட்ஸ்" என்ற விளம்பரம் வேறு; ஆபத்தைத் தடுக்க ஆட்சியாளர்களுக்கு தெரிந்த ஒரே வழி "எய்ட்ஸ்க்கு நிரோத்; இந்தியாவிற்கு காந்தியம்"</div><div align="justify"><br />எலும்பும் தோலுமாக இருக்கும் தொழிலாளி; எப்பவுமே துருத்தி இருப்பதற்கு யார் காரணம்? எய்ட்ஸா? அரசா? நமக்குத் தெரியும் எய்ட்ஸை வியாபாரம் செய்யும் அரசும், அதிகார வர்க்கமுமே அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம்; இனியும் நம்முடைய இரத்தத்தை பசிசோதித்துக் கொண்டிருப்பதில் பலனில்லை; இந்திய ஆளும் வர்க்கத்தை ஒரு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தாமல் எய்ட்ஸ் உள்ளிட்ட எதற்கும் தீர்வில்லை.</div><div align="justify"><br />- சித்தன்</div><div align="justify"><br />நன்றி புதிய கலாச்சாரம் </div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-31609729603173059512007-12-18T09:23:00.000-08:002007-12-18T20:06:35.835-08:00"தோழர் ஸ்டாலின்" - வெல்லமுடியாத சகாப்தம்<p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguvzB2XtWfHSZfSAopthhAyzZLvzQpXoBAom_rF735pUnBTxeRYrERCxmyiJueUwI93dq_rlPFQr8N5jbOazn8Nt0QF13QBnxRaruWIlcWDOZN8EhgKur2K5bqyrro2MIefkv1AzYu_V8/s1600-h/stalin.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5145179549096905234" style="CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguvzB2XtWfHSZfSAopthhAyzZLvzQpXoBAom_rF735pUnBTxeRYrERCxmyiJueUwI93dq_rlPFQr8N5jbOazn8Nt0QF13QBnxRaruWIlcWDOZN8EhgKur2K5bqyrro2MIefkv1AzYu_V8/s320/stalin.JPG" border="0" /></a></p><div align="justify"><br />ஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. </div><div align="justify"><br />பள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் "கோபா"</div><div align="justify"><br />1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு "டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது" என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.</div><div align="justify"><br />1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் "தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு" என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு "இரும்பு மனிதன்" எனும் பொருள் கொண்ட "ஸ்டாலின்" என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் "ஸ்டாலின்" என்ற பெயர் இணைக்கப்பட்டது.</div><div align="justify"><br />தோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான். </div><div align="justify"><br />1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.</div><div align="justify"><br />உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.</div><div align="justify"><br />முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி " இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்" என்றார். உடனடியாக குழந்தைகள் "ஆறுமாதம் சிறை கிடைக்கும்" என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.</div><div align="justify"><br />உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது.<br />.....</div><div align="justify"><em>நாடுகள் -----------1929 ---- 1930 ----- 1931 ------ 1932 ------1933</em></div><div align="justify"><em>..</em></div><div align="justify"><em>அமெரிக்கா -----------100 -----. 80.7 ---- 63.1 ------- 59.3 -------64.9</em></div><div align="justify"><em>பிரிட்டன் -----------100 ------ 92.4 ------ 83.8 ------ 83.8 -------- 86.3</em></div><div align="justify"><em>ஜெர்மனி ----------100 ------- 88.3 ------- 73.7 ----- 59.8 -------- 66.8</em></div><div align="justify"><em>பிரான்ஸ் ------------100 ------ 100.7 ---- 89.2 ------- 99.3 - ------- 77.4</em></div><div align="justify"><em>சோவியத் யூனியன் -----100 ---- 129.2 ------ 161.9 ---- 184.7 -- ----- 201.6<br /></em>..</div><div align="justify">-(ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)<br />டிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.</div><div align="justify"><br />இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.</div><div align="justify"><br />'கிரெம்ளினைக் கைப்பறுவேன்' என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.</div><div align="justify"><br />இந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது? கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!</div><div align="justify"><br />ஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம். .</div><div align="justify"><br />ஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.</div><div align="justify">..<br />ஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.</div><div align="justify"><br />ஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.</div><div align="justify"><br />1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.</div><div align="justify"><br />உண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.</div><div align="justify"><br />சோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.</div><div align="justify"><br />எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.</div><div align="justify"><br />மார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது. </div><div align="justify"><br /><span style="color:#ff0000;">உலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.</span> </div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-26036361920317359372007-11-29T21:49:00.000-08:002007-11-29T21:58:39.837-08:00அடிமைத்தனங்களே நாகரிகமாக!<div align="justify"><strong><span style="font-size:130%;">சாதிய கட்டுமானங்களை மயிரளவும் பிளக்காத ஏகாதிபத்திய படிமானங்கள்</span></strong></div><strong><span style="font-size:130%;"></span></strong><div align="justify"><br />இது இருபத்தோராம் நு¡ற்றாண்டு இங்கே யார் சாதி பார்க்கிறார்கள்? சாதியை கேட்பதே நாகரிகக் குறைவு.சொல்லப்போனால் உங்களை போன்றவர்கள்தான்இல்லாத பிரச்சனையை பற்றி பேசுகின்றீர்கள்.</div><div align="justify">..</div><div align="justify"></div><div align="justify">"கல்வி சாதியை ஒழிக்கும்,அவர்களூக்கு என்ன குறை? அரசாங்கம் அவர்களுக்கு எல்லா வசதியும் தான் தருகின்றதே!"சொல்லப்போனால் பெண்கள் எல்லாதுறையிலும் தான் முன்னேறிவருகின்றார்கள்.பிற்கலத்தில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் அளவுக்கு ஆகப்போகுதுன்னு மட்டும் பாருங்க! இது ஐ.டி.காலம் புரிஞ்சுகோங்க!</div><div align="justify">..</div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;">இப்படிப்பட்ட பேச்சுக்கள் தான் மானங்கெட்ட இந்தியத்துக்கு பூ வைத்து அழகு பார்க்கின்றன.என்ன தான்சப்பைகட்டு கட்டினாலும் வருணாசிரம வெறியை மொத்தமாய் குத்தகை எடுத்திருக்கும்,பார்ப்பனீயத்தை வீழ்த்தாமல் சமத்துவம் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல சம்பவங்கள் நிகழ்த்தபடுகின்றன எனலாம்.</span></div><div align="justify">..<br />விழுப்புரம் மாவட்டம்,சின்னசேலம் அருகே உள்ள மரவாநத்ததை சேர்ந்தவன் சின்னசாமிகவுண்டன்.இவனுடைய இரண்டாவது மகள் சுதா கல்லூரியில் படிக்கும் போதே நாயக்கர் சாதியை சேர்ந்த தமிழ்ச்செல்வனை காதலித்து இருக்கிறார்.படிப்பு முடிந்ததும் இமச்சல பிரதேசத்தில் வேலைகிடைத்துவிடவே,காதலுக்கு வீட்டில் அனுமதி கிடைக்காததால் தமிழ்ச்செல்வனின் குடும்ப சம்மதத்தோடு திருமணம் நடந்து விட்டது.எட்டு மாதம் கழித்து வளைக்காப்புக்காக தமிழ்ச்செல்வனின் சொந்த ஊரான ஈரோட்டுக்கு வந்திருக்கிறார்.</div><div align="justify">..<br />இத்தகவல் தெரியவரவேசின்னசாமிகவுண்டனும் அவனுடைய மூன்றவது மகன் சங்கரும் சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.சுதா விட்டுக்கு வந்ததும் அவருடைய அப்பனும் தம்பியும் சேர்ந்து கடப்பரையால் அடித்து கொன்றிருக்கின்றனர். தப்பித்தவறி குழந்தை உயிருடன் பிறந்துவிடக்கூடாது என்பதற்காக வயிற்றிலும் அடித்திருக்கின்றார்கள். </div><div align="justify">..<br />------------------------------------------------------------------------------------------------</div><div align="justify"></div><div align="justify">அது எல்லாம் படிக்காத முட்டாள் கிராமத்து என்று வாய்கிழிய பேசுபவர்கள் தெரிந்து கொள்ளட்டும் சின்னசாமிதான் படிக்காதவன் முட்டாள். சரி அவனுடைய மகன் சங்கர் யார் தெரியுமா?நன்றாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரியும் அடிமைகளில் ஒருவன்.28 வயதான சங்கர் சாதியை ஒழிக்கும் படிப்பை படித்துவிட்டு"ஆபீஸ் டைகர்"என்ற பன்னாட்டு நிறுவனத்தில் சென்னை ஒன்றில் அம்18,000 சம்பளம் வாங்கும் மேற்பார்வையாளன்.</div><div align="justify">..<br />சாதீய கட்டுமானங்களை மயிரளவும் பிளக்காத இந்த நாகரீகம்,இந்த அடிமைத்தனம் பார்ப்பனீயத்தை போற்றி பாதுகாத்து வருகின்றன.ஏகாதிபத்தியமும் பார்ப்பனீயமும் தண்டவாளங்களை போல செயல்படுகின்றன.ஒன்றிற்கு ஒன்று பாதுகாப்பு அரணாக இருக்கின்றனன்<br />..<br /><strong>இந்த இடத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவது முக்கியமானது இரண்டு 1.பாலின சமத்துவம் 2.நட்பு</strong></div><div align="justify">..<br />" இப்போது பெண்கள் தான் எல்லா விசயத்திலும் முன்னாடி இருக்காங்க.பஸ், ரயில்எல்லவற்றிலும்பெண்களுக்குதனிசலுகை,தியேட்டரில் டிக்கட் எடுப்பதிலிருந்து பேங்க் க்யூ வரை பெண்களுக்கு சலுகை தான்.பெண்கள் முன்னே வரணும்ங்கிறதுக்காக அரசு என்னனவோ திட்டம் போடுது.அதிகமா இடம் கொடுத்தது தப்பா போச்சு,துளிர்விட்டுபோச்சு,நம்ம கலாச்சாரத்தையே கேவலப்படுத்தறாங்க "</div><div align="justify">..<br />இப்படிப்பட்ட ஆசனவாய் அரிப்புகளை பார்ப்பனீயசெரிப்பில் கழிவாகிப்போன ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் கூடத்தான் சொறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.பேருந்தில் பெண்களின் இருக்கைகளில் உட்கர்ந்து கொண்டு எழ மறுக்கும் ஆண்கள் ஆண் உரிமையை பேசுகிறார்கள்.ஆடுகள் அதிகமாகி விட்டால் எவ்வளவு தான் சாப்பிடுவதென ஓநாய்கள் கவலைப்படுகின்றன.</div><div align="justify">..<br />பெண் பிறப்பு முதல் இறப்பு வரை நுகர்பொருளாக்கப்படுகின்றார்.பல இடங்களில் பொருளை பார்த்தவுடனேயே புதை குழிக்கு அனுப்பப்படுகின்றது.</div><div align="justify"></div><div align="justify">பெண்களுக்கென பல்லாங்குழி,தாயம்,கண்ணாமூச்சி,போன்ற உடலை வலுச்சேர்க்காத விளையாட்டுக்களே ஒதுக்கப்படுகின்றன.விளையாட்டு என்பது உடலையும்,மனதையும் வலுப்படுத்தவதாயிருக்க வேண்டும்.விளையாட்டுக்கள் மறந்து கூட பெண்களுக்கு வலுச்சேர்த்திடக்கூடாதென்பதில் தீவிரமாய் இருக்கிறது இச்சமூகம்.குறிப்பிட்ட வயது எட்டியவுடன் என் பெண் வயதுக்குவந்துவிட்டாள் எனக்கூறி நேரடியகவே விற்பனை சரக்ககவே மாற்றுகின்றது.இந்த வயதில் புதிதாய் முளைக்கின்றது கேள்விகள்"பொம்பளை பிள்ளைன்னாஅடக்கஒடுக்கமா இருக்கணும்".என் பெண்ணின் உடலில் எற்பட்ட அறிவியல் மாற்றத்தை ஏன் மற்றவனுக்கு தெரிவிக்கவேண்டும் என எந்த அப்பனும் நினைப்பதில்லை.</div><div align="justify">..<br />கல்லு¡ரிக்கு அனுப்பப்படும் போது ஆண்களுக்கு போதிக்கப்படாத கற்பும்,ஒழுக்கமும் பெண்களுக்கு மட்டும் அறிவுறுத்தப்படுகின்றன.கேட்கும் கேள்விகளுக்கு நான் விரும்பும் பதிலைத்தான் தரவேண்டும் இது தான் இச்சமுகம் போட்டிருக்கும் கட்டளை.கல்லூரியிலும் சரி அலுவலகங்களிலும் சரி ஆபாசமாக பேசுவதும்,தரக்குறைவாக நடந்து கொள்வதும் ஆண்களின் பிறப்புரிமையாகவும் இதை பெண்கள் அமைதியாகவும் இருத்தலே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அலுவலகத்தில் ஒரு ஆண் நண்பருடன் பழகுவது என்பது எண்ணளவில் விபச்சாரத்தனமாக நடந்து கொள்வது அங்கீகரிக்கப்படுகின்றது.அதாவது ஆண் நண்பனை கேள்விக்குள்ளாக்குவது,அவனின் கிண்டல்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளுதல் போன்றவையே எண்ணளவில் விபச்சாரத்தனமாகும்.</div><div align="justify">..</div><div align="justify"></div><div align="justify">சிலபெண்கள் பன்னாட்டு மூலதனத்தின் வரவால் ஆடை குறைப்பிலும்,தினம் ஒரு ஆண் என்றபடி சுற்றுவது பெண்ணுரிமை அல்ல,இது மாறாக பெண்ணடிமைத்தனத்தின் மறு முகமாகும்.பெண்ணுரிமை என்பதின் முதல் படியே பெண்ணை பேசவிடுவதே.ஆனால் பேசவிடுதல் என்பது அடக்கப்பட்ட பெண்ணீடமும் சரி,பெண்ணுரிமை என்று ஊர் மேயும் சிலரிடமும் சரி இரண்டிடதிலும் மறுக்கப்படுகின்றது.</div><div align="justify">..</div><div align="justify"></div><div align="justify">ஏனெனில் இந்த இரண்டுமே ஆணாதிக்கதின் வழிகாட்டுதல்களே. ஆணை கேள்விக்குள்ளாக்குவது என்பதே வாயாடி என வழக்கிலுள்ளது. பொறுக்கிகளுக்கு எப்போதும் விபச்சாரண் பட்டம் கிடைப்பதில்லை.ஓடிபோதல் என்பது ஒரு பெண் தான் விரும்பும் துணையை தெரிந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுவதனாலேயே நிகழ்கிறது.துணையை தெரிந்தெடுக்கும் உரிமையை பொறுத்தமட்டில் ஆணுக்கு வழங்கப்படும் உரிமையும்,மன்னிப்பும் பெண்ணுக்கு வழங்கப்படுவதே இல்லை. வாயாடி,விபச்சாரி போன்ற வினைச்சொற்கள் பெயர்சொற்களாக பெண்ணுக்கு வழங்கப்படுகின்றது. கற்பை காப்பதும்,பேச்சை குறைப்பதுமே பெண்மைக்கு இலக்கணமாக கூறப்படுகின்றது.</div><div align="justify">..</div><div align="justify"></div><div align="justify">பாலின ரீதியில் எந்த வேறுபாடு இல்லாதபோதும் தாயாய்,சகோதரியாய்,மனைவியாக இருக்கும் பெண்ணை அடிமையாய் வைத்திருப்பதும் கலாச்சாரம் என்றும், ஒரு பெண் தானே விரும்பும் துணையை தெரிந்தெடுந்தெடுப்பதால் அக்கலாச்சாரம் அழியுமானால் அது ஒழிக்கப்படவேண்டிய கலாச்சாரமே!</div><div align="justify">..</div><div align="justify"></div><div align="justify"><em><span style="color:#ff0000;">பிச்சைக்காரனா ருந்தலும் கவுண்டனுக்குதான் கட்டிக்கொடுப்பேன்.வேற சாதிக்காரனுக்கு கட்டிக்கொடுக்கமாட்டேன் என்ற சின்னசாமியின் வார்த்தைகள் பார்ப்பனீயத்தின் வாயிலில் இருந்து உரத்து கேட்கின்றன.நீ ஒருபொருள்,நான் எதிர்பார்ப்பதை நீ தர வேண்டும்,உனக்கென தனி உரிமை கிடையது, உன்னை உருவாக்கிய எனக்கு அழிக்கவும் உரிமை உண்டு.இதையேதான் முதலாளித்துவமும் சொல்கிறது "இது என்னுடைய நிறுவனம் இங்கு யார் வேலை செய்யவேண்டுமென்பதை நான் தான் முடிவு செய்வேன்".என் மூலதனத்தில் நீ கேள்வி கேட்க உரிமை இல்லை.</span></em></div><div align="justify"><em><span style="color:#ff0000;">..</span></em></div><div align="justify"></div><div align="justify">------------------------------------------------------------------------------------------------</div><div align="justify"></div><div align="justify">2020-ல் வல்லரசாக போகும் இந்தியாவின் தூண்களில் ஒருவனான சங்கர்,இந்தியா எதில் வல்லரசாகும் என்பதை தெள்ள தெளிவாக நிரூபித்திருக்கிறான்..சங்கர் வேலை செய்து வந்த ஆபீஸ் டைகர் என்ற அந்த நிறுவனத்தில் அய்ந்திலக்க சம்பளம் வாங்கும் வேலை அதிகம் செய்யாத பலரில் அவனும் ஒருவன்.<br />..</div><div align="justify"></div><div align="justify">அவனுடைய நண்பர்கள் சொல்கிறார்கள்<em>"எப்போதும் கலகலவென இருப்பான்,முகந்தெரியாத ஒருவனுக்கு ஆயிரக்கணக்கில் உதவி செய்தான்.அவனா இப்படி? </em>கோபம் மனிதனை ஆட்டுவிக்கிறது.</div><div align="justify">..</div><div align="justify"></div><div align="justify">அவர்களின் கேள்வியில் உயிரில்லாததை போலவே அவர்கள் சங்கரின் மேல் கொண்ட நட்பிலும் உயிரிருக்கவில்லை.</div><div align="justify">..</div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;">எங்கெல்ஸ்,காரல்மார்க்ஸ்-ன் நட்பு மக்கள் நலனைஅடிப்படையாக கொண்டது.கோடீசுவரனாகப் பிறந்திருந்தாலும் நட்பிற்காக,கொண்ட அரசியலுக்காக போராடினாரே எங்கெல்ஸ் அவருடைய நட்பை போன்றதல்ல இவர்களுடையது.அலுவலகத்தில் வேலை செய்வதால் என் நண்பன்,ஒன்றாக சாப்பிடுவதால் என் நண்பன்,வேலை முடிந்து நடந்து போகும் போது பேசிக்கொண்டு செல்வதால் என் நண்பன் தோசை,சாராயம் வாங்கித்தந்தால்என் நண்பன் இப்படி விபச்சார சந்தையாக மாற்றப்பட்ட இதனை நட்பு என்றே அழைக்கக்கூடாது.<br /></span>..<br />ஒன்றரை வருடங்களாக நண்பர்களாயிருக்கிறார்களெனில் அவர்கள் எதைத்தான் பேசினார்கள்?பேசிக்கொண்டிருக்கிறார்கள்<em><span style="color:#000000;">."பெண்களை கிண்டலடிப்பது,ஆபாசக்கதைகள் பேசுவது,தரக்குறைவாக நண்பர்களை பேசுவது"</span></em>என்பதை தவிர வேறு எங்கேயும் போயிருக்காது.<em><span style="color:#ff0000;">சொந்த அப்பனாகவேயிருந்தாலும் அரசியல் பேசினால் தான் அவரின் உண்மையன எண்ணத்தை புரிந்துகொள்ளமுடியும்.</span></em></div><div align="justify"><em><span style="color:#ff0000;">..</span></em></div><div align="justify"></div><div align="justify">சாதிவெறி பிடித்தமிருகத்தினால் கண்டிப்பாக நல்ல எண்ணங்களை கொண்டிருக்கமுடியது.அதற்கு தன் முகத்தை காட்ட வேண்டிய அவசியம் அலுவலகதத்தில் இல்லை,வாய்ப்பு கிட்டியிருந்தால் அங்கேயும் சரியாகவே பயன்படுத்தியிருப்பான்.சங்கரின் தனிப்பட்ட சூழ்நிலை காரணம் என கூற முடியாது.சாதி,மதக்கலவரங்களில் கொலை வெறியில் ஈடுபட்டபாசிஸ்டுகளுக்கும் சாதி,மதச்சூழல் தான் எனக்கூறி நியாயப்படுத்த முடியாது.</div><div align="justify">..<br />தனது அக்கா ஒடிப்போனதால் கோபம் வந்து கொலை செய்தானெனில்,தன் அக்காவின் தேவையை நிறைவேற்றாத அப்பன் மீதும்,மக்களின் வாழ்வை சீரழித்த இந்த அரசின் மேல் ஏன் கோபம் வரவில்லை.அவன் செய்த கொலைக்கு காரணம் கோபமல்ல ஆணாதிக்கம் தான்...............</div><div align="justify">..</div><div align="justify"></div><div align="justify">சிலர் சொல்வது போல் கோபம் வந்தால் என்ன செய்வானென்பது தெரியாது என்பதையும் ஏற்க முடியாது,ஏனெனில் மனம் என்பது ஒரு உறுப்பல்ல.கை,கால்,கண் போன்றவை இப்படித்தான் செயல்படவேண்டும் என்ற செயல் முறையின் அடிப்படையை கொண்டது.மனம் என்பது மூளையின் சிந்திக்கும் பகுதி அதை நாம் தான் வளர்த்தெடுக்கவேண்டும்.சாலையில் பெண்ணைப்பார்த்து கிண்டலடிப்பதனாலும்,அலுவலகத்தில் மணிக்கணக்கில்வழிவதனாலும்.ஊர் மேய்வதாலும் மட்டும் ஆணாதிக்க சிந்தனை ஒழியது மாறாக ஊக்குவிக்கவேப்படும்.கை நிறைய சம்பளம் வாங்கினாலும் சங்கம் வைக்க அனுமதி இல்லாத ஐ.டி துறையில் அரசியல் பேசவேண்டிய வாய்ப்பு ஏற்படவில்லை.அதனால் தான் எதிரியை அறிக என்பதற்கு அர்த்தமும் புரியவில்லை.சாதி வெறி பிடித நாயுடன் நண்பர்களாயிருந்திருக்கிறோமென்ற குற்றவுணர்ச்சி ஏற்படவில்லை இனியும் ஏற்படபோவதில்லை தாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும் வரை.</div><div align="justify">..<br />------------------------------------------------------------------------------------------------</div><div align="justify"><span style="color:#ff0000;"><strong>இந்த சமூகத்தில் நாகரீக வளர்ச்சி என்பது உழைக்கும் மக்களுக்கு எதிராகவும்,சாதீய பெண்ணடிமை கட்டுமானங்களை கொண்டதாகவே இருக்கிறது.சீர்திருத்தங்களால் மயிரளவும் பிளக்க முடியாத கட்டுமானத்தை வர்க்கப்போராட்டம் என்ற எரிமலையால் மட்டுமே உடைக்கமுடியும்.</strong></span></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-70918305872928384192007-11-21T09:41:00.000-08:002007-11-20T21:43:36.584-08:00நந்திகிராம் சி.பி.ஐ.(எம்) குண்டர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் !<p align="center"><embed src="http://www.youtube.com/v/y8rPTkYwE4I&rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"></embed></p>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-1792423629395425532007-11-20T21:22:00.000-08:002007-11-20T21:31:59.624-08:00கொள்ளைக்குக் காவல் ஏன்?<p align="center"><embed src="http://www.youtube.com/v/eyCK7mr2CKA&rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"></embed></p><p align="justify"><br /></p><p align="justify">நல்ல மருத்துவ வசதிகளாகட்டும் அல்லது மருத்துவப் படிப்பாகட்டும், அவை என்றுமே காசு உள்ளவருக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது. சமீபத்தில் கூட சென்னைக்கு அருகில் கெளம்பாக்கத்தில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையுடன் புதிதாக ஒரு மருத்துவ நகரையே உருவாக்கியுள்ளனர் <span style="color:#660000;"><strong>செட்டிநாட்டு ராஜ பரம்பரையினர்</strong>.</span> 100 மைல் பரபளவில் நவீன வசதிகளுடன் கூடிய இந்த நகரைக் கருணாநிதி திறந்து வைத்துள்ளார். இந்த மருத்துவ நகரை இவர்கள், ஏதோ ஏழைகளுக்குச் சேவை செய்வதற்காகக் கட்டியது போல கருணாநிதி பேசியுள்ளார். </p><p align="justify">நோயாளிகளைக் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் கொள்ளையடிப்பதற்காகவும், மருத்துவம் படிக்க வரும் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையடித்துக் கோடி கோடியாகச் சம்பாரிக்கவுமே இந்த நகரை இவர்கள் கட்டியுள்ளனர். இதே மருத்துவக் கல்லூரி அண்ணாப் பல்கலைக் கழகம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுக் குறைந்த கட்டணத்தில் படிக்க வந்த மாணவகளைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் தாங்கள் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டுதான் கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் கல்வி வள்ளல் பட்டம் வேறு.</p><p align="justify"><br />தரமான கல்வியையும், மருத்துவ வசதிகளையும் மக்களுக்கு அளிக்கும் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்ட இந்த அரசு அந்தப் பொறுப்பை இந்தக் கொள்ளைக் கும்பலிடம் கொடுத்துள்ளது. இதே மேடையில் கருணாநிதி பேசுகிறார், அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை அரசால் தர முடியாதாம் ஆதலால் இது போன்ற தனியார் நிறுவனங்கள் அந்தப் பொறுப்பை ஏற்க முன் வர வேண்டுமாம். பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகத் திருடனிடமே காவல் பொறுப்பை ஒப்படைக்கிறார்.</p>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-85548551860150256462007-11-19T21:05:00.000-08:002007-11-21T01:39:57.389-08:00சாட்டை இங்கே ராமதாஸ் எங்கே ?<p align="justify">ராமதாஸ் ஆகிய நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம்:</p><p align="justify"><em>1. நான் எந்த காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்!</em></p><p align="justify"><em>2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும், எனது சொந்தச் செலவில்தான் வந்து போவேன். ஒரு கால கட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல் போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனேயொழிய, ஒரு போதும் மற்றவர் செலவில் வந்து போகமாட்டேன்!</em></p><p align="justify"><em>3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால் செருப்புக்கூட சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது!</em></p><p align="justify"><em>4.எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் - எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!</em></p><p align="justify"><em>5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி. இந்த ராமதாஸ் விலை போகமாட்டாள் - இது சத்தியம்! என் தாய்மீது சத்தியம்!</em></p><p align="justify">இதையெல்லாம் உங்கள் டையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி, நான் நடந்தால் என்னை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து, சவுக்கால் அடியுங்கள்!</p><p align="justify"><br /><strong>இந்த சத்தியங்களை மிஞ்சும் வகையில் ராமதாஸ், இன்று ஓட்டுப்பொறுக்கி கட்சியாகவும், குடும்ப அரசியல்வாதியாகவும் ஆனது மட்டுமல்ல, போராட்டம் என்ற பெயரில் பணம் கொழுக்கும் பெரிய NGO ஆக மாறி மக்களை ஏமாற்றி வருகிறார். </strong></p><p align="justify"><br /><strong>இவரையும், இவரைப் போல ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு வருகின்ற விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடைகள் ஆனாலும் சரி இவர்கள் ஆரம்பகட்ட வாழ்க்கை , பேசிய பேச்சுக்களை என்ன வென்று சற்று புரட்டினாலும் தெரிந்து கொள்ள முடியும், இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் என.</strong></p><div align="right">Related:</div><div align="right"><a href="http://tamilarangam.blogspot.com/2007/09/blog-post_22.html"><span style="color:#ff0000;">"அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு"</span></a></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-44649557857693447872007-11-09T22:44:00.000-08:002007-11-09T22:57:11.155-08:00ஆட்சியாளர்களை மாற்றினால் அரசை மாற்ற முடியுமா?<ul><li><div align="justify">சிறப்பு பொருளாதார மண்டலம் நாட்டோடு 'வளர்ச்சி' க்கு என்று சொல்லி ஜெட் வேகத்தில் நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை சுட்டு கொல்லுகின்றனர்.</div></li></ul><p align="justify"></p><ul><li><div align="justify">கோடிக்கணக்கான மக்கள் இறுதிக்கட்ட வாழ்வாதாரமாக தேர்ந்தெடுத்துக்கொண்ட சில்லறை வணிகத்தில் இன்று ரிலையண்ஸ், டாடா, வால்மார்ட் போன்ற பெரிய கம்பெனிகளை அனுமதித்து அவர்களை குப்பைத்தொட்டியில் வீசுவது போல வீசுகின்றனர்.</div></li></ul><ul><li><div align="justify">5 லட்சம் கோடிக்கு அணுசக்தி ஒப்பந்தம் என்கிற வழியில் அடிமைசரத்துகளுடன் வெளிப்படையாக தெரியக் கூடிய 123 ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கின்றனர். இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்தாக வரும் இதனை கடந்த BJP ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று நிறைவேற்றக்கூடிய நிலையில் வந்துவிட்டார்கள்.<br />அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' , பாதுகாப்பு உணர்வுடைய நாட்டிலேயே 2 1/2 சதவீதம் தான் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் உள்ளது, ஆனால் இவர்கள் நம்ம நாட்டில் இருக்கின்ற 3 சதவீதத்தை 7 ஆக மாற்ற போகின்றனராம். அதுவும் 2020-ல் தான் கிடைக்குமாம். ஆனால் நம் நாட்டிலே அதிகமாக உள்ள தோரியத்தை செறிவூட்டி மின்சாரம் கிடைக்க செய்வதில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இதில் வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் மின்சாரத்தை பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்று உடனடியாக 123 இல்லைன்னா நாடே இருட்டாகி விடும் என்கிற சூழ்நிலையும் இல்லை என்ற இரண்டு அம்சங்களையும் தவிர்த்து விட்டு கூட பார்ப்போம்.<br />3 யை 7 ஆக மாத்துவதை அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' நாட்டில் செய்வதற்கே அந்நாட்டு மக்கள் ஒத்துக்குறது இல்லைங்கிற சூழ்நிலையில் அதை இந்தியா போன்ற ஏழை நாட்டில், பாதுக்காப்பு உணர்வுணா என்னவென்று தெரியாத நிலையில் ஆகப் பெரும்பாண்மை மக்களை வைத்து உள்ள நாட்டில் கொண்டு வரப்போறேன் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம். உலகம் முழுவதும் விலை போகாத இந்த உலைகள் மூலம் 5 லட்சம் கோடி கிடைக்கிறது என்றால் விடுவார்களா.<br />இது வெறும் 3 T0 7 என்கின்ற விஷயத்துக்கும் மட்டும். ஆனால் இவர்கள் சொல்கின்ற இராணுவ ஒப்பந்தத்தை எடுத்து கொண்டால் அதில் இருக்கின்ற அடிமைச் சரத்துகளை பற்றி நினைத்துப்பார்க்க கூட முடியாத அளவுக்கு, வெளிப்படையாகவே இந்திய நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில் உருவாக்கி உள்ளார்கள்.</div></li></ul><p align="justify"></p><ul><li><div align="justify">அடுத்து நாட்டுல 83 கோடி பேருக்கு தினமும் ரூ20 சம்பளம் என்கிற லட்சணத்தில் ஆக்கிபுட்டு இவர்கள் சொல்கின்ற GTP 9 சதவிதம், பங்குசந்தை 20,000 புள்ளிகளை தாண்டி பறக்கிறது போன்றவை. ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி என்கிற ஒருத்தன் 2 1/2 லட்சம் கோடியை கொள்ளையடிக்க செய்து உலகின் நம்பர் ஒன் பணக்காரனாக்க தாங்கள் செய்த சாதனையும் சொல்லி 'நாடு வளர்ச்சி' அடைகிறது என்கிறார்கள்</div></li></ul><p align="justify"><br />இப்ப மேலே சொல்லியிருக்கின்ற சிறப்பு பொருளாதார மண்டலம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை- தரகுமுதலாளிகளை அனுமதிப்பது, அமெரிக்க - இந்தியா இராணுவ ஒப்பந்தம் & 123 அக்ரிமெண்ட், தேசிய வளர்ச்சி என்கிற மோசடி பற்றி எல்லா ஆட்சியாளர்கள் ஓட்டுப்பொறுக்கிகள் என்ன கருதுகின்றனர். ஒன்று மின்சாரம் தேவை, வேலைவாய்ப்பு என்ற இரண்டு வார்த்தை கொண்டு சத்த்த்த்த்த்ததததததமாககககககக ஆதரவு குரல் அல்லது மெளனம் இது இரண்டும் தான் பதிலாக வருகிறது.இதனை கொண்டு தான் பதிவின் தலைப்பை விளக்க போகிறோம்.</p><p align="justify"><br />ஆதரவு குரலில் இரண்டு வகையாக இருக்கின்றனர். ஒன்று ஆட்சியில் இருந்தவர்கள் -இருக்கின்றவர்களுடைய நேரடி ஆதரவு. மற்றொன்று கூட்டணி சுகத்தில் இருந்தவர்கள் - இருக்கின்றவர்களுடைய மறைமுக ஆதரவு. இந்த இரண்டு பேருக்கும் மேலே உள்ள விசயங்களை பற்றி தெட்ட தெளிவாக தெரியும். இதுவரை ஆட்சிக்கு வராதவர்களுக்கும் , விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடை அரசியல் வாதிகளுக்கும் மட்டும் தான் இதை பற்றி தெரியாது. </p><p align="justify"><br />அப்ப எதிர்ப்பு என்பதை பேசாத, அரை-குறையாக பேசுவது மாதிரி, தெரியாது என்கிற இந்த லிஸ்டை விரிவாக பார்த்தா புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். இதுல முக்கியமாக ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டியது இதில் பேசாத, அரை-குறை பேசுவது மாதிரி இரண்டு பேருமே ஜான் பெர்க்கின்ஸ் (பொருளாதார அடியாள்) வரைக்கும் தெரிந்த ஆட்சியாளர்கள், பழம் தின்னவர்கள். என்ன வித்தியாசம் என்றால் கொட்டை போட்டவர், போடாதவர் என்பதுதான்.</p><p align="justify"><br />முதல வருகிறவர்களை பார்ப்போம், பல்லாயிரக்கணக்கான கோடியினை இப்படி நாட்டை விற்க துணைபோய் சம்பாதித்த இவர்கள் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. எப்படி பேசுவார்கள் என்றால் நாடு வளர்ச்சியடைகிறது, போய்கொண்டு இருக்கிறது, இளைஞர்களே தியாகம் செய்ய வாருங்கள், ஒளிர்கிறது இந்தியா, தீவிரவாதத்தை நாங்கள் அடக்கியது போல இவர்கள் அடக்குவது இல்லை என்று ஆளே இல்லாத மேடையில் பேசுவது போல பேட்டி கொடுப்பார்கள். என்னா இப்ப இவர்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் 100% பிழைப்புவாதிகள்.</p><p align="justify">இந்த லிஸ்டில் IMF மண்மோகன், ENGLAND சோனியா, கலவர நாயகன் அத்வானி, எட்டப்பன் வாஜ்பாய், பன்னாட்டு நிறுவன வக்கில் சிதம்பரம் & சன், திமுக டிரஸ்ட் ஓனர் , அம்மா டிரஸ்ட் ஓனரம்மா , ஊழல் லாலு, ஹெரிடேஜ் சந்திரபாபு, இன்னும் காங்கிரஸ் அரச பரம்பரை, பா ஜ க அன் கோ வை சேர்ந்த ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.</p><p align="justify"><br />அடுத்து இரண்டாவதாக முழுமையாக நாட்டை விற்று கொள்ளையடிக்காதவர்கள், கூட்டணி சுகத்தில் மட்டும், சிலர் சில மாநிலங்களில் ஆட்சி என இருக்கின்றவர்கள். இவர்களிலும் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. இவர்கள் எப்படி பேசுவார்கள் என்றால் "ஆகக அதெல்லாம் முடியாது", மாற்றுங்க இதை, தள்ளி வைங்க இதை, மக்களே இவர்கள் கொள்கையினை நாம் எதிர்த்து போராடனும், துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாதது, நக்சல் சதி, நாடு தழுவிய போராட்டம், நீதியின் குரல் ஒலிக்கட்டும், மக்கள் புரட்சி வெடிக்கட்டும், தமிழ்நாடு 2020 ( இந்தியா 2020 வீட்டுக்குப் போன பின்) என்றும் முக்கியமாக எங்களால் "இவர்கள் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றும் அடிக்கடி பேட்டியும். அறிவிப்புகளும் செய்வார்கள்.</p><p align="justify"><br />என்னா இப்ப இவர்கள் கட்சியில் பிழைப்புவாதிகளும், சரியான கட்சி என நம்பி சிலரும் இருக்கின்றனர்.தெரியாதவர்களுக்கு தெரியவரும் போது சிலர் சரியான புரட்சிக்கர அரசியலுக்கு வருகின்றனர் அல்லது அதே பிழைப்புவாத அரசியலில் மூழ்கிவிடுகின்றனர்.</p><p align="justify"><br />இந்த லிஸ்டில் போலிக் கம்யூனிஸ்டுகள், ராமதாஸ் குடும்பம், அரசியல் அசிங்கம் வைகோ,வாழும் அம்பேத்கார் திருமா, மாயாவதி மாமி............ போன்றவர்கள் இருக்கிறார்கள்.</p><p align="justify"><br />அடுத்து மூன்றாவதாக பணம் மற்றும் சாதி அடிப்படையில் கட்சி ஆரம்பித்து இன்னும் ஆட்சிக்கே வராதவர்கள், கழிசடையாக இருந்து சொத்து சேர்த்ததை வைத்து கட்சி உருவாக்கி எம்.ஜி.ஆர் போன்ற பேண்டஸி அரசியலை மட்டும் வைத்தே இன்றும் மக்களை மடையர்களாக்க களத்தில் இறங்கி இருப்பவர்கள். மேலே இருக்கின்ற விஷயத்துக்கே போக மாட்டார்கள். </p><p align="justify">இவர்கள் பேச்சு எப்படி இருக்கும் என்றால் 'ஜிபூம்பா' ஸ்டையில இந்தியாவை மாத்திடலாம் என்பதும், நாங்க வந்தா திருந்திடும் என்பதும் தான். எப்படி இப்படி கேணத்தனமாக யோசிக்கிறார்கள் என்கிறீர்களா, அடிப்படையே எதுவும் தெரியாது என்கிற காரணம்தான்.</p><p align="justify"><br />இந்த லிஸ்டில் கார்த்திக் தேவர், கருப்பு காவி விஜயகாந்த், சமத்துவ நாடார் சரத்குமார், புதிய நீதிக் கட்சி சங்கம் போன்றவர்கள் இருக்கிறார்கள்.</p><p align="justify"><br /><span style="color:#ff0000;">இந்த மூன்று லிஸ்டில் இரண்டாவதாக நீதி, போராட்டம் என்கிறவர்கள் ஒரு கட்டத்தில் சொத்து பல்லாயிரத்தை தாண்டியதும் அதாவது ஆட்சியினை முழுமையாக அனுபவிச்ச பிறகு முதல் லிஸ்டில் இருக்கின்றவர்கள் மாதிரி மாறிவிடுகிறார்கள்.</span></p><p align="justify"><br /><span style="color:#ff0000;">மூன்றாவதாக எதுவும் விஷயம் தெரியாமல் இருந்தவர்கள் வளர்ச்சியடையந்த உடன் 'ஜிபூம்பா' இனி பலிக்காது என்று இரண்டாவது லிஸ்டில் இருக்கின்றவர்களுடைய நீதி, போராட்டம், தமிழ் என தங்கள் பாதையினை மாற்றி கொள்கின்றனர்.</span></p><p align="justify"><br />இப்படி எல்லா ஓட்டுக் கட்சிகளையும் இந்த மூன்று லிஸ்டில் முழுவதும் வகைப்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். மக்களுக்கான எதையுமே இவர்கள் செய்வதும் இல்லை, செய்யவும் முடியாது. ஏனென்றால் இந்த அமைப்பே தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த லிஸ்டில் உள்ள யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் செயல்படுவது இந்தப் தரகு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்குத்தான்.</p><p align="justify"><br />அப்ப இந்த அமைப்பில் ஆட்சியாளர்களை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. தரகு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் இருக்கக்கூடிய இந்த அமைப்பையே தூக்கியெரிய வேண்டும், அப்போதுதான் பெரும்பான்மையான மக்களின் நலன்கொண்ட ஒரு அரசை அமைக்கமுடியும்.</p>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-61177597621644362042007-11-07T11:32:00.000-08:002007-11-06T23:36:38.046-08:00"புரட்சியைக் காக்க உயிர் வழங்கிய ருஷ்யாவின் தொழிலாளர்களுக்கும் குடியானவர்களுக்கும்"<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC_ov51wVWfe4BSklY_RBq_BEgiwAfEe4YfSub2BKzYhfKkxxgD__ysq6lOGtNwK7QJqrLl52IxV-hY5tMWVUQ2VuU0bK2Y-nD8ZUS-AgJ9J4dwsI89Jmz_fFHXO7pnUTqXC-gveVWZJs/s1600-h/Image(171).jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5129998278149866722" style="CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC_ov51wVWfe4BSklY_RBq_BEgiwAfEe4YfSub2BKzYhfKkxxgD__ysq6lOGtNwK7QJqrLl52IxV-hY5tMWVUQ2VuU0bK2Y-nD8ZUS-AgJ9J4dwsI89Jmz_fFHXO7pnUTqXC-gveVWZJs/s400/Image(171).jpg" border="0" /></a><br /><br /><div align="justify"><span style="color:#ff0000;">"விதியை முடிக்கும் போரில் வீழ்ந்தீர் நீர்</span></div><div align="justify"><span style="color:#ff0000;">மக்கள் விடுதலைக்காக, மக்கள் மானத்திற்காக.</span></div><div align="justify"><span style="color:#ff0000;">உயிர்களையும் அன்புக்குரியவை அனைத்தையும் வழங்கினீர்.</span></div><div align="justify"><br /><span style="color:#ff0000;">நீங்கள் துறந்த உயிரின் மதிக்கப் பெறும் காலம் வரும்.</span></div><div align="justify"><span style="color:#ff0000;">அந்தக் காலம் நெருங்கி விட்டது:</span></div><div align="justify"><span style="color:#ff0000;">கொடுங்கோண்மை வீழும், மக்கள் எழுவர்.</span></div><div align="justify"><span style="color:#ff0000;">மாண்பும் விடுதலையும் பெற்று.</span></div><div align="justify"><br /><span style="color:#ff0000;">செல்க சோதரரே, சான்ற வழியைத் தேர்ந்தீர் நீர்.</span></div><div align="justify"><span style="color:#ff0000;">உங்கள் கல்லறையில் சபதம் ஏற்கிறோம்,</span></div><div align="justify"><span style="color:#ff0000;">விடுதலைக்காகவும் </span></div><div align="justify"><span style="color:#ff0000;">மக்களின் இன்பத்துக்காகவும் </span></div><div align="justify"><span style="color:#ff0000;">போர் புரிவோம் என்று."</span></div><div align="justify"><span style="color:#ff0000;"><br /><br /></span></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-64587187272673170652007-10-08T09:03:00.000-07:002007-10-07T21:06:42.276-07:00'தவறு செய்த தொழிலாளர்களுக்கு கருணை காட்ட வேண்டாம்' -- உச்சநீதிமன்றம் தீர்ப்பு.<div align="justify">குஜராத் அம்புஜா சிமெண்ட் கம்பெனியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கச் சொல்லி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்தான் இப்படிக் கூறப்பட்டுள்ளது.</div><div align="justify"><br />இந்தியா ஒரு ஜனநாயக நாடு (சும்மா பேச்சுக்குக்காவது) என்பதை கேலிக்குள்ளாக்குகிறது இந்தத் தீர்ப்பு. இந்த ஜனநாயக நாட்டில் தான், பெரும்பாண்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கையான இடஒதுக்கீடு, மக்கள்தொகையில் மிகவும் அற்பமான பார்ப்பன மேல்சாதியர்களின் விருப்பத்திற்கிணங்க தடை செய்யப்பட்டது. இந்த ஜனநாயக நாட்டில் தான், பெரும்பாண்மைத் தமிழர்களின் ஆதரவோடு நடைபெற்ற வேலைநிறுத்தம் தடை செய்யப்பட்டது. </div><div align="justify"><br />பல லட்சம் டில்லி சிறு வணிகர்களைக் காலி செய்ய வைத்துத் தனது மகன்களுக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டித் தர ஒரு நயவஞ்சக உத்தரவைப் பிறப்பித்து அதனை நிறைவேற்ற நாட்டின் இராணுவத்தையே ஒரு நீதிபதி பயன்படுத்தியதும் இங்கேதான்.</div><div align="justify"><br />பல லட்சம் வழக்குகள் கிடப்பில் கிடக்க, பல்லாயிரம் மக்கள் குற்றாவாளிகளா இல்லையா என்றே தெரியாமல் வருடக் கணக்கில் சிறையில் கிடக்க, கோடீஸ்வரர்களுக்காகவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்காகவும், உயர் ஜாதியினருக்காகவும் விடுமுறை நாட்களில், நள்ளிரவில் கூட கடைதிறந்துத் தீர்ப்பை வியாபாரம் செய்வதும் இங்கேதான்.<br />இது மட்டுமல்ல கூலி உயர்வு கேட்டுப் போராடினால் சிறை, கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கேட்டுப் போராடினால் சிறை, வேலையை நிரந்தரமாக்கக் கோரினால் சிறை எனப் போராடுபவர்களை, தொழிலாளர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை, மக்கள்தொகையில் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களைச் சட்டப்பூர்வமாக நசுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதும் இங்கேதான்.</div><div align="justify"><br />இன்றைக்குத் தொழிலாளர்களை மனிதனாகக் கூட மதிக்காமல் ஒரு பாசிசத் தீர்ப்பை வழங்கிய இதே நீதி நீதிமன்றம் தான், பாசிச ஜெயலலிதா தனது மனசாட்சிப் படி தண்டனை வழங்கிக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. </div><div align="justify"><br />பதவியிடம் தாழ்ந்து, பணத்திடம் தாழ்ந்து, உயர் ஜாதித் திமிரிடம் தாழ்ந்து, ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களிடம் மேலும் தாழ்ந்து, சொறி நாயினும் கேவலமாக நாறிய போதும், உழைக்கும் மக்கள் மீது மட்டும் வெறிநாயாகப் பாய்கிறது இதன் சட்டங்கள்.</div><div align="justify"><br />இதன் அக்கிரமங்களைப் பொறுத்துக் கொண்டே போனால், மக்களின் அந்தப் பொறுமையை மேலும் சோதிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு, பார்ப்பன, உயர் ஜாதிகளுக்குத் தான் ஓர் அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.</div><div align="justify"><br />இன்றைக்குத் தொழிலாளர்களுக்கு கருணை காட்ட வேண்டாம் என்று தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளட்டும். நாளைக்கு இவர்கள் தொழிலாளர்களின் கருணைக்காக ஏங்க வேண்டிய சூழ்நிலை வரும்போது இவர்கள் வழங்கிய தீர்ப்புகள் இவர்களுக்கே எதிராகத் திரும்பும் என்பதுதான் அது.</div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-81197096729635522912007-10-07T20:56:00.000-07:002007-10-07T21:02:36.020-07:00"நாட்டைக் காவியாக்குவதும் காலனியாக்குவதுமே எங்கள் கொள்கை"<div align="right"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKfjcDE2YVYvTzpAg7QUImmNjKIgH6Fxe5Th8h_RljM4lp19wIs6OZyEPLm7vBFNj9lMZqeJrpCiL6B8lQQn4rh8eQKTl86CxeaTXhBZf4BF-pclbq1JQSIx72pCNtO9wBuuNUG0R6qnA/s1600-h/123-raman.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5118810206341867026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKfjcDE2YVYvTzpAg7QUImmNjKIgH6Fxe5Th8h_RljM4lp19wIs6OZyEPLm7vBFNj9lMZqeJrpCiL6B8lQQn4rh8eQKTl86CxeaTXhBZf4BF-pclbq1JQSIx72pCNtO9wBuuNUG0R6qnA/s400/123-raman.jpg" border="0" /></a> Related:</div><a name="2396506217913212651"></a><div align="right"><br /><a href="http://thesteel.blogspot.com/2007/09/blog-post_30.html"><span style="color:#ff0000;">ராமன் பாலம் - தமிழகத்தை குஜராத்தாக மாற்ற முயலும் இந்துமதவெறியர்கள்</span></a></div><div align="right">..</div><div align="right"></div><div align="right"><span style="color:#ff0000;">உயர் நீதி மன்றம் அல்ல வேதாந்தி மன்றம் !</span></div><div align="right"><span style="color:#ff0000;">இராமன்: தேசிய நாயகனா தேசிய வில்லனா?</span></div><div align="right"><span style="color:#ff0000;">-</span><a href="http://puthagapiriyan.blogspot.com/"><span style="color:#ff0000;">புத்தகப் பிரியன்</span></a> </div><div align="right"><span style="color:#ff0000;">..<br /></span><a href="http://puthagapiriyan.blogspot.com/2007/09/blog-post_30.html"><span style="color:#ff0000;">இந்து மதவெறியை தூண்டும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலினை அம்பலப்படுத்தும் நூல்கள் !</span></a></div><div align="right">..</div><div align="right"><span style="color:#ff0000;"></span></div><div align="right"><a href="http://thesteel.blogspot.com/2007/10/blog-post.html"><span style="color:#ff0000;">தாமரை டிவியின் "நேருக்கு நேர்" நிகழ்ச்சி - கலந்து கொள்பவர்கள்: ராமன் (அயோத்தி,உ.பி.) மற்றும் கிருஷ்ணன்(மதுரா,உ.பி.)</span></a><span style="color:#ff0000;"> </span></div><div align="right"><span style="color:#ff0000;">..<br /></span><a href="http://poarmurasu.blogspot.com/2007/09/blog-post_30.html"><span style="color:#ff0000;">பெரியாரின் மண்ணில் பார்ப்பன மதவெறி நச்சுப்பாம்புகள் தலையெடுக்க அனுமதியோம்!!பொதுக் கூட்டம் & புரட்சிகர கலைநிகழ்ச்சி</span></a><br /></div><div align="right"></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-30158177247443467032007-10-02T08:04:00.000-07:002007-10-02T08:20:44.995-07:00தாமரை டிவியின் "நேருக்கு நேர்" நிகழ்ச்சி - கலந்து கொள்பவர்கள்: ராமன் (அயோத்தி,உ.பி.) மற்றும் கிருஷ்ணன்(மதுரா,உ.பி.)<div align="justify">கிருஷ்ணன்: அடடே ராமனா! என்னப்பா இது..கப்பலே கவுந்திட்ட மாதிரி கன்னத்துல கைவச்சிக்கிட்டு உக்காந்திட்டே..</div><div align="justify"><br />ராமன்: ஒனக்கு விசயமே தெரியாதா? நான் கட்டின பாலத்தை இடிக்கப்போறாங்களாம். பின்னே கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? சொல்லு.</div><div align="justify"><br />கிருஷ்ணன்: நீ எப்ப பாலம் கட்டினே? கொஞ்சம் வெவரமா சொல்லு.</div><div align="justify"><br />ராமன்: சீதையை நான் மீட்டு வருவதற்காக பாலம் கட்டினேனே!</div><div align="justify"><br />கிருஷ்ணன்: என்னது? சீதையை மீட்கவா? ஒன் பொண்டாட்டி எங்கே போனா?</div><div align="justify"><br />ராமன்: எப்பா! அது இப்போ பிரச்சினை இல்லை..பாலத்தை ஒடைக்கப் போறதுதான் பிரச்சினை..அதப்பத்தி பேசு.</div><div align="justify"><br />கிருஷ்ணன்: அது கிடக்கட்டும் கழுதை.. சொல்லுப்பா..ஒன் பொண்டாட்டி எங்க போயிட்டா?</div><div align="justify"><br />ராமன்: சும்மா அதையே நோண்டிக்கிட்டிருக்காத..ராவணன் கூடத்தான் போனாள். கடல் தாண்டி இலங்கையிலே இருந்த அவளை மீட்டுவரத்தான் பாலம் கட்டினேன்.</div><div align="justify"><br />கிருஷ்ணன்: சரி..போவுதுன்னு விட்டுத்தள்ளியிருக்க வேண்டியதுதானே! என்ன எளவுக்குப் போய் கூட்டிட்டு வரணும்? சரி.. நீ அங்கே போறதுக்கு முன்னாடி அங்க பாலம் இருந்திருக்காதே? அப்பறம் எப்பிடி சீதையும் ராவணனும் இலங்கைக்குப் போனாங்க?</div><div align="justify"><br />ராமன்: ராவணன் எல்லாம் அசுரனாச்சே..அவன் சீதையை இடுப்புல வச்சிக்கிட்டு பறந்து போயிட்டான்.</div><div align="justify"><br />கிருஷ்ணன்: ஓகோ..அப்படியா! உன்கிட்டதான் 'எல்லை தாண்டிய பயங்கரவாதி' ஒருத்தன் கெடந்தானே..அனுமான். அவனைப் பறந்து போய் சீதையைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமுல்ல...</div><div align="justify"><br />ராமன்: ஏனோ அப்ப எனக்கு இது தெரியல.. அதான் பாலம் கட்டி போக வேண்டியதாச்சுது. இப்ப பாரு.. அந்தப் பாலத்தையும் இடிக்கப்போறாங்களாம்.<br />கிருஷ்ணன்: பாலம் இப்போ அங்க இருக்கா?</div><div align="justify"><br />ராமன்: இல்ல.. அது தண்ணிக்குள்ள முங்கிருச்சு..</div><div align="justify"><br />கிருஷ்ணன்: என்னய்யா நீ.. நீ கட்டுன பொண்டாட்டியோட ஒழுங்கா வாழ முடியல...நீ கட்டின பாலம் தண்ணில போயிருச்சு..ஒன் கோயில சாதாரண மன்னன் பாபரு இடிச்சிட்டான்... அப்ப என்ன மயித்துல நீ அவதாரம்னு சொல்றானுங்கன்னும் புரியல்...கழுத கிடக்கட்டும்... பாலம்தான் தண்ணில முங்கிடுச்சே...விட்டுத்தொலைக்க வேண்டியதுதானே.. அதனால எதாச்சும் பிரயோசனம் இருக்கா?</div><div align="justify"><br />ராமன்: அது இருந்ததாலேதான் பல முனிவர்களும் ரிஷிகளும் அது மேல 15ஆம் நூற்றாண்டு வரைக்கும் இலங்கைக்குப் போனாங்க..அப்புறம் தண்ணில முங்கினாலும்...இன்னைக்கு அதை வச்சுதான் பிஜேபின்னு ஒரு கட்சி உயிர் பிழைக்க வேண்டிருக்கு..</div><div align="justify"><br />கிருஷ்ணன்: கூமுட்ட மாதிரி உளராதே...15ஆம் நூற்றாண்டு வரைக்கும் அது இருந்துச்சுன்னா..என்னத்துக்குடா ராஜராஜ சோழன் கப்பற்படையை ஏவி ஈழத்தைப் பிடிச்சான்? பொடி நடையாப் போயி ராவி இருக்கலாமே!</div><div align="justify"><br />ராமன்: அப்பிடில்லாம் நாஸ்திகமாப் பேசாதே.. அது இந்துக்களோட நம்பிக்கை!<br />கிருஷ்ணன்: என்னது இந்துவா? அப்பிடின்னா என்னது? நம்ம 2 பேரோட அவதாரத்திலெ இந்த பேரை எங்கயாச்சும் கேட்டிருக்கயா?</div><div align="justify"><br />ராமன்: அதெல்லாம் தெரியாது..வெள்ளைக்காரன் குடுத்த பேரு அது.</div><div align="justify"><br />கிருஷ்ணன்: வெள்ளைக்காரனா? யாரு..வெள்ளையா இருப்பானே அந்தப் பலராமனா?</div><div align="justify"><br />ராமன்: அவன் இல்ல..இது நம்மளல்லாம் விட பலசாலி இங்கிலாந்துக் காரன்..</div><div align="justify">..<br />கிருஷ்ணன்: என்ன இழவோ கிடக்கட்டும்...விசயத்துக்கு வருவோம்..தண்ணில முங்கின பாலத்தை இடிச்சா என்ன? பேர்த்தா என்ன?</div><div align="justify"><br />ராமன்: அது எப்பிடி? அங்கே 1000 வருசத்துக்கு பயன்படும் தோரியம் இருக்குதே!</div><div align="justify"><br />கிருஷ்ணன்: ஓகோ..அப்பிடின்னா பேர்த்து தோரியத்த எடுத்தாலாவது பிரயோசனப்படுமே!</div><div align="justify"><br />ராமன்: இல்ல..இல்ல.. நோண்டுனா தோரியம் கரஞ்சிடும்..</div><div align="justify"><br />கிருஷ்ணன்: லூசு மாதிரி பேசாதே...கரஞ்சு போக அது என்ன கருப்பட்டி மிட்டாயா? அல்லது...பேர்க்காமலே தோரியத்தை நோண்டி எடுக்க அது என்ன புளியங்கொட்டையா? எந்தக் கூமுட்டப் பயலுக இப்பிடி ஒன்கிட்ட சொன்னாங்க?</div><div align="justify"><br />ராமன்: விஸ்வ ஹிந்து பரிஷத் ஆட்கதான் சொல்றாங்க! தோரியத்தை நாம் எடுத்து வல்லரசாகிடக்கூடாதுன்னு அமெரிக்கா சதி பண்ணிதான் பாலத்தை ஒடைக்க சதி பண்ணுதுன்னு போன வாரம் சொல்லிருக்காங்க!</div><div align="justify"><br />கிருஷ்ணன்: நீயும் அந்தப் பரதேசிப்பயலுக சொல்றத நம்பிக்கிட்டுக் கிடக்கே! ஏண்டா..அமெரிக்காவுல இருந்து டாலர் டாலரா நன்கொடை வாங்குற நாதாரிங்க 'அமெரிக்க எதிர்ப்பு' வேசம் கெட்டுறானுங்கன்னா அத நீயும் நம்புற..ஒன்னயும் போயி எங்க கூட அவதாரத்தில சேத்துருக்காங்களே அவங்களச் சொல்லணும்! ஆமா! தனுஷ்கோடியில இருந்து மன்னார் வரை பாலம் போட்டீங்களே! மண்டபத்தில இருந்து ராமேஸ்வரம் போறதுக்கு என்ன பண்ணுனீங்க?</div><div align="justify"><br />அது கிடக்கட்டும்! உன்னை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன்.. பாலம் கட்ட ராமநாதபுரம் ஜில்லாவுக்கு போனப்போ அங்கே தமிழ் பேசுனவுங்களோட நீ எப்படி பேச முடிஞ்சுது? ஒனக்கு சமஸ்கிருதம் மட்டுந்தானே தெரியும்? யார் ஒனக்கு துவிபாஷி வேலை பார்த்தாங்க? அந்த ஜில்லாவுலே எங்கேயும் பாறை கிடையாதே..பாலம் கட்ட என்னடா பண்ணுனீங்க?</div><div align="justify"><br />ராமன்: ??</div><div align="justify"><br />கிருஷ்ணன்: பாலத்தக் கட்டி எத்தன வருசமாகுது?</div><div align="justify"><br />ராமன்: பதினேழரை லட்சம் வருசமாகுது..</div><div align="justify"><br />கிருஷ்ணன்: அப்படீன்னு யாரு சொன்னா?</div><div align="justify"><br />ராமன்: ஜெயலலிதா..சே..சே..வால்மீகி..</div><div align="justify"><br />கிருஷ்ணன்: ஆமா..5000 வருசத்துக்கு முன்னாடிதான் இந்தியாவிலேர்ந்து இலங்கைக்கு நடந்தே போக முடியுமே...கடல் மட்டம் தாழ்ந்துதானே கிடந்தது...அப்பறம் ஏன் பாலம் கட்டுனீங்க? நடந்தே போக முடியுற இடத்துக்கு பாலம் கட்டுனீன்னா ஒன்னை 'கூமுட்டப் பயல்'னு சொல்லாம வேறென்ன சொல்ல?</div><div align="justify"><br />ராமன்: என்னைய மட்டும் இவ்வளவு நோண்டுறீயே! கண்ணகி மட்டும் உண்மையா? அவ மதுரைய எரிச்சது உண்மையா?</div><div align="justify"><br />கிருஷ்ணன்: சோ ராமசாமி மாதிரி முட்டாத்தனமா உளராதே...யாராச்சும் கண்ணகி கக்கூசு கட்டுனா..வள்ளுவரு காலேஜ் கட்டுனாருன்னு சொன்னாங்களா? உன்னையத்தானே வச்சு குரங்குப்பயலுக ஊளை விடுராங்க... ஒன்னையப் பத்திதானடா பேசணும்...</div><div align="justify"><br />ஒண்ணு சொல்றேன் கவனமாக் கேட்டுக்கோ...கூமுட்டப்பய ராமனே! </div><div align="justify"><br />தமிழகத்திலே வாலாட்டாதேன்னு உன் வானரப்படையைச் சொல்லிவை! இல்லைன்னா ஒட்ட நறுக்கிடுவாக!</div><div align="justify"><br />முக்கியமா வள் வள்னு குரைச்சிக்கிட்டுருக்கிற பிஜேபி காரனுக கிட்ட சொல்லிடு..."தமிழ்நாட்டுல போய் என்னத்தையாவது பண்ணிக் கழுதப்பெரட்டு பண்ணலாம்னு நினைக்க வேண்டாமின்னு"... </div><div align="justify"><br />ஏன்னா அங்க, உன்னைய மாதிரி ஆள்களை ஒரு மனுசனாவே மதிக்கறதில்லங்கத மொதல்ல தெரிஞ்சுக்கோ... 'பிச்சை எடுக்குதாம் பெருமாளு'..'அதப் புடுங்குதாம் அனுமாரு'ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? அதில இருந்தே தெரியுதா உனக்கு என்ன மரியாதைய தமிழ்மக்கள் குடுக்கிறாங்கன்னு.. </div><div align="justify"><br />அதனால ரொம்ப வாலாட்டுனா..."அந்தா ஒரு கை இல்லாம போறான் பாரு..அவன்தான் இந்து முன்னணி"..."முன்னம்பல் பூரா பேந்து போகிறான் பாரு..அவன்தான் பிஜேபி".."ஒத்தக்கால வச்சிக்கிட்டு நொண்டுறானே..அவன்தான் விஷ்வ ஹிந்து பரிஷத்'னு சொல்லப் போறாங்க... உங்களில் ஊனமுற்றோர் ஜனத்தொகை தமிழ் நாட்டிலே அதிகமாகப் போகுது..அது மட்டும் நிச்சயம்..</div><div align="justify"><br />அதுக்கு அப்புறம் உன்னோட விருப்பம்.. நான் சொல்றத சொல்லிட்டேன்..</div><div align="justify"><br />(இந்த உரையாடலைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடந்த கும்மாங்குத்துக்களை தாமரை டிவி சென்சார் செய்துவிட்டதால் மேல் விவரங்களை அறியமுடியவில்லை)</div><div align="justify"></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-23965062179132126512007-09-30T01:54:00.000-07:002007-09-30T02:34:58.125-07:00ராமன் பாலம் - தமிழகத்தை குஜராத்தாக மாற்ற முயலும் இந்துமதவெறியர்கள்<div align="justify">குஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக்கி இந்துமதவெறியாட்டம் போட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் தமிழ்நாட்டையும் குஜராத்தாக மாற்றிடத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். கலவரத்தைத் தூண்டிவிட அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள விசயம்தான் 'ராமன் கட்டிய பாலம்'. இந்து மதவெறிக்கும்பலின் இச்சதித் திட்டத்திற்கு கூட்டாளிகளாக காங்கிரசு,அதிமுக உட்பட பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகளும் இன்றைக்குக் கைகோர்த்து நிற்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடே இந்துமதவெறிப் பாசிசத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. </div><div align="justify"><br />பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு வரும் இந்தியாவில் இருந்து சுரண்டப்படும் செல்வத்தை அதிவிரைவாக எடுத்துச் செல்வதற்கென்றே உருவாக்கப்படுபவைதான், துறைமுகங்களை உள்நாட்டுடன் இணைக்கும் நாற்கரச் சாலைகளும், சேதுக்கால்வாய் திட்டமும் என்பதனை நாம் ஏற்கெனெவே சுட்டிக்காட்டி இருக்கிறோம். </div><div align="justify"><br />அந்நியனுக்கு சேவை செய்ய என்றே உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டத்திற்காக 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே' என வெறிக்கூச்சல் போடுதன் மூலம், தமிழ்நாட்டை, குஜராத் போன்ற கலவரபூமியாக்க இந்து பாசிசக் கும்பல் பலமுனைகளிலும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. </div><div align="justify"><br />பாக் நீர்ச்சந்தியில் தற்போது ஆழப்படுத்தப்பட்டு வரும் பகுதியில் 'இந்துக்களின் புராதனச் சின்னமான இராமர் பாலத்தை இடிப்பதைத் தடுக்க வேண்டுமென'க் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சாமி உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். </div><div align="justify"><br />இந்த வழக்கில் மத்திய அரசின் தரப்பில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில், ராமர் பாலம் எனும் பகுதியானது இயற்கையாக உருவான மணல் திட்டுதான் என்றும், ராமர்,ராமாயணக் கதாபாத்திரங்களுக்கும், ராமர்-ராவண யுத்தத்திற்கும் சான்றுகள் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தது. </div><div align="justify"><br />உடனே பாஜகவில் இருந்து விஷ்வ இந்து பரிசத் வரை இந்து பாசிசக் கும்பல் 'மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள், தெய்வ நிந்தனை; இந்துக்களின் மத நம்பிக்கை மீதான தாக்குதல்' என்றும் இதற்காக ஆளும்கட்சி மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் கூச்சல் போட ஆரம்பித்தது. </div><div align="justify"><br />மதவெறி மூடத்தனம், பாஜகவுக்கு மட்டும்தான் சொந்தமா? எனப் போட்டி போட்டுக்கொண்டு 'ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவித்து, சேதுக்கால்வாய் திட்டத்தில் இருந்து பாலத்தைக் காக்க வேண்டும்' என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றம் சென்றார், திராவிட இயக்கத்தின் புதிய பரிணாம வளர்ச்சியான, ஜெயலலிதா. </div><div align="justify"><br />தொல்லியல் ஆய்வுத்துறை , அறிவியல்பூர்வமாகச் செயல்பட வேண்டிய தனது கடமையைச் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத பாசிஸ்ட் ஜெயலலிதாவோ 'ராமர் பாலத்தை இயற்கையாய் உருவானது என்று சொல்லியதன் மூலம் மதச்சார்பற்ற அரசு எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் தகுதியை மத்திய அரசு இழந்து விட்டதாக'த் திமிரோடு பேசினார். ராமர் பாலம் கட்டியதாகச் சொன்ன அண்டப்புளுகைத் தோலுரிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானதாம். மதச்சார்பின்மையின் அர்த்தத்தையே புரட்டிப்போடுகிறார், தன்னைப் 'பாப்பாத்தி' எனப் பெருமையோடு அறிவித்துக்கொண்ட இந்துமதவெறி ஜெயா. </div><div align="justify"><br />இந்த எதிர்ப்புகளை சாக்காக வைத்து, ஒரே நாளில் காங்கிரசு அரசு பல்டி அடித்து, தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து ராமர் பற்றிய பகுதிகளைத் திரும்பப்பெற்றுக் கொண்டது. அறிக்கை தயாரித்த அதிகாரிகள் இருவரை இடை நீக்கம் செய்தது. </div><div align="justify"><br />அத்துடன் நில்லாமல் காங்கிரசுக் கட்சி தனது சட்ட அமைச்சர் பரத்வாஜ் எனும் பார்ப்பனரின் வாயாலேயே "இமயமலை இமயமலைதான்.கங்கை கங்கைதான்.ராமர் ராமர்தான்.இதற்கெல்லாம் ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை.இந்துக்களின் வாழ்வில் ராமர் பிரிக்க முடியாத ஓர் அங்கம். இது விவாதிக்க வேண்டிய விசயமில்லை" என ஒரே போடாகப் போட்டு, தாமும் இந்து மதவெறிக் கட்சிதான் என்பதை நிரூபித்துள்ளது. காங்கிரசின் இந்து மதவெறி இப்படி அப்பட்டமாக வெளிப்பட்ட பின்னரும் கூட சிபிஎம்-மும், சிபிஐயும் இன்னமும் காங்கிரசுக் கயவாளிகளை மதச்சார்பற்ற சக்திகள் எனக் கூறிக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்றன. </div><div align="justify"><br />பாஜக,காங்கிரசு,அதிமுக வரிசையில் 'இந்துக்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது' என்று தேமுதிகவும், புதிய கடை ஆரம்பித்து அரசியல் வியாபாரம் ஆரம்பித்திருக்கும் சரத்குமார், விஜய டி ராஜேந்தர் வரை அனைத்து கழிசடைகளும் இந்து மதவெறி சாக்கடையில் புரள ஆரம்பித்து விட்டனர். அதாவது பாலம் உருவான அறிவியல் உண்மையைக் கூறினால் அது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விடுமாம். பிற்போக்குவாதிகளான இவர்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் காம்ரேடுகளும் அதே கழிசடைச் சிந்தனையை வேறு வார்த்தைகளில் 'மத்திய அரசு அறிக்கையை திரும்பப்பெற்றது சரியான செயல்தான்' என்றும் 'பிரச்சினைக்கு சம்பந்தமில்லாமல் ராமர்,ராமாயணத்தை குறித்து எல்லாம் கருத்துத் தெரிவித்தது சரியல்ல' என்றும் அறிக்கை விட்டிருக்கிறார்கள். </div><div align="justify"><br />அறிவியல்பூர்வமான சிந்தனையை வளர்த்தெடுத்து, சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிவதே உண்மையான கம்யூனிஸ்ட்டுகளின் கடமையாகும். ஆனால் தொல்லியல்துறை அறிக்கையை எதிர்ப்பதன் மூலம், ராமர் பால மூடக்கதைக்குத் துணை போய், சிபிஎம்மும் மதவெறியைத்தாண் ஆதரிக்கின்றது. பின்னர் எதற்கு இவர்கள் இன்னமும் தங்கள் கட்சியின் பெயரில் கம்யூனிஸ்ட் எனும் வார்த்தையை ஒட்ட வைத்துள்ளார்கள்? </div><div align="justify"><br />வட இந்தியா எங்கிலும் ராமர்-ஜென்ம பூமி, ரத யாத்திரை என்ற தந்திரங்கள் மூலம் தனது அடித்தளத்தை அமைத்துக்கொண்ட சங்க பரிவாரத்திற்கு தென்னிந்தியாவில் வேரூன்ற சரியான முகாந்திரத்தை ராமன் பாலம் கதை தந்திருக்கிறது. தமிழகத்தில் தனது இயக்கத்தைக் கட்டுவதில் சிரமம் இருக்கிறது என்பதை பிரவீண் தொகாதியாவே ஒத்துக்கொள்கிறார். அதற்காக வெகு நுட்பமாகத் திட்டமிட்டு மதவெறியைப் பரப்புவதில் சங்கபரிவாரம் முயற்சிக்கிறது. </div><div align="justify"><br />எழுபதுகளில் இருந்து விவேகானந்தர் பாறை, மண்டைக்காடு கலவரம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்ற தந்திரங்கள் மூலம் பையப் பைய வேர் பிடித்து வரும் இந்து மத வெறி கும்பல் ராமன் பாலம் சர்ச்சையைக் கிளறி விட்டு தமிழகத்தை இன்னொரு குஜராத்தாக மாற்ற முயற்சிக்கிறது. </div><div align="justify"><br />இதனைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்ல யாகங்கள், பூசைகள் செய்வதுடன் மக்களைத் திரட்டிப் போராடுவதும், நீதிமன்றங்கள் மூலம் பிரச்சாரம் என்று மும்முனைத் திட்டம் வகுத்து செயல்படுகிறது.<br />முன்னாள் தேர்தல் கமிசனர் கிருஷ்ணமூர்த்தி, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சுந்தரம் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்து ராமர் பாலத்தைக் காக்க மாநாடுகள், உண்ணாவிரதங்கள், சாலை மறியல் என்று முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது. </div><div align="justify"><br />இதற்காக தினசரி ஒரு புளுகை அவிழ்த்து விட்டு வருகிறார்கள். இலங்கையின் நிலப்பரப்பு குறுக்காக அமைந்திருப்பதால்தான் மன்னார் வளைகுடாவை சுனாமி தாக்கவில்லை எனும் அறிவியல் உண்மையை மறைத்து, 'ராமர் பாலம்தான் தென் தமிழகத்தை சுனாமியில் இருந்து காத்தது' என்று கதை அளந்தார்கள். </div><div align="justify"><br />ராமர் பாலத்தை உடைத்தால் அடுத்த 1000 வருசங்களுக்கு தேவைப்படும்-அங்கு புதைந்து கிடக்கும்- தோரியம் கரைந்து விடும் என அரைகுறை அறிவியலைக் கலந்து பிரச்சாரம் செய்தார்கள். அப்பகுதியில் தோரியம் இருப்பது உண்மையாகவே இருப்பினும், தோண்டாமலே தோரியத்தைப் பிரித்தெடுக்க இயலுமா? மேலும், கரைந்து போக, தோரியம் என்ன உப்பா,சர்க்கரையா? </div><div align="justify"><br />தனது முட்டாள்தனமான கதைக்கு எதை வேண்டுமானாலும் பேசலாம் எனக் கருதிக்கொண்டு, தோரியக்கதையில் சர்வதேசப் பிரச்சினையையும் சேர்த்து பிரச்சாரம் செய்தார்கள். "இந்தியாவுக்கு தேவையான தோரியத்தை கிடைக்கவிடாமல் செய்ய ராமர் பாலத்தை இடிக்க அமெரிக்கா சதி செய்கிறது" என்று விஷ்வ இந்து பரிஷத் அமெரிக்க எதிர்ப்பு வேசம் கட்டிப் பார்த்தது. </div><div align="justify"><br />அமெரிக்க சதி பற்றிப் பேசும் இவர்கள், சேதுக்கால்வாய்க்குள் அமெரிக்கக் கப்பல்கள் நுழையக்கூடாது என்று என்றைக்குமே போராடப் போவதில்லை. போராடுவது கிடக்கட்டும். நிமிட்ஸ் கப்பல் சென்னையில் நங்கூரம் பாய்ச்சி, கோடம்பாக்கத்துத் துணைநடிகைகளுடன் காமக்களியாட்டங்களில் ஈடுபட்ட அமெரிக்க வீரர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்தபோது இந்த அமெரிக்க எதிர்ப்புப் போராளிகள் எங்கே புடுங்கிக் கொண்டிருந்தார்கள்? </div><div align="justify"><br />இந்துமத வெறி பாஜகவால் ஆரம்பிக்கப்பட்டு, காங்கிரசால் முழுமையாக்கப்பட்டு உள்ள அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்ட்கள், தோரியத்தை கிடைக்கவிடாமல் அமெரிக்கா சதி செய்வதாகப் புளுகுகிறார்கள்.</div><div align="justify"><br />'ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது' என்கிறார் இல.கணேசன்.இதே 'நம்பிக்கை' வாதத்தைத்தான் பாபர் மசூதி விவகாரத்திலும் சொன்னார்கள். பால்யவிவாகமும் நம்பிக்கைதான். உடன்கட்டை ஏறுதலும் நம்பிக்கைதான். தீண்டாமையும் இந்துக்களின் நம்பிக்கைதான். அவற்றை எல்லாம் எதிர்த்தால் இந்துக்களின் மனம் புண்படுமே என்று கருதி இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு சொறிந்து கொடுக்கவா முடியும்? </div><div align="justify"><br />தமிழ்நாட்டில் தனது சதிச்செயலை அரங்கேற்ற போதுமான அடியாள் படை இல்லாததால் வேறு மாநிலங்களில் இருந்து இந்துமதவெறியர்களை இறக்குமதி செய்து மாநாடுகளை நடத்துகின்றனர். ராமர் பாலப் பாதுகாப்பு மாநாட்டுக்கென்று ஆந்திரத்திலிருந்து வந்த கும்பல் ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி வந்தனர். ரயில்வே அதிகாரிகள் பயணச்சீட்டைக் கேட்டபோது "ராமர் பாலத்தைக் காக்கப்போகும் நாங்கள் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும்?" எனக் கேட்டு ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் செய்தனர். உடனே ரயில்வே போலீசோ அவர்களிடம் சமாதானம் பேசி அடுத்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் அவர்களைப் பாதுகாப்பாய் ஏற்றி அனுப்பி வைத்தது. மத வெறியர்களுக்கு வால்பிடித்த ரயில்வே போலீசு, புறநகர் ரயில்கள் ரத்தானதைக் கண்டித்து அதே வாரத்தில் நியாயமாகப் போராடிய பயணிகளைக் கைது செய்து 18 மணி நேரம் சிறையில் அடைத்தது என்பதில் இருந்தே அரசு எவ்வாறெல்லாம் இந்துவெறிக்குத் துணைபோகின்றது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. </div><div align="justify"><br />பாஜகவை விட்டு விலகி தனி அமைப்பு கண்ட உமாபாரதி தமிழ்நாட்டுக்குள் வந்து 'ராமர் பாலத்தைக் காக்கப் போராடும் தன்னை முடிந்தால் கருணாநிதி கைது செய்து பார்க்கட்டும்' என்று கொக்கரிக்கிறார். கருணாநிதியோ 'இதை எல்லாம் என் வாழ்நாளிலேயே காண வேண்டியிருக்கிறதே' எனப் புலம்புகிறார். அவரின் வீரம் என்ன என்பதை இல.கணேசனே 'பாஜக தயவு கருணாநிதிக்கு தேவைப்பட்டால் அவர் ராமர் பாலத்தை இடிக்க விடாமல் காப்பார்' என்று போட்டுடைக்கிறார்.</div><div align="justify"><br />இன்று பெரியார், பகுத்தறிவு என்று அறிக்கை விடும் கருணாநிதி ஆறாண்டு பாஜக ஆட்சியின்போது அது நடைமுறைப்படுத்தி வந்த சோதிடக்கல்வி, மதவெறி கலந்த பாடத்திட்டம், குஜராத் படுகொலை என அனைத்து அராஜகத்திலும் மவுனப்பங்காளியாகச் செயல்பட்டவர்தான். </div><div align="justify"><br />திடீரென்று ராமர்பாலத்தைக் காக்கப் போவதாக பாஜக ஏன் பேச ஆரம்பிக்கின்றது? என்பதை அறிந்து கொள்ள, மூளையைக் கசக்க வேண்டியதில்லை. விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் வேதாந்தத்தின் "மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி ராமர் பாலம் இடிக்கப்படுமானால் வரும் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்கப்படும்" எனும் அறிக்கையில் இதற்கான பதில் உள்ளது. </div><div align="justify"><br />நடந்து முடிந்த உ.பி. தேர்தலில் மூன்றாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்த பாஜகவுக்கு வரப்போகும் குஜராத் தேர்தலுக்கும், ஒருக்கால் இடதுசாரிகளால் மைய அரசு கவிழ்க்கப்பட்டு வரப்போவதாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத்தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்யக் கிடைத்த நல்வாய்ப்பாகவே ராமன்பாலம் அமைந்திருக்கிறது. </div><div align="justify"><br />அரசியல் சாசனத்தின் 51ஏ பிரிவின்படி அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டியது இந்தியக்குடிமகனின் கடமை என்று தெளிவாக்கப்பட்டிருப்பினும், அறிவியலுக்குப் புறம்பாக காங்கிரசு அரசு செயல்பட்டு அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்பட்டு இந்து மதவெறியைக் கிளறி இருக்கின்றது. ராமர் பாலம் விவகாரம் மட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பு, அது சம்பந்தமாய் அமைக்கப்பட்ட லிபரான் கமிசனின் ஆயுளை நீட்டிக்கொண்டே செல்வது, மும்பைப் படுகொலைகள் குறித்த ஸ்ரீகிருஷ்ணா கமிசனின் அறிக்கையை அமலாக்காமல் இருப்பது என அனைத்து விசயங்களிலும் பாஜக விற்கும், காங்கிரசுக்கும் கொஞ்சம் கூட வேறுபாடு கிடையாது. இந்து மதவெறி காங்கிரசை ஆதரிப்பதன் மூலம் போலி கம்யூனிஸ்ட்களும் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு அடியாள் வேலை செய்து வருகின்றனர். </div><div align="justify"><br />123 அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அப்பட்டமாய் அம்பலமாகிப் போயுள்ளது காங்கிரசுக் கட்சி. அவ்வொப்பந்தத்தை எதிர்ப்பது போல நாடகமாடி வரும் பாஜகவும் இதில் அம்பலமாகியுள்ளது. மக்கள் மத்தியில் இவ்வொப்பந்தம் பேசும் பொருளாகி மறுகாலனியாக்கம் பற்றிய சர்ச்சை சூடுபிடித்து வரும் இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினையை மக்கள் மறந்து, 'ராமன் பாலம் கட்டினானா? இல்லையா?' என்று அவர்களை விவாதிக்கவிட்டு அதில் கிளறப்படும் மதவெறியில் குளிர்காய காங்கிரசும்,பாஜகவும் மட்டுமன்றி சகல ஓட்டுக்கட்சிகளும் முயன்று வருகின்றன. </div><div align="justify"><br />அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அம்பலப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், அமெரிக்க உளவாளியும், டங்கல் ஒப்பந்தத்தின் செயல் தலைவனாகச் செயல்பட்டவனுமான சுப்பிரமணிய சாமியால் ராமர் பாலப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளதென்பது தற்செயலாக இருக்க முடியாது. </div><div align="justify"><br />1990களின் ஆரம்பத்தில் மறுகாலனியாக்கத்தின் தொடக்கமாக காட் ஒப்பந்தத்தில் காங்கிரசு அரசு கையொப்பமிட்டு தாராளமயம்,உலகமயத்தை ஆரம்பித்து வைத்தபோது மக்கள் விழிப்புற்று விடாதிருக்க அப்போது பாஜகவும் காங்கிரசும் 'ராமர் கோவிலை பாபர் இடித்தாரா இல்லையா' என்ற விவாதத்தில் மக்களை மூழ்க வைத்து மதரீதியில் மக்களைப் பிளந்தன. காலங்காலமாய் பிரிட்டிஷ் காரன் செய்து வந்த அதே பிரித்தாளும் தந்திரத்தை இன்றும் கடைப்பிடிக்கின்றன. </div><div align="justify"><br />'ராமன் பாலப் பிரச்சினை' என்பது பெருவாரியான இந்துக்களின் பிரச்சினையே அல்ல. இல்லாத ராமன் பாலத்தைப் பேசவைத்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. அதனுடன் கூட்டாளிகளாக ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என சகலவிதமான கழிசடைகளும் கைகோர்த்துள்ளனர். </div><div align="justify"><br />பெரியாரின் வாரிசுகளாகக் கூறிக்கொள்பவர்கள் இந்த சதியை எவ்வாறு முறியடிக்கப் போகிறார்கள்?</div><div align="justify"><br />ராமர் பாலம் பற்றி கருணாநிதி விமர்சித்தவுடன் இந்துத்துவ பயங்கரவாதிகள் கருணாநிதியின் மகள் வீட்டைத்தாக்கியுள்ளனர். தமிழக அரசுப் பேருந்தைக் கொளுத்தி 2 பேரை உயிருடன் கொளுத்தி நரவேட்டை நடத்தி உள்ளனர். இவ்வளவு தூரம் போன பின்னரும், ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தபோதிலும், இம்மதவெறிக்கும்பலை கருணாநிதி அடக்கி ஒடுக்கத் தயங்குகிறார். </div><div align="justify"><br />காங்கிரசின் போலி மதச்சார்பின்மை சாயம் வெளுத்துப்போய் அதன் இந்து மதவெறி அம்பலமான பின்னரும் இரண்டு போலிகளும் காங்கிரசை ஆதரிப்பதன் மூலம் பாஜகவை தனிமைப்படுத்தலாம் என்று அடிப்படையே இல்லாமல் பசப்பிவருகிறார்கள். 'இந்து மதவெறிக் கும்பல்' என்பதைக் கூட நேரடியாகச் சொல்லத் திராணியின்றி 'மதவாத சக்திகள்' எனப் பொத்தாம்பொதுவாகப் பேசுவதுதான் போலிகளின் மதவெறி எதிர்ப்பு. </div><div align="justify"><br />அணுசக்தி ஒப்பந்தம்,அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் என்று நாட்டை மறுகாலனியாக்கப் படுகுழியில் ஆளும் வர்க்கம் வீழ்த்தி வரும் வேளையில் மக்களைத் திசை திருப்பிடும் மதவெறிப்பிரச்சாரத்தில் மும்முரமாய் இறங்கி இருக்கும் சங்க பரிவாரத்தை வீதியில் இறங்கி எதிர்தாக்குதல் நடத்தி முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம். </div><div align="justify"></div><div align="right"><strong><u>Related:</u></strong></div><div align="right"><a href="http://puthagapiriyan.blogspot.com/2007/09/blog-post_30.html"><span style="color:#ff0000;">இந்து மதவெறியை தூண்டும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலினை அம்பலப்படுத்தும் நூல்கள் !</span></a><span style="color:#ff0000;"> </span></div><div align="right"><span style="color:#ff0000;"></span></div><div align="right"><br /><a href="http://poarmurasu.blogspot.com/2007/09/blog-post_30.html"><span style="color:#ff0000;">பெரியாரின் மண்ணில் பார்ப்பன மதவெறி நச்சுப்பாம்புகள் தலையெடுக்க அனுமதியோம்!!<br />பொதுக் கூட்டம் & புரட்சிகர கலைநிகழ்ச்சி</span></a></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-51777797011299049102007-09-28T11:47:00.000-07:002007-09-30T01:58:56.684-07:00விடுதலைப் போரின் விடிவெள்ளி !<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWGemtPa4zTvoHuIGuypOI8S847JcL2PraIf3fhz6NCq73bA_bOov1xYKM4A7TsA6JHewNFpo5vfARgbOcPukp-cKgpwKYjl8B6eudzLet1qyxCPAHE1HZvDSBXEd1F48yqDvyu5uf2is/s1600-h/Bagat+SIngh.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5115918851538068994" style="CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWGemtPa4zTvoHuIGuypOI8S847JcL2PraIf3fhz6NCq73bA_bOov1xYKM4A7TsA6JHewNFpo5vfARgbOcPukp-cKgpwKYjl8B6eudzLet1qyxCPAHE1HZvDSBXEd1F48yqDvyu5uf2is/s400/Bagat+SIngh.jpg" border="0" /></a><br /><p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjqDnbyGQYcS-iLBezDA92KiE3esvoQo7Gy0dxFs2EDnCNaUY926eqn6wQ7LeexbeAVai2HXNGHVkKMSlL2PkAJ2IjGEpYQixV9wfiiV5sdeIMlkXtxuFupvMrjabcLSbiJar_JuQkVgw/s1600-h/Bagat+SIngh.jpg"></a></p><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"><span style="font-size:130%;color:#ff0000;">இன்று மாவீரன் பகத் சிங்கின் 101-வது பிறந்த நாள் !<br /></span><br /><br /><div align="justify">ஆங்கிலேய காலனியாதிக்கத்திடமிருந்து, இந்திய சுதந்திரத்தை மீட்டெடுக்கத் துடித்த எண்ணற்ற இளைஞர்களின் இதயத் துடிப்பு அவன். அன்று மட்டுமல்ல இன்றும், ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கதிலிருந்த்து மக்களை மீட்டு ஒரு புதிய ஜனநாயகத்தைச் சாதிக்கத் துடிக்கும் எல்லோருக்கும் அவன் ஒரு கலங்கரை விளக்கம்.<br /><br /><br />தியாகத்தின் திருவுருவாய் மட்டுமின்றி, போராடுபவர்களுக்கு உற்சாகத்தின் ஊற்றுகண்னாய்த் திகழ்பவன் பகத்சிங்.அவனது நினைவுகளை நெஞ்சிலேந்துவோம், அவன் காட்டிய வழியிலே மக்கள் விடுதலையைச் சாதிப்போம். </div><br /><div align="justify">..</div><br /><div align="justify"></div><br /><div align="justify">அந்த வீரன் இன்னும் சாகவில்லை !<br /><br /></div><br /><br /><br /><p align="center"><embed src="http://www.youtube.com/v/sV38vN3hmrw" width="425" height="350" type="application/x-shockwave-flash" wmode="transparent"></embed></p><br /><br /><br /><div align="right">நன்றி <a href="http://visual-report.blogspot.com/"><span style="color:#ff0000;">இவான்</span></a><span style="color:#ff0000;"> </span></div></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-83655074782997652482007-09-27T11:38:00.000-07:002007-09-28T00:34:52.852-07:00பெரும்பான்மையினரின் நம்பிக்கையும் பாசிசப் பன்றிகளின் பிதற்றலும் !!<div align="justify">இன்று காலை ஆரியர்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவியும்,பார்ப்பன பாசிசத்தின் தமிழ்நாட்டின் பிரதிநிதியுமான ஜெயலலிதா வெளியீட்டுள்ள ஒரு அறிக்கையிலிருந்து..</div><div align="justify"><br />"இன்றைக்கு தமிழ்நாட்டில் தீண்டாமையை எதிர்த்து சிலர் பேசி வருகின்றனர். தீண்டாமை என்பது இறைவனால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு கொடை. அதை எதிர்ப்பது இறைவன் வகுத்தளித்த சநாதன தர்மத்தையே எதிர்ப்பதாகும். பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஸ்ரீ ராமனின் ஆட்சியில் இந்த சநாதன தர்மத்தின் கீழ் மக்கள் எவ்வளவு சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் பல கோடி சாதி இந்துக்களின் நம்பிக்கை இந்தத் தீண்டாமை. இவர்கள் எப்படி ராமர் பாலத்தை ஏற்க மறுக்கிறார்களோ அதே போல தீண்டாமையையும் ஏற்க மறுக்கிறார்கள். இது இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ள எங்களைப் போன்ற அனைவரது நெஞ்சத்தையும் புண்படுத்துகிறது. இவர்களுக்கு இதில் நம்பிக்கை இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம் அது அவர்களது சொந்த விஷயம். ஆனால் பெரும்பாலான இந்துக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவது தவறு."</div><div align="justify"><br />ராமன் பாலத்தைக் காக்க ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் அவர் வெளியிட நினைத்து மறந்து போன ஒரு பகுதியை நாமே வெளியிட்டுள்ளோம்.</div><div align="justify"><br />தனது நம்பிக்கையைப் பெரும்பாலானவர்களின் மீது திணிக்கும் பார்ப்பனியத்தின் அதே பாசிசத் தன்மையைத் தனது அறிக்கையில் கக்கியுள்ளார் இந்தப் பாப்பாத்தி. இவரும், இவர் சார்ந்த பார்ப்பனர் சங்கமான ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கூட்டமும், இல்லாத ராமனுக்கும் கற்பனைப் பாலத்திற்கும் பெங்களூரில் இரண்டு அப்பாவிகளைக் கொன்றுள்ளனர். இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டம் மக்களிடையே உள்ள சாதாரண மத நம்பிக்கையை, மதவெறியாகத் தூண்டி விட்டு அவர்களை மோதவிட்டு இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளனர். </div><div align="justify">.</div><div align="justify">ஒரு பகுதியில் அரசியல் ரீதியில் காலூண்ற இவர்களுக்குத் தெறிந்த ஒரே வழிமுறை கலவரத்தைத் தூண்டுவது. எப்போ தருணம் வரும் எவனைக் கொல்லலாம், எப்படி கலவரத்தைத் தூண்டலாம் என சர்வ சதா காலமும் காத்துக் கிடக்கின்றனர். இதனால் தான் ராமனைப் பற்றிய பிரச்சனை வந்தவுடன் ஏன் எதற்கு என்று கூடக் கேட்காமல் தாக்குதல் தொடுக்கத் தொடங்கி விட்டனர். ராமாயணம் என்ற கதையில் ராமன் என்ற கற்பனைப் பாத்திரம் மோண்ட,பேண்ட இடங்களையெல்லாம் தோண்டியெடுத்து, இந்து நம்பிக்கை என்ற பெயரில் அட்டூளியமும், அராஜகமும் செய்யும் இவர்கள் அதனை எப்போதும் கலவரமாக்கவே முயற்சி செய்துள்ளனர். </div><div align="justify"><br />மும்பையில் தமிழர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிப் பல்லாயிரம் தமிழர்களைத் துரத்தியடித்தனர். பின்னர் பாபர் மசூதி இடிப்பின் போதும் இப்படித்தான் பெரும்பாண்மையினரின் நம்பிக்கை என்று கூறி முஸ்லீம்களைக் கொன்றனர். குஜராத்தில் கூட்டம் கூட்டமாகச் சென்று முஸ்லீம்களைக் கொல்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்வது, குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றிக் கொல்வது என சிறிதுகூட மனிதாபிமானமே இல்லாத வானரப்படையைக் கொண்டு மக்களை மிரட்டியே ஆட்சியைப் பிடித்தான் நரேந்திர மோடி எனும் நரபலிச் சாமியார். </div><div align="justify">.</div><div align="justify">இங்கு தமிழகத்தில், மண்டைக்காடு கலவரம், கோவைக் கலவரம் என மதவெறியைப் பரப்பி, கலவரங்களை உருவாக்கி பலரது உயிரைக் குடித்துள்ளனர். இவர்கள் இதுவரை தங்களது வளர்ச்சியை சிறுபான்மையினரின், தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தால்தான் பதிவு செய்துள்ளனர். </div><div align="justify"><br />இதே பெரும்பாண்மையினரின் நம்பிக்கையின் பெயரால்தான் பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான் ஹிட்லர். அந்தப் பாசிசப் பேயின் பேரன், பேர்த்திதான் இந்த அத்வானியும், ஜெயலலிதாவும், விஜயகாந்தும். பெரும்பாண்மை பெரும்பாண்மை என்று இவர்கள் கத்துவதெல்லாம் தங்களது பாசிசத்தை மறைத்து, குற்றத்தை மக்கள் மீது சுமத்துவதற்க்கே.</div><div align="justify"><br />இவர்களுக்கு ராமன் மேல் பக்தியுமில்லை அவன் கட்டியதாக இவர்கள் கூறும் பாலத்தின் மீது அக்கறையும் இல்லை. ஆனால் இவர்களுக்கு இருப்பதெல்லாம் ஒரே கனவு அது தமிழகத்தை குஜராத்தாக மாற்றும் பாசிசக் கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர் போவதைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையில்லை. பன்னாட்டு முதலாளிகள் நமது நாட்டில் அடித்த கொள்ளையைச் சுலபமாக வெளியே கொண்டுபோகத் தங்க நாற்கரச் சாலையையும், சேதுக் கால்வாய்த்திட்டத்தையும் ஆரம்பித்ததே இந்த ஜெயா, அத்வானி அயோக்கியக் கும்பல்தான். அதைவிட்டு இன்று ஏதோ இந்துக்களின் நம்பிக்கையே தகர்ந்தது என்று தான் வகுத்த திட்டத்தைத் தானே எதிர்த்து ஊரை ஏமாற்றுகின்றனர். </div><div align="justify"><br />இவர்களுக்கு ஆதரவாக தினமலர், தினமணி உட்பட அனைத்து பத்திரிக்கைகளும் காவியிலேயே எழுதுகின்றனர். காங்கிரஸ், வை.கோ, விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைத்துக் கட்சியினரும் காவிகறையுடன் வலம்வருகின்றனர். மொத்ததில் தமிழகம் முழுமைக்கும் காவியடிக்க வருகிறது ஒரு வானரக் கூட்டம்.</div><div align="justify"></div><div align="right"><strong><u>Related:</u></strong></div><div align="right"></div><div align="right"><a href="http://poar-parai.blogspot.com/2007/09/blog-post_2415.html"><span style="color:#ff0000;">அத்வானி, இல.கணேசன், ராம.கோபாலன் ஆகியோர் சமூகத்துக்கு தலித் 'இந்து' எழுதும் கடிதம்!</span></a><span style="color:#ff0000;"> </span></div><div align="right"><span style="color:#ff0000;">..</span></div><div align="right"><a href="http://tamilarangam.blogspot.com/2007/09/blog-post_26.html"><span style="color:#ff0000;">தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! - தோழர்.மருதையன்</span></a> </div><div align="justify"></div><div align="justify"></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-38246102699698083062007-09-25T21:26:00.000-07:002007-09-26T09:10:20.931-07:00ஆப்பசைத்து வாலறுந்த குரங்குகள்<div align="justify">உயிரினங்களை வைத்துச் சொல்லப் பட்ட கதைகளில் குரங்குக் கதைகள் பிரபலம். சற்று முட்டாள்தனமானதும், அதே சமயம் விஷமத்தனமானதுமான இந்தக் குரங்குகள் தங்களது முட்டாள்தனத்தினால் அப்பாவிகள் போன்று தோன்றினாலும், சற்று ஏமாந்தால் ஆளையே தீர்த்துக்கட்டும் அளவுக்கு பயங்கரமானவை. தன்னைவிட பலம்வாய்ந்த மிருகங்களிடம் வாலைக் குழைத்துக் கும்பிடுபோடும் அதே சமயம் பலகீனமானவர்களிடம் அதிக்களம் செய்யும். இத்தகைய குரங்குகளை நாம் காடுகளிலும், மரங்களிலும் தேட வேண்டியதில்லை இவை ஊருக்குள்ளேயே காவிக்கொடிக்குக் கீழ் கொட்டம்மடித்துக் கொண்டிருக்கும்.</div><div align="justify"><br />நாமும் பல குரங்குக் கதைகளைக் கேட்டும், படித்தும் உள்ளோம். குஜராத்தில் குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு, அயோத்தியில் அயோக்கியத்தனம் செய்த குரங்கு, அமெரிக்க தொப்பிக்காரனிடம் ஏமாந்த குரங்கு,பெரியார் பிராண்ட் இஞ்சியைத் தின்ற குரங்கு எனப் பல கதைகளாக நீளும் இப்பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளதுதான் பகுத்தறிவு ஆப்பசைத்து வாலறுந்த குரங்கு கதை.</div><div align="justify"><br />பரிணாம வளர்ச்சியில் சற்று பின்தங்கிய ஒரு இந்துத்வா குரங்குக் கூட்டம், வடமாநிலங்களில் தனது சேட்டைகளின் மூலம் மக்களைத் துன்புறுத்தி வந்தது. அது போதாதென்று தமிழகத்தையும் குறிவைத்துக் களத்தில் இறங்கின. இங்கே உள்ள ஜெயா குரங்கு, விஜயகாந்த் குரங்கு, சரத் குரங்கு போன்ற நட்புக் கூட்டங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, இலங்கைக்கும் ராமேஸ்வரத்திற்க்கும் பாலமிருக்கிறது, பாலமிருக்கிறது என்று கூறி, மூடநம்பிக்கையைப் பிளந்து பெரியார் அடித்த பகுத்தறிவு ஆப்பை அசைத்துப் பார்த்தது. ஆனால் இதன் மூலம் தனது வாலே துண்டாகும் என்று பாவம் அந்தக் குரங்குக்குத் தெரியவில்லை. வெறும் குச்சியைத் தூக்கினாலே ஓட்டம் பிடிக்கும் இந்தக் குரங்குக் கூட்டத்திற்க்குத் தலையைக் கொய்வதாய்ச் சவடால் வேறு. இந்நிலையில், தான் அசைத்த ஆப்பு தனது வாலைக் காவு வாங்கிவிட்டதை எண்ணி இப்போது புலம்பித் திரிகின்றது.</div><div align="justify"><br />இந்தக் குரங்குகள் எத்தனை முறை சூடுபட்டாலும் புத்திவராமல் திரும்பத் திரும்ப வந்து அடிபட்டு ஓடுகின்றன. புதிது புதிதாக ஏதாவதொன்றைக் கையில் பிடித்தபடி எப்படியாவது தமிழகத்தில் அழிச்சாட்டியம் பன்ன வேண்டும் என்று முயன்றுகொண்டே இருக்கின்றன. </div><div align="justify">ஒவ்வொரு முறையும் இவற்றை விரட்டினால் திரும்பவந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன, இந்த இம்சையை ஒழிக்க இந்தக் குரங்குகளைக் கூண்டிலடைத்து, இல்லாத பாலத்தைத் தரிசிக்கக் கடலுக்குப் புனித யாத்திரை அனுப்புவதொன்றுதான் வழி. அதைத் தான் நாம் செய்ய வேண்டும், அதுதான் பகுத்தறிவுள்ள ஒரு மனிதனின் செயல்.<br /></div><div align="right"><strong>Related Articles:</strong></div><div align="right"><strong></strong></div><div align="right"><a href="http://poar-parai.blogspot.com/2007/09/0.html"><span style="color:#ff0000;">அத்வானிக்கு அஞ்சு பைசா, ராம கோபாலனுக்கு '0' பைசா!!</span></a><span style="color:#ff0000;"> </span></div><div align="right"><span style="color:#ff0000;"></span></div><div align="right"><a href="http://kedayam.blogspot.com/2007/09/blog-post_20.html"><span style="color:#ff0000;">திமுக-பாஜக வழங்கும் 'ராமன் கட்டிய பாலம்' அரட்டை அரங்கம்</span></a><a href="http://kedayam.blogspot.com/2007/09/blog-post_25.html"><span style="color:#ff0000;">'</span></a></div><div align="right"><span style="color:#ff0000;"></span></div><div align="right"><a href="http://poarmurasu.blogspot.com/2007/09/blog-post_25.html"><span style="color:#ff0000;">ஆயுதக் கிடங்கான ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இழுத்து மூட முற்றுகைப் போராட்டத்தை துவங்குவோம் !</span></a></div><div align="right"><span style="color:#ff0000;"></span></div><div align="right"><a href="http://poar-parai.blogspot.com/2007/09/blog-post_19.html"><span style="color:#ff0000;">புரோகிதன் மகன் ராமனும், புரோக்கர் கருணாநிதியும்!</span></a></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-60474297076408672892007-09-17T15:36:00.000-07:002007-09-17T08:43:27.016-07:00பன்னாட்டு நிறுவனக் கைக்கூலி சிதம்பரத்தின் அரிய சாதனைகள் !<ul><li><div align="justify">அமெரிக்க எரிசக்தி கம்பெனியான என்ரானுக்கு ஆதராவாகவும், இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் வழக்கறிஞராக செயல்பட்டு இந்திய அரசாங்கத்திடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை என்ரானுக்கு பெற்று தந்தவர் </div></li></ul><p align="justify"></p><ul><li><div align="justify">ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் மருந்து கம்பெனிக்கு ஆதராவாக வழக்கறிஞராக களம் இறங்கி, இந்திய மக்களுக்கு புற்றுநோய்க்கான மருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு தான் கிடைக்க வேண்டும் என அதற்க்கான காப்புரிமையினை நோவார்டிஸ் க்கு பெற்று தர போராடி வருபவர் </div></li></ul><p align="justify"></p><ul><li><div align="justify">தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிராக வாதாடி நிரந்தரமாக அவர்களை வீட்டுக்கு அனுப்ப போராடியவர் </div></li></ul><p align="justify"></p><ul><li><div align="justify">இன்று இந்திய நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்வதற்கும், ஆயிரக்கணக்கான சிறுதொழில்களுக்கு மூடுவிழா நடத்துவதற்கும், இந்திய நாட்டு மக்களுக்கு எதிராக 24 மணி நேரமும் சிந்திப்பவர்.</div></li></ul><p align="justify"></p><ul><li><div align="justify"><a href="http://thesteel.blogspot.com/2007/09/blog-post_3705.html"><span style="color:#cc33cc;">'மண்'மோகனின்</span></a> வாரிசாக வரக்கூடிய தகுதியுடையவர்<br /></div></li></ul>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-27720813964482563422007-09-17T13:01:00.000-07:002007-09-17T08:05:32.959-07:00இவர்தான் மன்மோகன்<div align="justify">1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 தேதி, பஞ்சாபின் காக் பகுதியில் (இன்றைக்கு பாகிஸ்தானின் சக்வால் மாவட்டதில்) பிறந்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின்பு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெற்று, IMF போன்ற பல்வேறு நிதி நிறுவனங்களிலும், பின்பு இந்திய அரசின் பல்வேறு நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் வேலை பார்த்து, பின்பு படிப்படியாக திட்டக்குழு தலைவராக, பிரதமரின் பொருளாதார ஆலோசகராக உயர்ந்து, நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராகவும், அதற்க்குப் பிறகு ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சித் தலைவராகவும், இறுதியில் இன்று இந்தியப் பிரதமராகவும் உள்ள மன்மோகன்சிங்கின் வாழ்க்கையில் ஒரே எறுமுகம்தான், ஆனால் ஒரெ ஒரு முறை மட்டும் அவர் இறங்கு முகத்தைச் சந்தித்தார். அது 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தெற்க்கு டெல்லித் தொகுதியில் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வி. அதற்க்குப் பிறகு மக்களைச் சந்திக்கும் தைரியம் சிறிதுமின்றி தனது ஏறுமுகத்தைத் தக்க வைக்க வாழ்நாள் முழுவதும் ராஜ்ய சபா எம்.பி.யாக இருக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.</div><div align="justify"><br />1991 ல் நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடும் புதிய பொருளாதாரக் கொள்கையை வடித்துக் கொடுத்து, தனக்குப் பிறகு வரும் எல்லா ஆட்சிகளும் அதே நாசகர வேலையைத் தொடர்ந்து செய்ய வழிவகுத்தார். இன்றைக்கு பல லட்சம் விவசாயிகள் வாழ வழியிழந்து, பிழைப்புக்கு நாடோடிகளாகத் திறியும் இந்தக் கொடுமைக்கும், கல்வி முதல் மருத்துவம் வரை எல்லா சேவைத்துறைகளையும் காசாக மாற்றியதற்க்கும், தண்ணீர் முதற்கொண்டு எல்லா இயற்க்கை வளங்களும் பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்கள் விழுங்கிவருவதற்க்கும், SEZ என்ற பெயரில் நாட்டையே வெளிநாடுகளின் சிறு சிறு காலனிகளாக மாற்றிவருவதற்க்கும், காரணம் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைதான். </div><div align="justify">..</div><div align="justify">தனக்கு அளிக்கப்பட்ட மந்திரி பதவிக்கு மாற்றாக இவ்வளவு பெரிய சேவையைப் பன்னாட்டு முதலாளிகளுக்குச் செய்த மன்மோகன் சிங், இப்போது தன்னைப் பிரதமராகிய நன்றிக்கடனை எப்படி அடைக்கப்போகிரார்?</div><div align="justify"><br />'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவர் வாக்கை மறக்காதவர் மன்மோகன் சிங். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிறுந்தால் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பார், முதலாளிகள் அதுவும் அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது முன்னாள் எஜமானர்களின் மனதைக் குளிரச் செய்யக் கொண்டுவந்தார் 123. இந்திய - அமெரிக்க கூட்டு இராணுவ ஒப்பந்ததின் மூலம் தன்னைப் பிரதமராக்கிய கடனை அடைத்துவிட்ட மகிழ்ச்சியில், ஒப்பந்தத்தைக் காக்க பிரதமர் பதவியையும் இழக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். </div><div align="justify">..</div><div align="justify">123 ஒப்பந்தத்தால் ஏற்ப்படும் இழப்புகளையும், பாதிப்புகளையும் பற்றிப் பேசினால் மன்மோகன் சிங்கிற்கு இது தெறியாதா என புதிசாலித்தனமாகக் கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகளே, இந்த மன்மோகன் சிங் பதவிக்கு வந்து பின்பு குணம் மாறிய நமது நாட்டின் வழக்கமான அரசியல்வாதியல்ல, இந்தக் காரியத்தைச் சாதிப்பதற்க்காகவே வளர்த்து விடப்பட்டு, ஆட்சியதிகாரத்தில் அமரவைக்கப்பட்டுள்ள அடியாள், இவருக்கு எல்லாம் தெரியும். இவரது வாழ்கையை மேலோட்டமாகப் பார்த்தாலே போதும் இவரது விசுவாசம் யாருக்கானது என்பது சுலபமாகப் புலப்படும்.<br /><br /></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4405674027669888372.post-53232458152669091912007-09-17T11:18:00.000-07:002007-09-17T08:05:58.953-07:00'செவ்வணக்கம்'<p align="center"><a href="http://i228.photobucket.com/albums/ee18/steel1917/SEVVANAKKAM.jpg"><img style="WIDTH: 400px; CURSOR: hand" alt="" src="http://i228.photobucket.com/albums/ee18/steel1917/SEVVANAKKAM.jpg" border="0" /></a></p><p align="center"><br /></p><div align="center"><span style="color:#ff0000;"><strong>வர்க்கப் போராட்டதில் உயிர் நீத்த எல்லாத் தியாகிகளுக்கும் செவ்வணக்கம்</strong></span></div>இரும்புhttp://www.blogger.com/profile/03858979430217335762noreply@blogger.com2