Thursday, November 29, 2007

அடிமைத்தனங்களே நாகரிகமாக!

சாதிய கட்டுமானங்களை மயிரளவும் பிளக்காத ஏகாதிபத்திய படிமானங்கள்

இது இருபத்தோராம் நு¡ற்றாண்டு இங்கே யார் சாதி பார்க்கிறார்கள்? சாதியை கேட்பதே நாகரிகக் குறைவு.சொல்லப்போனால் உங்களை போன்றவர்கள்தான்இல்லாத பிரச்சனையை பற்றி பேசுகின்றீர்கள்.
..
"கல்வி சாதியை ஒழிக்கும்,அவர்களூக்கு என்ன குறை? அரசாங்கம் அவர்களுக்கு எல்லா வசதியும் தான் தருகின்றதே!"சொல்லப்போனால் பெண்கள் எல்லாதுறையிலும் தான் முன்னேறிவருகின்றார்கள்.பிற்கலத்தில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் அளவுக்கு ஆகப்போகுதுன்னு மட்டும் பாருங்க! இது ஐ.டி.காலம் புரிஞ்சுகோங்க!
..
இப்படிப்பட்ட பேச்சுக்கள் தான் மானங்கெட்ட இந்தியத்துக்கு பூ வைத்து அழகு பார்க்கின்றன.என்ன தான்சப்பைகட்டு கட்டினாலும் வருணாசிரம வெறியை மொத்தமாய் குத்தகை எடுத்திருக்கும்,பார்ப்பனீயத்தை வீழ்த்தாமல் சமத்துவம் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல சம்பவங்கள் நிகழ்த்தபடுகின்றன எனலாம்.
..
விழுப்புரம் மாவட்டம்,சின்னசேலம் அருகே உள்ள மரவாநத்ததை சேர்ந்தவன் சின்னசாமிகவுண்டன்.இவனுடைய இரண்டாவது மகள் சுதா கல்லூரியில் படிக்கும் போதே நாயக்கர் சாதியை சேர்ந்த தமிழ்ச்செல்வனை காதலித்து இருக்கிறார்.படிப்பு முடிந்ததும் இமச்சல பிரதேசத்தில் வேலைகிடைத்துவிடவே,காதலுக்கு வீட்டில் அனுமதி கிடைக்காததால் தமிழ்ச்செல்வனின் குடும்ப சம்மதத்தோடு திருமணம் நடந்து விட்டது.எட்டு மாதம் கழித்து வளைக்காப்புக்காக தமிழ்ச்செல்வனின் சொந்த ஊரான ஈரோட்டுக்கு வந்திருக்கிறார்.
..
இத்தகவல் தெரியவரவேசின்னசாமிகவுண்டனும் அவனுடைய மூன்றவது மகன் சங்கரும் சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.சுதா விட்டுக்கு வந்ததும் அவருடைய அப்பனும் தம்பியும் சேர்ந்து கடப்பரையால் அடித்து கொன்றிருக்கின்றனர். தப்பித்தவறி குழந்தை உயிருடன் பிறந்துவிடக்கூடாது என்பதற்காக வயிற்றிலும் அடித்திருக்கின்றார்கள்.
..
------------------------------------------------------------------------------------------------
அது எல்லாம் படிக்காத முட்டாள் கிராமத்து என்று வாய்கிழிய பேசுபவர்கள் தெரிந்து கொள்ளட்டும் சின்னசாமிதான் படிக்காதவன் முட்டாள். சரி அவனுடைய மகன் சங்கர் யார் தெரியுமா?நன்றாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரியும் அடிமைகளில் ஒருவன்.28 வயதான சங்கர் சாதியை ஒழிக்கும் படிப்பை படித்துவிட்டு"ஆபீஸ் டைகர்"என்ற பன்னாட்டு நிறுவனத்தில் சென்னை ஒன்றில் அம்18,000 சம்பளம் வாங்கும் மேற்பார்வையாளன்.
..
சாதீய கட்டுமானங்களை மயிரளவும் பிளக்காத இந்த நாகரீகம்,இந்த அடிமைத்தனம் பார்ப்பனீயத்தை போற்றி பாதுகாத்து வருகின்றன.ஏகாதிபத்தியமும் பார்ப்பனீயமும் தண்டவாளங்களை போல செயல்படுகின்றன.ஒன்றிற்கு ஒன்று பாதுகாப்பு அரணாக இருக்கின்றனன்
..
இந்த இடத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவது முக்கியமானது இரண்டு 1.பாலின சமத்துவம் 2.நட்பு
..
" இப்போது பெண்கள் தான் எல்லா விசயத்திலும் முன்னாடி இருக்காங்க.பஸ், ரயில்எல்லவற்றிலும்பெண்களுக்குதனிசலுகை,தியேட்டரில் டிக்கட் எடுப்பதிலிருந்து பேங்க் க்யூ வரை பெண்களுக்கு சலுகை தான்.பெண்கள் முன்னே வரணும்ங்கிறதுக்காக அரசு என்னனவோ திட்டம் போடுது.அதிகமா இடம் கொடுத்தது தப்பா போச்சு,துளிர்விட்டுபோச்சு,நம்ம கலாச்சாரத்தையே கேவலப்படுத்தறாங்க "
..
இப்படிப்பட்ட ஆசனவாய் அரிப்புகளை பார்ப்பனீயசெரிப்பில் கழிவாகிப்போன ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் கூடத்தான் சொறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.பேருந்தில் பெண்களின் இருக்கைகளில் உட்கர்ந்து கொண்டு எழ மறுக்கும் ஆண்கள் ஆண் உரிமையை பேசுகிறார்கள்.ஆடுகள் அதிகமாகி விட்டால் எவ்வளவு தான் சாப்பிடுவதென ஓநாய்கள் கவலைப்படுகின்றன.
..
பெண் பிறப்பு முதல் இறப்பு வரை நுகர்பொருளாக்கப்படுகின்றார்.பல இடங்களில் பொருளை பார்த்தவுடனேயே புதை குழிக்கு அனுப்பப்படுகின்றது.
பெண்களுக்கென பல்லாங்குழி,தாயம்,கண்ணாமூச்சி,போன்ற உடலை வலுச்சேர்க்காத விளையாட்டுக்களே ஒதுக்கப்படுகின்றன.விளையாட்டு என்பது உடலையும்,மனதையும் வலுப்படுத்தவதாயிருக்க வேண்டும்.விளையாட்டுக்கள் மறந்து கூட பெண்களுக்கு வலுச்சேர்த்திடக்கூடாதென்பதில் தீவிரமாய் இருக்கிறது இச்சமூகம்.குறிப்பிட்ட வயது எட்டியவுடன் என் பெண் வயதுக்குவந்துவிட்டாள் எனக்கூறி நேரடியகவே விற்பனை சரக்ககவே மாற்றுகின்றது.இந்த வயதில் புதிதாய் முளைக்கின்றது கேள்விகள்"பொம்பளை பிள்ளைன்னாஅடக்கஒடுக்கமா இருக்கணும்".என் பெண்ணின் உடலில் எற்பட்ட அறிவியல் மாற்றத்தை ஏன் மற்றவனுக்கு தெரிவிக்கவேண்டும் என எந்த அப்பனும் நினைப்பதில்லை.
..
கல்லு¡ரிக்கு அனுப்பப்படும் போது ஆண்களுக்கு போதிக்கப்படாத கற்பும்,ஒழுக்கமும் பெண்களுக்கு மட்டும் அறிவுறுத்தப்படுகின்றன.கேட்கும் கேள்விகளுக்கு நான் விரும்பும் பதிலைத்தான் தரவேண்டும் இது தான் இச்சமுகம் போட்டிருக்கும் கட்டளை.கல்லூரியிலும் சரி அலுவலகங்களிலும் சரி ஆபாசமாக பேசுவதும்,தரக்குறைவாக நடந்து கொள்வதும் ஆண்களின் பிறப்புரிமையாகவும் இதை பெண்கள் அமைதியாகவும் இருத்தலே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அலுவலகத்தில் ஒரு ஆண் நண்பருடன் பழகுவது என்பது எண்ணளவில் விபச்சாரத்தனமாக நடந்து கொள்வது அங்கீகரிக்கப்படுகின்றது.அதாவது ஆண் நண்பனை கேள்விக்குள்ளாக்குவது,அவனின் கிண்டல்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளுதல் போன்றவையே எண்ணளவில் விபச்சாரத்தனமாகும்.
..
சிலபெண்கள் பன்னாட்டு மூலதனத்தின் வரவால் ஆடை குறைப்பிலும்,தினம் ஒரு ஆண் என்றபடி சுற்றுவது பெண்ணுரிமை அல்ல,இது மாறாக பெண்ணடிமைத்தனத்தின் மறு முகமாகும்.பெண்ணுரிமை என்பதின் முதல் படியே பெண்ணை பேசவிடுவதே.ஆனால் பேசவிடுதல் என்பது அடக்கப்பட்ட பெண்ணீடமும் சரி,பெண்ணுரிமை என்று ஊர் மேயும் சிலரிடமும் சரி இரண்டிடதிலும் மறுக்கப்படுகின்றது.
..
ஏனெனில் இந்த இரண்டுமே ஆணாதிக்கதின் வழிகாட்டுதல்களே. ஆணை கேள்விக்குள்ளாக்குவது என்பதே வாயாடி என வழக்கிலுள்ளது. பொறுக்கிகளுக்கு எப்போதும் விபச்சாரண் பட்டம் கிடைப்பதில்லை.ஓடிபோதல் என்பது ஒரு பெண் தான் விரும்பும் துணையை தெரிந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுவதனாலேயே நிகழ்கிறது.துணையை தெரிந்தெடுக்கும் உரிமையை பொறுத்தமட்டில் ஆணுக்கு வழங்கப்படும் உரிமையும்,மன்னிப்பும் பெண்ணுக்கு வழங்கப்படுவதே இல்லை. வாயாடி,விபச்சாரி போன்ற வினைச்சொற்கள் பெயர்சொற்களாக பெண்ணுக்கு வழங்கப்படுகின்றது. கற்பை காப்பதும்,பேச்சை குறைப்பதுமே பெண்மைக்கு இலக்கணமாக கூறப்படுகின்றது.
..
பாலின ரீதியில் எந்த வேறுபாடு இல்லாதபோதும் தாயாய்,சகோதரியாய்,மனைவியாக இருக்கும் பெண்ணை அடிமையாய் வைத்திருப்பதும் கலாச்சாரம் என்றும், ஒரு பெண் தானே விரும்பும் துணையை தெரிந்தெடுந்தெடுப்பதால் அக்கலாச்சாரம் அழியுமானால் அது ஒழிக்கப்படவேண்டிய கலாச்சாரமே!
..
பிச்சைக்காரனா ருந்தலும் கவுண்டனுக்குதான் கட்டிக்கொடுப்பேன்.வேற சாதிக்காரனுக்கு கட்டிக்கொடுக்கமாட்டேன் என்ற சின்னசாமியின் வார்த்தைகள் பார்ப்பனீயத்தின் வாயிலில் இருந்து உரத்து கேட்கின்றன.நீ ஒருபொருள்,நான் எதிர்பார்ப்பதை நீ தர வேண்டும்,உனக்கென தனி உரிமை கிடையது, உன்னை உருவாக்கிய எனக்கு அழிக்கவும் உரிமை உண்டு.இதையேதான் முதலாளித்துவமும் சொல்கிறது "இது என்னுடைய நிறுவனம் இங்கு யார் வேலை செய்யவேண்டுமென்பதை நான் தான் முடிவு செய்வேன்".என் மூலதனத்தில் நீ கேள்வி கேட்க உரிமை இல்லை.
..
------------------------------------------------------------------------------------------------
2020-ல் வல்லரசாக போகும் இந்தியாவின் தூண்களில் ஒருவனான சங்கர்,இந்தியா எதில் வல்லரசாகும் என்பதை தெள்ள தெளிவாக நிரூபித்திருக்கிறான்..சங்கர் வேலை செய்து வந்த ஆபீஸ் டைகர் என்ற அந்த நிறுவனத்தில் அய்ந்திலக்க சம்பளம் வாங்கும் வேலை அதிகம் செய்யாத பலரில் அவனும் ஒருவன்.
..
அவனுடைய நண்பர்கள் சொல்கிறார்கள்"எப்போதும் கலகலவென இருப்பான்,முகந்தெரியாத ஒருவனுக்கு ஆயிரக்கணக்கில் உதவி செய்தான்.அவனா இப்படி? கோபம் மனிதனை ஆட்டுவிக்கிறது.
..
அவர்களின் கேள்வியில் உயிரில்லாததை போலவே அவர்கள் சங்கரின் மேல் கொண்ட நட்பிலும் உயிரிருக்கவில்லை.
..
எங்கெல்ஸ்,காரல்மார்க்ஸ்-ன் நட்பு மக்கள் நலனைஅடிப்படையாக கொண்டது.கோடீசுவரனாகப் பிறந்திருந்தாலும் நட்பிற்காக,கொண்ட அரசியலுக்காக போராடினாரே எங்கெல்ஸ் அவருடைய நட்பை போன்றதல்ல இவர்களுடையது.அலுவலகத்தில் வேலை செய்வதால் என் நண்பன்,ஒன்றாக சாப்பிடுவதால் என் நண்பன்,வேலை முடிந்து நடந்து போகும் போது பேசிக்கொண்டு செல்வதால் என் நண்பன் தோசை,சாராயம் வாங்கித்தந்தால்என் நண்பன் இப்படி விபச்சார சந்தையாக மாற்றப்பட்ட இதனை நட்பு என்றே அழைக்கக்கூடாது.
..
ஒன்றரை வருடங்களாக நண்பர்களாயிருக்கிறார்களெனில் அவர்கள் எதைத்தான் பேசினார்கள்?பேசிக்கொண்டிருக்கிறார்கள்."பெண்களை கிண்டலடிப்பது,ஆபாசக்கதைகள் பேசுவது,தரக்குறைவாக நண்பர்களை பேசுவது"என்பதை தவிர வேறு எங்கேயும் போயிருக்காது.சொந்த அப்பனாகவேயிருந்தாலும் அரசியல் பேசினால் தான் அவரின் உண்மையன எண்ணத்தை புரிந்துகொள்ளமுடியும்.
..
சாதிவெறி பிடித்தமிருகத்தினால் கண்டிப்பாக நல்ல எண்ணங்களை கொண்டிருக்கமுடியது.அதற்கு தன் முகத்தை காட்ட வேண்டிய அவசியம் அலுவலகதத்தில் இல்லை,வாய்ப்பு கிட்டியிருந்தால் அங்கேயும் சரியாகவே பயன்படுத்தியிருப்பான்.சங்கரின் தனிப்பட்ட சூழ்நிலை காரணம் என கூற முடியாது.சாதி,மதக்கலவரங்களில் கொலை வெறியில் ஈடுபட்டபாசிஸ்டுகளுக்கும் சாதி,மதச்சூழல் தான் எனக்கூறி நியாயப்படுத்த முடியாது.
..
தனது அக்கா ஒடிப்போனதால் கோபம் வந்து கொலை செய்தானெனில்,தன் அக்காவின் தேவையை நிறைவேற்றாத அப்பன் மீதும்,மக்களின் வாழ்வை சீரழித்த இந்த அரசின் மேல் ஏன் கோபம் வரவில்லை.அவன் செய்த கொலைக்கு காரணம் கோபமல்ல ஆணாதிக்கம் தான்...............
..
சிலர் சொல்வது போல் கோபம் வந்தால் என்ன செய்வானென்பது தெரியாது என்பதையும் ஏற்க முடியாது,ஏனெனில் மனம் என்பது ஒரு உறுப்பல்ல.கை,கால்,கண் போன்றவை இப்படித்தான் செயல்படவேண்டும் என்ற செயல் முறையின் அடிப்படையை கொண்டது.மனம் என்பது மூளையின் சிந்திக்கும் பகுதி அதை நாம் தான் வளர்த்தெடுக்கவேண்டும்.சாலையில் பெண்ணைப்பார்த்து கிண்டலடிப்பதனாலும்,அலுவலகத்தில் மணிக்கணக்கில்வழிவதனாலும்.ஊர் மேய்வதாலும் மட்டும் ஆணாதிக்க சிந்தனை ஒழியது மாறாக ஊக்குவிக்கவேப்படும்.கை நிறைய சம்பளம் வாங்கினாலும் சங்கம் வைக்க அனுமதி இல்லாத ஐ.டி துறையில் அரசியல் பேசவேண்டிய வாய்ப்பு ஏற்படவில்லை.அதனால் தான் எதிரியை அறிக என்பதற்கு அர்த்தமும் புரியவில்லை.சாதி வெறி பிடித நாயுடன் நண்பர்களாயிருந்திருக்கிறோமென்ற குற்றவுணர்ச்சி ஏற்படவில்லை இனியும் ஏற்படபோவதில்லை தாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும் வரை.
..
------------------------------------------------------------------------------------------------
இந்த சமூகத்தில் நாகரீக வளர்ச்சி என்பது உழைக்கும் மக்களுக்கு எதிராகவும்,சாதீய பெண்ணடிமை கட்டுமானங்களை கொண்டதாகவே இருக்கிறது.சீர்திருத்தங்களால் மயிரளவும் பிளக்க முடியாத கட்டுமானத்தை வர்க்கப்போராட்டம் என்ற எரிமலையால் மட்டுமே உடைக்கமுடியும்.

Wednesday, November 21, 2007

நந்திகிராம் சி.பி.ஐ.(எம்) குண்டர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் !

Tuesday, November 20, 2007

கொள்ளைக்குக் காவல் ஏன்?


நல்ல மருத்துவ வசதிகளாகட்டும் அல்லது மருத்துவப் படிப்பாகட்டும், அவை என்றுமே காசு உள்ளவருக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது. சமீபத்தில் கூட சென்னைக்கு அருகில் கெளம்பாக்கத்தில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையுடன் புதிதாக ஒரு மருத்துவ நகரையே உருவாக்கியுள்ளனர் செட்டிநாட்டு ராஜ பரம்பரையினர். 100 மைல் பரபளவில் நவீன வசதிகளுடன் கூடிய இந்த நகரைக் கருணாநிதி திறந்து வைத்துள்ளார். இந்த மருத்துவ நகரை இவர்கள், ஏதோ ஏழைகளுக்குச் சேவை செய்வதற்காகக் கட்டியது போல கருணாநிதி பேசியுள்ளார்.

நோயாளிகளைக் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் கொள்ளையடிப்பதற்காகவும், மருத்துவம் படிக்க வரும் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையடித்துக் கோடி கோடியாகச் சம்பாரிக்கவுமே இந்த நகரை இவர்கள் கட்டியுள்ளனர். இதே மருத்துவக் கல்லூரி அண்ணாப் பல்கலைக் கழகம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுக் குறைந்த கட்டணத்தில் படிக்க வந்த மாணவகளைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் தாங்கள் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டுதான் கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் கல்வி வள்ளல் பட்டம் வேறு.


தரமான கல்வியையும், மருத்துவ வசதிகளையும் மக்களுக்கு அளிக்கும் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்ட இந்த அரசு அந்தப் பொறுப்பை இந்தக் கொள்ளைக் கும்பலிடம் கொடுத்துள்ளது. இதே மேடையில் கருணாநிதி பேசுகிறார், அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை அரசால் தர முடியாதாம் ஆதலால் இது போன்ற தனியார் நிறுவனங்கள் அந்தப் பொறுப்பை ஏற்க முன் வர வேண்டுமாம். பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகத் திருடனிடமே காவல் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

Monday, November 19, 2007

சாட்டை இங்கே ராமதாஸ் எங்கே ?

ராமதாஸ் ஆகிய நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம்:

1. நான் எந்த காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்!

2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும், எனது சொந்தச் செலவில்தான் வந்து போவேன். ஒரு கால கட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல் போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனேயொழிய, ஒரு போதும் மற்றவர் செலவில் வந்து போகமாட்டேன்!

3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால் செருப்புக்கூட சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது!

4.எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் - எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!

5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி. இந்த ராமதாஸ் விலை போகமாட்டாள் - இது சத்தியம்! என் தாய்மீது சத்தியம்!

இதையெல்லாம் உங்கள் டையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி, நான் நடந்தால் என்னை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து, சவுக்கால் அடியுங்கள்!


இந்த சத்தியங்களை மிஞ்சும் வகையில் ராமதாஸ், இன்று ஓட்டுப்பொறுக்கி கட்சியாகவும், குடும்ப அரசியல்வாதியாகவும் ஆனது மட்டுமல்ல, போராட்டம் என்ற பெயரில் பணம் கொழுக்கும் பெரிய NGO ஆக மாறி மக்களை ஏமாற்றி வருகிறார்.


இவரையும், இவரைப் போல ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு வருகின்ற விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடைகள் ஆனாலும் சரி இவர்கள் ஆரம்பகட்ட வாழ்க்கை , பேசிய பேச்சுக்களை என்ன வென்று சற்று புரட்டினாலும் தெரிந்து கொள்ள முடியும், இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் என.

Related:

Friday, November 9, 2007

ஆட்சியாளர்களை மாற்றினால் அரசை மாற்ற முடியுமா?

  • சிறப்பு பொருளாதார மண்டலம் நாட்டோடு 'வளர்ச்சி' க்கு என்று சொல்லி ஜெட் வேகத்தில் நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை சுட்டு கொல்லுகின்றனர்.

  • கோடிக்கணக்கான மக்கள் இறுதிக்கட்ட வாழ்வாதாரமாக தேர்ந்தெடுத்துக்கொண்ட சில்லறை வணிகத்தில் இன்று ரிலையண்ஸ், டாடா, வால்மார்ட் போன்ற பெரிய கம்பெனிகளை அனுமதித்து அவர்களை குப்பைத்தொட்டியில் வீசுவது போல வீசுகின்றனர்.
  • 5 லட்சம் கோடிக்கு அணுசக்தி ஒப்பந்தம் என்கிற வழியில் அடிமைசரத்துகளுடன் வெளிப்படையாக தெரியக் கூடிய 123 ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கின்றனர். இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்தாக வரும் இதனை கடந்த BJP ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று நிறைவேற்றக்கூடிய நிலையில் வந்துவிட்டார்கள்.
    அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' , பாதுகாப்பு உணர்வுடைய நாட்டிலேயே 2 1/2 சதவீதம் தான் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் உள்ளது, ஆனால் இவர்கள் நம்ம நாட்டில் இருக்கின்ற 3 சதவீதத்தை 7 ஆக மாற்ற போகின்றனராம். அதுவும் 2020-ல் தான் கிடைக்குமாம். ஆனால் நம் நாட்டிலே அதிகமாக உள்ள தோரியத்தை செறிவூட்டி மின்சாரம் கிடைக்க செய்வதில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இதில் வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் மின்சாரத்தை பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்று உடனடியாக 123 இல்லைன்னா நாடே இருட்டாகி விடும் என்கிற சூழ்நிலையும் இல்லை என்ற இரண்டு அம்சங்களையும் தவிர்த்து விட்டு கூட பார்ப்போம்.
    3 யை 7 ஆக மாத்துவதை அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' நாட்டில் செய்வதற்கே அந்நாட்டு மக்கள் ஒத்துக்குறது இல்லைங்கிற சூழ்நிலையில் அதை இந்தியா போன்ற ஏழை நாட்டில், பாதுக்காப்பு உணர்வுணா என்னவென்று தெரியாத நிலையில் ஆகப் பெரும்பாண்மை மக்களை வைத்து உள்ள நாட்டில் கொண்டு வரப்போறேன் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம். உலகம் முழுவதும் விலை போகாத இந்த உலைகள் மூலம் 5 லட்சம் கோடி கிடைக்கிறது என்றால் விடுவார்களா.
    இது வெறும் 3 T0 7 என்கின்ற விஷயத்துக்கும் மட்டும். ஆனால் இவர்கள் சொல்கின்ற இராணுவ ஒப்பந்தத்தை எடுத்து கொண்டால் அதில் இருக்கின்ற அடிமைச் சரத்துகளை பற்றி நினைத்துப்பார்க்க கூட முடியாத அளவுக்கு, வெளிப்படையாகவே இந்திய நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில் உருவாக்கி உள்ளார்கள்.

  • அடுத்து நாட்டுல 83 கோடி பேருக்கு தினமும் ரூ20 சம்பளம் என்கிற லட்சணத்தில் ஆக்கிபுட்டு இவர்கள் சொல்கின்ற GTP 9 சதவிதம், பங்குசந்தை 20,000 புள்ளிகளை தாண்டி பறக்கிறது போன்றவை. ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி என்கிற ஒருத்தன் 2 1/2 லட்சம் கோடியை கொள்ளையடிக்க செய்து உலகின் நம்பர் ஒன் பணக்காரனாக்க தாங்கள் செய்த சாதனையும் சொல்லி 'நாடு வளர்ச்சி' அடைகிறது என்கிறார்கள்


இப்ப மேலே சொல்லியிருக்கின்ற சிறப்பு பொருளாதார மண்டலம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை- தரகுமுதலாளிகளை அனுமதிப்பது, அமெரிக்க - இந்தியா இராணுவ ஒப்பந்தம் & 123 அக்ரிமெண்ட், தேசிய வளர்ச்சி என்கிற மோசடி பற்றி எல்லா ஆட்சியாளர்கள் ஓட்டுப்பொறுக்கிகள் என்ன கருதுகின்றனர். ஒன்று மின்சாரம் தேவை, வேலைவாய்ப்பு என்ற இரண்டு வார்த்தை கொண்டு சத்த்த்த்த்த்ததததததமாககககககக ஆதரவு குரல் அல்லது மெளனம் இது இரண்டும் தான் பதிலாக வருகிறது.இதனை கொண்டு தான் பதிவின் தலைப்பை விளக்க போகிறோம்.


ஆதரவு குரலில் இரண்டு வகையாக இருக்கின்றனர். ஒன்று ஆட்சியில் இருந்தவர்கள் -இருக்கின்றவர்களுடைய நேரடி ஆதரவு. மற்றொன்று கூட்டணி சுகத்தில் இருந்தவர்கள் - இருக்கின்றவர்களுடைய மறைமுக ஆதரவு. இந்த இரண்டு பேருக்கும் மேலே உள்ள விசயங்களை பற்றி தெட்ட தெளிவாக தெரியும். இதுவரை ஆட்சிக்கு வராதவர்களுக்கும் , விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடை அரசியல் வாதிகளுக்கும் மட்டும் தான் இதை பற்றி தெரியாது.


அப்ப எதிர்ப்பு என்பதை பேசாத, அரை-குறையாக பேசுவது மாதிரி, தெரியாது என்கிற இந்த லிஸ்டை விரிவாக பார்த்தா புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். இதுல முக்கியமாக ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டியது இதில் பேசாத, அரை-குறை பேசுவது மாதிரி இரண்டு பேருமே ஜான் பெர்க்கின்ஸ் (பொருளாதார அடியாள்) வரைக்கும் தெரிந்த ஆட்சியாளர்கள், பழம் தின்னவர்கள். என்ன வித்தியாசம் என்றால் கொட்டை போட்டவர், போடாதவர் என்பதுதான்.


முதல வருகிறவர்களை பார்ப்போம், பல்லாயிரக்கணக்கான கோடியினை இப்படி நாட்டை விற்க துணைபோய் சம்பாதித்த இவர்கள் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. எப்படி பேசுவார்கள் என்றால் நாடு வளர்ச்சியடைகிறது, போய்கொண்டு இருக்கிறது, இளைஞர்களே தியாகம் செய்ய வாருங்கள், ஒளிர்கிறது இந்தியா, தீவிரவாதத்தை நாங்கள் அடக்கியது போல இவர்கள் அடக்குவது இல்லை என்று ஆளே இல்லாத மேடையில் பேசுவது போல பேட்டி கொடுப்பார்கள். என்னா இப்ப இவர்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் 100% பிழைப்புவாதிகள்.

இந்த லிஸ்டில் IMF மண்மோகன், ENGLAND சோனியா, கலவர நாயகன் அத்வானி, எட்டப்பன் வாஜ்பாய், பன்னாட்டு நிறுவன வக்கில் சிதம்பரம் & சன், திமுக டிரஸ்ட் ஓனர் , அம்மா டிரஸ்ட் ஓனரம்மா , ஊழல் லாலு, ஹெரிடேஜ் சந்திரபாபு, இன்னும் காங்கிரஸ் அரச பரம்பரை, பா ஜ க அன் கோ வை சேர்ந்த ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.


அடுத்து இரண்டாவதாக முழுமையாக நாட்டை விற்று கொள்ளையடிக்காதவர்கள், கூட்டணி சுகத்தில் மட்டும், சிலர் சில மாநிலங்களில் ஆட்சி என இருக்கின்றவர்கள். இவர்களிலும் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. இவர்கள் எப்படி பேசுவார்கள் என்றால் "ஆகக அதெல்லாம் முடியாது", மாற்றுங்க இதை, தள்ளி வைங்க இதை, மக்களே இவர்கள் கொள்கையினை நாம் எதிர்த்து போராடனும், துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாதது, நக்சல் சதி, நாடு தழுவிய போராட்டம், நீதியின் குரல் ஒலிக்கட்டும், மக்கள் புரட்சி வெடிக்கட்டும், தமிழ்நாடு 2020 ( இந்தியா 2020 வீட்டுக்குப் போன பின்) என்றும் முக்கியமாக எங்களால் "இவர்கள் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றும் அடிக்கடி பேட்டியும். அறிவிப்புகளும் செய்வார்கள்.


என்னா இப்ப இவர்கள் கட்சியில் பிழைப்புவாதிகளும், சரியான கட்சி என நம்பி சிலரும் இருக்கின்றனர்.தெரியாதவர்களுக்கு தெரியவரும் போது சிலர் சரியான புரட்சிக்கர அரசியலுக்கு வருகின்றனர் அல்லது அதே பிழைப்புவாத அரசியலில் மூழ்கிவிடுகின்றனர்.


இந்த லிஸ்டில் போலிக் கம்யூனிஸ்டுகள், ராமதாஸ் குடும்பம், அரசியல் அசிங்கம் வைகோ,வாழும் அம்பேத்கார் திருமா, மாயாவதி மாமி............ போன்றவர்கள் இருக்கிறார்கள்.


அடுத்து மூன்றாவதாக பணம் மற்றும் சாதி அடிப்படையில் கட்சி ஆரம்பித்து இன்னும் ஆட்சிக்கே வராதவர்கள், கழிசடையாக இருந்து சொத்து சேர்த்ததை வைத்து கட்சி உருவாக்கி எம்.ஜி.ஆர் போன்ற பேண்டஸி அரசியலை மட்டும் வைத்தே இன்றும் மக்களை மடையர்களாக்க களத்தில் இறங்கி இருப்பவர்கள். மேலே இருக்கின்ற விஷயத்துக்கே போக மாட்டார்கள்.

இவர்கள் பேச்சு எப்படி இருக்கும் என்றால் 'ஜிபூம்பா' ஸ்டையில இந்தியாவை மாத்திடலாம் என்பதும், நாங்க வந்தா திருந்திடும் என்பதும் தான். எப்படி இப்படி கேணத்தனமாக யோசிக்கிறார்கள் என்கிறீர்களா, அடிப்படையே எதுவும் தெரியாது என்கிற காரணம்தான்.


இந்த லிஸ்டில் கார்த்திக் தேவர், கருப்பு காவி விஜயகாந்த், சமத்துவ நாடார் சரத்குமார், புதிய நீதிக் கட்சி சங்கம் போன்றவர்கள் இருக்கிறார்கள்.


இந்த மூன்று லிஸ்டில் இரண்டாவதாக நீதி, போராட்டம் என்கிறவர்கள் ஒரு கட்டத்தில் சொத்து பல்லாயிரத்தை தாண்டியதும் அதாவது ஆட்சியினை முழுமையாக அனுபவிச்ச பிறகு முதல் லிஸ்டில் இருக்கின்றவர்கள் மாதிரி மாறிவிடுகிறார்கள்.


மூன்றாவதாக எதுவும் விஷயம் தெரியாமல் இருந்தவர்கள் வளர்ச்சியடையந்த உடன் 'ஜிபூம்பா' இனி பலிக்காது என்று இரண்டாவது லிஸ்டில் இருக்கின்றவர்களுடைய நீதி, போராட்டம், தமிழ் என தங்கள் பாதையினை மாற்றி கொள்கின்றனர்.


இப்படி எல்லா ஓட்டுக் கட்சிகளையும் இந்த மூன்று லிஸ்டில் முழுவதும் வகைப்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். மக்களுக்கான எதையுமே இவர்கள் செய்வதும் இல்லை, செய்யவும் முடியாது. ஏனென்றால் இந்த அமைப்பே தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த லிஸ்டில் உள்ள யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் செயல்படுவது இந்தப் தரகு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்குத்தான்.


அப்ப இந்த அமைப்பில் ஆட்சியாளர்களை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. தரகு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் இருக்கக்கூடிய இந்த அமைப்பையே தூக்கியெரிய வேண்டும், அப்போதுதான் பெரும்பான்மையான மக்களின் நலன்கொண்ட ஒரு அரசை அமைக்கமுடியும்.

Wednesday, November 7, 2007

"புரட்சியைக் காக்க உயிர் வழங்கிய ருஷ்யாவின் தொழிலாளர்களுக்கும் குடியானவர்களுக்கும்"



"விதியை முடிக்கும் போரில் வீழ்ந்தீர் நீர்
மக்கள் விடுதலைக்காக, மக்கள் மானத்திற்காக.
உயிர்களையும் அன்புக்குரியவை அனைத்தையும் வழங்கினீர்.

நீங்கள் துறந்த உயிரின் மதிக்கப் பெறும் காலம் வரும்.
அந்தக் காலம் நெருங்கி விட்டது:
கொடுங்கோண்மை வீழும், மக்கள் எழுவர்.
மாண்பும் விடுதலையும் பெற்று.

செல்க சோதரரே, சான்ற வழியைத் தேர்ந்தீர் நீர்.
உங்கள் கல்லறையில் சபதம் ஏற்கிறோம்,
விடுதலைக்காகவும்
மக்களின் இன்பத்துக்காகவும்
போர் புரிவோம் என்று."


இணைப்பு