Thursday, September 27, 2007

பெரும்பான்மையினரின் நம்பிக்கையும் பாசிசப் பன்றிகளின் பிதற்றலும் !!

இன்று காலை ஆரியர்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவியும்,பார்ப்பன பாசிசத்தின் தமிழ்நாட்டின் பிரதிநிதியுமான ஜெயலலிதா வெளியீட்டுள்ள ஒரு அறிக்கையிலிருந்து..

"இன்றைக்கு தமிழ்நாட்டில் தீண்டாமையை எதிர்த்து சிலர் பேசி வருகின்றனர். தீண்டாமை என்பது இறைவனால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு கொடை. அதை எதிர்ப்பது இறைவன் வகுத்தளித்த சநாதன தர்மத்தையே எதிர்ப்பதாகும். பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஸ்ரீ ராமனின் ஆட்சியில் இந்த சநாதன தர்மத்தின் கீழ் மக்கள் எவ்வளவு சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் பல கோடி சாதி இந்துக்களின் நம்பிக்கை இந்தத் தீண்டாமை. இவர்கள் எப்படி ராமர் பாலத்தை ஏற்க மறுக்கிறார்களோ அதே போல தீண்டாமையையும் ஏற்க மறுக்கிறார்கள். இது இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ள எங்களைப் போன்ற அனைவரது நெஞ்சத்தையும் புண்படுத்துகிறது. இவர்களுக்கு இதில் நம்பிக்கை இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம் அது அவர்களது சொந்த விஷயம். ஆனால் பெரும்பாலான இந்துக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவது தவறு."

ராமன் பாலத்தைக் காக்க ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் அவர் வெளியிட நினைத்து மறந்து போன ஒரு பகுதியை நாமே வெளியிட்டுள்ளோம்.

தனது நம்பிக்கையைப் பெரும்பாலானவர்களின் மீது திணிக்கும் பார்ப்பனியத்தின் அதே பாசிசத் தன்மையைத் தனது அறிக்கையில் கக்கியுள்ளார் இந்தப் பாப்பாத்தி. இவரும், இவர் சார்ந்த பார்ப்பனர் சங்கமான ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கூட்டமும், இல்லாத ராமனுக்கும் கற்பனைப் பாலத்திற்கும் பெங்களூரில் இரண்டு அப்பாவிகளைக் கொன்றுள்ளனர். இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டம் மக்களிடையே உள்ள சாதாரண மத நம்பிக்கையை, மதவெறியாகத் தூண்டி விட்டு அவர்களை மோதவிட்டு இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
.
ஒரு பகுதியில் அரசியல் ரீதியில் காலூண்ற இவர்களுக்குத் தெறிந்த ஒரே வழிமுறை கலவரத்தைத் தூண்டுவது. எப்போ தருணம் வரும் எவனைக் கொல்லலாம், எப்படி கலவரத்தைத் தூண்டலாம் என சர்வ சதா காலமும் காத்துக் கிடக்கின்றனர். இதனால் தான் ராமனைப் பற்றிய பிரச்சனை வந்தவுடன் ஏன் எதற்கு என்று கூடக் கேட்காமல் தாக்குதல் தொடுக்கத் தொடங்கி விட்டனர். ராமாயணம் என்ற கதையில் ராமன் என்ற கற்பனைப் பாத்திரம் மோண்ட,பேண்ட இடங்களையெல்லாம் தோண்டியெடுத்து, இந்து நம்பிக்கை என்ற பெயரில் அட்டூளியமும், அராஜகமும் செய்யும் இவர்கள் அதனை எப்போதும் கலவரமாக்கவே முயற்சி செய்துள்ளனர்.

மும்பையில் தமிழர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிப் பல்லாயிரம் தமிழர்களைத் துரத்தியடித்தனர். பின்னர் பாபர் மசூதி இடிப்பின் போதும் இப்படித்தான் பெரும்பாண்மையினரின் நம்பிக்கை என்று கூறி முஸ்லீம்களைக் கொன்றனர். குஜராத்தில் கூட்டம் கூட்டமாகச் சென்று முஸ்லீம்களைக் கொல்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்வது, குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றிக் கொல்வது என சிறிதுகூட மனிதாபிமானமே இல்லாத வானரப்படையைக் கொண்டு மக்களை மிரட்டியே ஆட்சியைப் பிடித்தான் நரேந்திர மோடி எனும் நரபலிச் சாமியார்.
.
இங்கு தமிழகத்தில், மண்டைக்காடு கலவரம், கோவைக் கலவரம் என மதவெறியைப் பரப்பி, கலவரங்களை உருவாக்கி பலரது உயிரைக் குடித்துள்ளனர். இவர்கள் இதுவரை தங்களது வளர்ச்சியை சிறுபான்மையினரின், தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தால்தான் பதிவு செய்துள்ளனர்.

இதே பெரும்பாண்மையினரின் நம்பிக்கையின் பெயரால்தான் பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான் ஹிட்லர். அந்தப் பாசிசப் பேயின் பேரன், பேர்த்திதான் இந்த அத்வானியும், ஜெயலலிதாவும், விஜயகாந்தும். பெரும்பாண்மை பெரும்பாண்மை என்று இவர்கள் கத்துவதெல்லாம் தங்களது பாசிசத்தை மறைத்து, குற்றத்தை மக்கள் மீது சுமத்துவதற்க்கே.

இவர்களுக்கு ராமன் மேல் பக்தியுமில்லை அவன் கட்டியதாக இவர்கள் கூறும் பாலத்தின் மீது அக்கறையும் இல்லை. ஆனால் இவர்களுக்கு இருப்பதெல்லாம் ஒரே கனவு அது தமிழகத்தை குஜராத்தாக மாற்றும் பாசிசக் கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர் போவதைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையில்லை. பன்னாட்டு முதலாளிகள் நமது நாட்டில் அடித்த கொள்ளையைச் சுலபமாக வெளியே கொண்டுபோகத் தங்க நாற்கரச் சாலையையும், சேதுக் கால்வாய்த்திட்டத்தையும் ஆரம்பித்ததே இந்த ஜெயா, அத்வானி அயோக்கியக் கும்பல்தான். அதைவிட்டு இன்று ஏதோ இந்துக்களின் நம்பிக்கையே தகர்ந்தது என்று தான் வகுத்த திட்டத்தைத் தானே எதிர்த்து ஊரை ஏமாற்றுகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக தினமலர், தினமணி உட்பட அனைத்து பத்திரிக்கைகளும் காவியிலேயே எழுதுகின்றனர். காங்கிரஸ், வை.கோ, விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைத்துக் கட்சியினரும் காவிகறையுடன் வலம்வருகின்றனர். மொத்ததில் தமிழகம் முழுமைக்கும் காவியடிக்க வருகிறது ஒரு வானரக் கூட்டம்.
Related:
..

1 comment:

மாசிலா said...

//இதே பெரும்பாண்மையினரின் நம்பிக்கையின் பெயரால்தான் பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான் ஹிட்லர். அந்தப் பாசிசப் பேயின் பேரன், பேர்த்திதான் இந்த அத்வானியும், ஜெயலலிதாவும், விஜயகாந்தும். பெரும்பாண்மை பெரும்பாண்மை என்று இவர்கள் கத்துவதெல்லாம் தங்களது பாசிசத்தை மறைத்து, குற்றத்தை மக்கள் மீது சுமத்துவதற்க்கே.//

அந்த இட்லர் மடையனுக்கு ஏற்பட்ட கதிதான் இந்த மடையர்களுக்கு காத்திருக்கிறது. அழிவை தேடி போகிறவர்களை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கவேண்டும். இதே இட்லர் படை ரஷ்யாவில் கடுங்குளிர் சாவின் வலையில் அகப்பட்டு சிதைந்தது போல்!

பதிவின் கருத்திற்கு நன்றி.

இணைப்பு