Monday, October 8, 2007

'தவறு செய்த தொழிலாளர்களுக்கு கருணை காட்ட வேண்டாம்' -- உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

குஜராத் அம்புஜா சிமெண்ட் கம்பெனியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கச் சொல்லி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்தான் இப்படிக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு (சும்மா பேச்சுக்குக்காவது) என்பதை கேலிக்குள்ளாக்குகிறது இந்தத் தீர்ப்பு. இந்த ஜனநாயக நாட்டில் தான், பெரும்பாண்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கையான இடஒதுக்கீடு, மக்கள்தொகையில் மிகவும் அற்பமான பார்ப்பன மேல்சாதியர்களின் விருப்பத்திற்கிணங்க தடை செய்யப்பட்டது. இந்த ஜனநாயக நாட்டில் தான், பெரும்பாண்மைத் தமிழர்களின் ஆதரவோடு நடைபெற்ற வேலைநிறுத்தம் தடை செய்யப்பட்டது.

பல லட்சம் டில்லி சிறு வணிகர்களைக் காலி செய்ய வைத்துத் தனது மகன்களுக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டித் தர ஒரு நயவஞ்சக உத்தரவைப் பிறப்பித்து அதனை நிறைவேற்ற நாட்டின் இராணுவத்தையே ஒரு நீதிபதி பயன்படுத்தியதும் இங்கேதான்.

பல லட்சம் வழக்குகள் கிடப்பில் கிடக்க, பல்லாயிரம் மக்கள் குற்றாவாளிகளா இல்லையா என்றே தெரியாமல் வருடக் கணக்கில் சிறையில் கிடக்க, கோடீஸ்வரர்களுக்காகவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்காகவும், உயர் ஜாதியினருக்காகவும் விடுமுறை நாட்களில், நள்ளிரவில் கூட கடைதிறந்துத் தீர்ப்பை வியாபாரம் செய்வதும் இங்கேதான்.
இது மட்டுமல்ல கூலி உயர்வு கேட்டுப் போராடினால் சிறை, கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கேட்டுப் போராடினால் சிறை, வேலையை நிரந்தரமாக்கக் கோரினால் சிறை எனப் போராடுபவர்களை, தொழிலாளர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை, மக்கள்தொகையில் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களைச் சட்டப்பூர்வமாக நசுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதும் இங்கேதான்.

இன்றைக்குத் தொழிலாளர்களை மனிதனாகக் கூட மதிக்காமல் ஒரு பாசிசத் தீர்ப்பை வழங்கிய இதே நீதி நீதிமன்றம் தான், பாசிச ஜெயலலிதா தனது மனசாட்சிப் படி தண்டனை வழங்கிக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.

பதவியிடம் தாழ்ந்து, பணத்திடம் தாழ்ந்து, உயர் ஜாதித் திமிரிடம் தாழ்ந்து, ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களிடம் மேலும் தாழ்ந்து, சொறி நாயினும் கேவலமாக நாறிய போதும், உழைக்கும் மக்கள் மீது மட்டும் வெறிநாயாகப் பாய்கிறது இதன் சட்டங்கள்.

இதன் அக்கிரமங்களைப் பொறுத்துக் கொண்டே போனால், மக்களின் அந்தப் பொறுமையை மேலும் சோதிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு, பார்ப்பன, உயர் ஜாதிகளுக்குத் தான் ஓர் அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

இன்றைக்குத் தொழிலாளர்களுக்கு கருணை காட்ட வேண்டாம் என்று தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளட்டும். நாளைக்கு இவர்கள் தொழிலாளர்களின் கருணைக்காக ஏங்க வேண்டிய சூழ்நிலை வரும்போது இவர்கள் வழங்கிய தீர்ப்புகள் இவர்களுக்கே எதிராகத் திரும்பும் என்பதுதான் அது.

Sunday, October 7, 2007

"நாட்டைக் காவியாக்குவதும் காலனியாக்குவதுமே எங்கள் கொள்கை"

Related:
..
உயர் நீதி மன்றம் அல்ல வேதாந்தி மன்றம் !
இராமன்: தேசிய நாயகனா தேசிய வில்லனா?
..

Tuesday, October 2, 2007

தாமரை டிவியின் "நேருக்கு நேர்" நிகழ்ச்சி - கலந்து கொள்பவர்கள்: ராமன் (அயோத்தி,உ.பி.) மற்றும் கிருஷ்ணன்(மதுரா,உ.பி.)

கிருஷ்ணன்: அடடே ராமனா! என்னப்பா இது..கப்பலே கவுந்திட்ட மாதிரி கன்னத்துல கைவச்சிக்கிட்டு உக்காந்திட்டே..

ராமன்: ஒனக்கு விசயமே தெரியாதா? நான் கட்டின பாலத்தை இடிக்கப்போறாங்களாம். பின்னே கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? சொல்லு.

கிருஷ்ணன்: நீ எப்ப பாலம் கட்டினே? கொஞ்சம் வெவரமா சொல்லு.

ராமன்: சீதையை நான் மீட்டு வருவதற்காக பாலம் கட்டினேனே!

கிருஷ்ணன்: என்னது? சீதையை மீட்கவா? ஒன் பொண்டாட்டி எங்கே போனா?

ராமன்: எப்பா! அது இப்போ பிரச்சினை இல்லை..பாலத்தை ஒடைக்கப் போறதுதான் பிரச்சினை..அதப்பத்தி பேசு.

கிருஷ்ணன்: அது கிடக்கட்டும் கழுதை.. சொல்லுப்பா..ஒன் பொண்டாட்டி எங்க போயிட்டா?

ராமன்: சும்மா அதையே நோண்டிக்கிட்டிருக்காத..ராவணன் கூடத்தான் போனாள். கடல் தாண்டி இலங்கையிலே இருந்த அவளை மீட்டுவரத்தான் பாலம் கட்டினேன்.

கிருஷ்ணன்: சரி..போவுதுன்னு விட்டுத்தள்ளியிருக்க வேண்டியதுதானே! என்ன எளவுக்குப் போய் கூட்டிட்டு வரணும்? சரி.. நீ அங்கே போறதுக்கு முன்னாடி அங்க பாலம் இருந்திருக்காதே? அப்பறம் எப்பிடி சீதையும் ராவணனும் இலங்கைக்குப் போனாங்க?

ராமன்: ராவணன் எல்லாம் அசுரனாச்சே..அவன் சீதையை இடுப்புல வச்சிக்கிட்டு பறந்து போயிட்டான்.

கிருஷ்ணன்: ஓகோ..அப்படியா! உன்கிட்டதான் 'எல்லை தாண்டிய பயங்கரவாதி' ஒருத்தன் கெடந்தானே..அனுமான். அவனைப் பறந்து போய் சீதையைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமுல்ல...

ராமன்: ஏனோ அப்ப எனக்கு இது தெரியல.. அதான் பாலம் கட்டி போக வேண்டியதாச்சுது. இப்ப பாரு.. அந்தப் பாலத்தையும் இடிக்கப்போறாங்களாம்.
கிருஷ்ணன்: பாலம் இப்போ அங்க இருக்கா?

ராமன்: இல்ல.. அது தண்ணிக்குள்ள முங்கிருச்சு..

கிருஷ்ணன்: என்னய்யா நீ.. நீ கட்டுன பொண்டாட்டியோட ஒழுங்கா வாழ முடியல...நீ கட்டின பாலம் தண்ணில போயிருச்சு..ஒன் கோயில சாதாரண மன்னன் பாபரு இடிச்சிட்டான்... அப்ப என்ன மயித்துல நீ அவதாரம்னு சொல்றானுங்கன்னும் புரியல்...கழுத கிடக்கட்டும்... பாலம்தான் தண்ணில முங்கிடுச்சே...விட்டுத்தொலைக்க வேண்டியதுதானே.. அதனால எதாச்சும் பிரயோசனம் இருக்கா?

ராமன்: அது இருந்ததாலேதான் பல முனிவர்களும் ரிஷிகளும் அது மேல 15ஆம் நூற்றாண்டு வரைக்கும் இலங்கைக்குப் போனாங்க..அப்புறம் தண்ணில முங்கினாலும்...இன்னைக்கு அதை வச்சுதான் பிஜேபின்னு ஒரு கட்சி உயிர் பிழைக்க வேண்டிருக்கு..

கிருஷ்ணன்: கூமுட்ட மாதிரி உளராதே...15ஆம் நூற்றாண்டு வரைக்கும் அது இருந்துச்சுன்னா..என்னத்துக்குடா ராஜராஜ சோழன் கப்பற்படையை ஏவி ஈழத்தைப் பிடிச்சான்? பொடி நடையாப் போயி ராவி இருக்கலாமே!

ராமன்: அப்பிடில்லாம் நாஸ்திகமாப் பேசாதே.. அது இந்துக்களோட நம்பிக்கை!
கிருஷ்ணன்: என்னது இந்துவா? அப்பிடின்னா என்னது? நம்ம 2 பேரோட அவதாரத்திலெ இந்த பேரை எங்கயாச்சும் கேட்டிருக்கயா?

ராமன்: அதெல்லாம் தெரியாது..வெள்ளைக்காரன் குடுத்த பேரு அது.

கிருஷ்ணன்: வெள்ளைக்காரனா? யாரு..வெள்ளையா இருப்பானே அந்தப் பலராமனா?

ராமன்: அவன் இல்ல..இது நம்மளல்லாம் விட பலசாலி இங்கிலாந்துக் காரன்..
..
கிருஷ்ணன்: என்ன இழவோ கிடக்கட்டும்...விசயத்துக்கு வருவோம்..தண்ணில முங்கின பாலத்தை இடிச்சா என்ன? பேர்த்தா என்ன?

ராமன்: அது எப்பிடி? அங்கே 1000 வருசத்துக்கு பயன்படும் தோரியம் இருக்குதே!

கிருஷ்ணன்: ஓகோ..அப்பிடின்னா பேர்த்து தோரியத்த எடுத்தாலாவது பிரயோசனப்படுமே!

ராமன்: இல்ல..இல்ல.. நோண்டுனா தோரியம் கரஞ்சிடும்..

கிருஷ்ணன்: லூசு மாதிரி பேசாதே...கரஞ்சு போக அது என்ன கருப்பட்டி மிட்டாயா? அல்லது...பேர்க்காமலே தோரியத்தை நோண்டி எடுக்க அது என்ன புளியங்கொட்டையா? எந்தக் கூமுட்டப் பயலுக இப்பிடி ஒன்கிட்ட சொன்னாங்க?

ராமன்: விஸ்வ ஹிந்து பரிஷத் ஆட்கதான் சொல்றாங்க! தோரியத்தை நாம் எடுத்து வல்லரசாகிடக்கூடாதுன்னு அமெரிக்கா சதி பண்ணிதான் பாலத்தை ஒடைக்க சதி பண்ணுதுன்னு போன வாரம் சொல்லிருக்காங்க!

கிருஷ்ணன்: நீயும் அந்தப் பரதேசிப்பயலுக சொல்றத நம்பிக்கிட்டுக் கிடக்கே! ஏண்டா..அமெரிக்காவுல இருந்து டாலர் டாலரா நன்கொடை வாங்குற நாதாரிங்க 'அமெரிக்க எதிர்ப்பு' வேசம் கெட்டுறானுங்கன்னா அத நீயும் நம்புற..ஒன்னயும் போயி எங்க கூட அவதாரத்தில சேத்துருக்காங்களே அவங்களச் சொல்லணும்! ஆமா! தனுஷ்கோடியில இருந்து மன்னார் வரை பாலம் போட்டீங்களே! மண்டபத்தில இருந்து ராமேஸ்வரம் போறதுக்கு என்ன பண்ணுனீங்க?

அது கிடக்கட்டும்! உன்னை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன்.. பாலம் கட்ட ராமநாதபுரம் ஜில்லாவுக்கு போனப்போ அங்கே தமிழ் பேசுனவுங்களோட நீ எப்படி பேச முடிஞ்சுது? ஒனக்கு சமஸ்கிருதம் மட்டுந்தானே தெரியும்? யார் ஒனக்கு துவிபாஷி வேலை பார்த்தாங்க? அந்த ஜில்லாவுலே எங்கேயும் பாறை கிடையாதே..பாலம் கட்ட என்னடா பண்ணுனீங்க?

ராமன்: ??

கிருஷ்ணன்: பாலத்தக் கட்டி எத்தன வருசமாகுது?

ராமன்: பதினேழரை லட்சம் வருசமாகுது..

கிருஷ்ணன்: அப்படீன்னு யாரு சொன்னா?

ராமன்: ஜெயலலிதா..சே..சே..வால்மீகி..

கிருஷ்ணன்: ஆமா..5000 வருசத்துக்கு முன்னாடிதான் இந்தியாவிலேர்ந்து இலங்கைக்கு நடந்தே போக முடியுமே...கடல் மட்டம் தாழ்ந்துதானே கிடந்தது...அப்பறம் ஏன் பாலம் கட்டுனீங்க? நடந்தே போக முடியுற இடத்துக்கு பாலம் கட்டுனீன்னா ஒன்னை 'கூமுட்டப் பயல்'னு சொல்லாம வேறென்ன சொல்ல?

ராமன்: என்னைய மட்டும் இவ்வளவு நோண்டுறீயே! கண்ணகி மட்டும் உண்மையா? அவ மதுரைய எரிச்சது உண்மையா?

கிருஷ்ணன்: சோ ராமசாமி மாதிரி முட்டாத்தனமா உளராதே...யாராச்சும் கண்ணகி கக்கூசு கட்டுனா..வள்ளுவரு காலேஜ் கட்டுனாருன்னு சொன்னாங்களா? உன்னையத்தானே வச்சு குரங்குப்பயலுக ஊளை விடுராங்க... ஒன்னையப் பத்திதானடா பேசணும்...

ஒண்ணு சொல்றேன் கவனமாக் கேட்டுக்கோ...கூமுட்டப்பய ராமனே!

தமிழகத்திலே வாலாட்டாதேன்னு உன் வானரப்படையைச் சொல்லிவை! இல்லைன்னா ஒட்ட நறுக்கிடுவாக!

முக்கியமா வள் வள்னு குரைச்சிக்கிட்டுருக்கிற பிஜேபி காரனுக கிட்ட சொல்லிடு..."தமிழ்நாட்டுல போய் என்னத்தையாவது பண்ணிக் கழுதப்பெரட்டு பண்ணலாம்னு நினைக்க வேண்டாமின்னு"...

ஏன்னா அங்க, உன்னைய மாதிரி ஆள்களை ஒரு மனுசனாவே மதிக்கறதில்லங்கத மொதல்ல தெரிஞ்சுக்கோ... 'பிச்சை எடுக்குதாம் பெருமாளு'..'அதப் புடுங்குதாம் அனுமாரு'ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? அதில இருந்தே தெரியுதா உனக்கு என்ன மரியாதைய தமிழ்மக்கள் குடுக்கிறாங்கன்னு..

அதனால ரொம்ப வாலாட்டுனா..."அந்தா ஒரு கை இல்லாம போறான் பாரு..அவன்தான் இந்து முன்னணி"..."முன்னம்பல் பூரா பேந்து போகிறான் பாரு..அவன்தான் பிஜேபி".."ஒத்தக்கால வச்சிக்கிட்டு நொண்டுறானே..அவன்தான் விஷ்வ ஹிந்து பரிஷத்'னு சொல்லப் போறாங்க... உங்களில் ஊனமுற்றோர் ஜனத்தொகை தமிழ் நாட்டிலே அதிகமாகப் போகுது..அது மட்டும் நிச்சயம்..

அதுக்கு அப்புறம் உன்னோட விருப்பம்.. நான் சொல்றத சொல்லிட்டேன்..

(இந்த உரையாடலைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடந்த கும்மாங்குத்துக்களை தாமரை டிவி சென்சார் செய்துவிட்டதால் மேல் விவரங்களை அறியமுடியவில்லை)

இணைப்பு