Tuesday, September 25, 2007

ஆப்பசைத்து வாலறுந்த குரங்குகள்

உயிரினங்களை வைத்துச் சொல்லப் பட்ட கதைகளில் குரங்குக் கதைகள் பிரபலம். சற்று முட்டாள்தனமானதும், அதே சமயம் விஷமத்தனமானதுமான இந்தக் குரங்குகள் தங்களது முட்டாள்தனத்தினால் அப்பாவிகள் போன்று தோன்றினாலும், சற்று ஏமாந்தால் ஆளையே தீர்த்துக்கட்டும் அளவுக்கு பயங்கரமானவை. தன்னைவிட பலம்வாய்ந்த மிருகங்களிடம் வாலைக் குழைத்துக் கும்பிடுபோடும் அதே சமயம் பலகீனமானவர்களிடம் அதிக்களம் செய்யும். இத்தகைய குரங்குகளை நாம் காடுகளிலும், மரங்களிலும் தேட வேண்டியதில்லை இவை ஊருக்குள்ளேயே காவிக்கொடிக்குக் கீழ் கொட்டம்மடித்துக் கொண்டிருக்கும்.

நாமும் பல குரங்குக் கதைகளைக் கேட்டும், படித்தும் உள்ளோம். குஜராத்தில் குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு, அயோத்தியில் அயோக்கியத்தனம் செய்த குரங்கு, அமெரிக்க தொப்பிக்காரனிடம் ஏமாந்த குரங்கு,பெரியார் பிராண்ட் இஞ்சியைத் தின்ற குரங்கு எனப் பல கதைகளாக நீளும் இப்பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளதுதான் பகுத்தறிவு ஆப்பசைத்து வாலறுந்த குரங்கு கதை.

பரிணாம வளர்ச்சியில் சற்று பின்தங்கிய ஒரு இந்துத்வா குரங்குக் கூட்டம், வடமாநிலங்களில் தனது சேட்டைகளின் மூலம் மக்களைத் துன்புறுத்தி வந்தது. அது போதாதென்று தமிழகத்தையும் குறிவைத்துக் களத்தில் இறங்கின. இங்கே உள்ள ஜெயா குரங்கு, விஜயகாந்த் குரங்கு, சரத் குரங்கு போன்ற நட்புக் கூட்டங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, இலங்கைக்கும் ராமேஸ்வரத்திற்க்கும் பாலமிருக்கிறது, பாலமிருக்கிறது என்று கூறி, மூடநம்பிக்கையைப் பிளந்து பெரியார் அடித்த பகுத்தறிவு ஆப்பை அசைத்துப் பார்த்தது. ஆனால் இதன் மூலம் தனது வாலே துண்டாகும் என்று பாவம் அந்தக் குரங்குக்குத் தெரியவில்லை. வெறும் குச்சியைத் தூக்கினாலே ஓட்டம் பிடிக்கும் இந்தக் குரங்குக் கூட்டத்திற்க்குத் தலையைக் கொய்வதாய்ச் சவடால் வேறு. இந்நிலையில், தான் அசைத்த ஆப்பு தனது வாலைக் காவு வாங்கிவிட்டதை எண்ணி இப்போது புலம்பித் திரிகின்றது.

இந்தக் குரங்குகள் எத்தனை முறை சூடுபட்டாலும் புத்திவராமல் திரும்பத் திரும்ப வந்து அடிபட்டு ஓடுகின்றன. புதிது புதிதாக ஏதாவதொன்றைக் கையில் பிடித்தபடி எப்படியாவது தமிழகத்தில் அழிச்சாட்டியம் பன்ன வேண்டும் என்று முயன்றுகொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் இவற்றை விரட்டினால் திரும்பவந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன, இந்த இம்சையை ஒழிக்க இந்தக் குரங்குகளைக் கூண்டிலடைத்து, இல்லாத பாலத்தைத் தரிசிக்கக் கடலுக்குப் புனித யாத்திரை அனுப்புவதொன்றுதான் வழி. அதைத் தான் நாம் செய்ய வேண்டும், அதுதான் பகுத்தறிவுள்ள ஒரு மனிதனின் செயல்.
Related Articles:

No comments:

இணைப்பு